"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, December 22, 2012

வீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும்.
அழகுமுத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது. ``மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ``தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, யாதவ சமூகம் பெருமை தேடிக் கொண்டது.
 
மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிவந்த தகவல்

மாவீரன் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாறு உலகறிய பல்வேறு தரப்பினர் உதவி இருக்கின்றார்கள். அதைப்பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1959ஆம் ஆண்டு பந்துலு இயக்கிய வீபாண்டிய கட்டபொம்மன் என்கிற திரைப்படம் வெளிவந்தது. அப்போது இந்த திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்த பாத்திரமான எட்டப்பன் பிறந்த கிராமமான எட்டயபுரம் பற்றி மிகவும் இழிவாக காட்டப்பட்டது. இதை கண்டு மனம் வருந்திய எட்டயபுரம் அரசன் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து எட்டயபுரம் சமஸ்தானம் அந்த படத்தில் மிகவும் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாகவும் அதை சீர் செய்யும் வகையில் தமிழறிஞர் அனைவரும் அந்த களங்கத்தை நீக்க உதவுமாறு கோரினார். இதனையடுத்து தமிழறிஞர்கள் எட்டயபுரம் சமஸ்தான புத்தக சாலையை படித்து ஆராய தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கோரினர். இதை ஏற்ற அரசர், புத்தக சாலையை ஆராய அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் சாமி தீட்சிதர் என்பவர் 1878ஆம் ஆண்டு எழுதி வம்சிமணி தீபிகை என்கிற புத்தகமும் டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and present என்கிற புக்கங்களில் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற அரசனுக்கு மாவீரன் அழகுமுத்துக்கோன் தளபதியாக இருந்ததாகவும் அழகுமுத்துக்கோன் இல்லை என்றால் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் இல்லை என்று அந்த புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் நடந்த கால கட்டம் 1750என்று கருதப்படுகிறது. இந்த குறிப்புகள் பின்னர் தினமனி நாளிதழில் கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்ற பகுதியில் வெளி வந்தது. இதேபோல்,1976 ஆம் ஆண்டு எட்டயபுரம் வரலாறு என்கிற புத்தகத்தில் 65 பக்கம் வீரன் அழகுமுத்துக்கோன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை யாதவா கல்லூரி பேராசிரியர் ‎ஷாஜகான் கனி எட்டயபுரம் அரண்மனைக்கு சென்றிருந்தபோது, அங்கு குழந்தைகளுக்கு ஆங்கில பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், கட்டாலங்குளம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அதை கேட்ட பேராசிரியர், வீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பிடமான கட்டாலங்குளம் பற்றி விசாரித்தார். அப்போது, இந்த ஆசிரியர் இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வம்சம் இருப்பதாகவும் அவர் வாரிசாக திரு.சிவத்தசாமி என்பவர் அங்கு வசித்து வருவதாகவும் கூறினார். இத்தகைவலை அறிந்த பேராசிரியர் உடனே கட்டாலங்குளம் சென்று திரு. சிவத்தசாமியை சந்தித்து அழகுமுத்துக்கோன் வரலாறை அறிந்து கொண்டார்.
அழகுமுத்து கோன் நேரடி
 வாரிசு திரு செவத்தச்சாமி 
அவர்கள்

இச்சமயத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் புகழ் பல இடங்களில் பரவத் தொடங்கியது. இந்நிலையில், பல ஜாதியினர் அவரை சொந்தம் கொண்டாட தொடங்கினர். மாவீரன் அழகுமுத்துக்கோன் பெயரில், சில இடங்களில் சேர்வைக்காரன் என்கிற அடைமொழி குறிப்பிடப்படுவதால் அவர் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்று ஓர் இனத்தவர் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். வேர்வைக்காரன் என்பது ஜாதி பெயர் இல்லை என்றும் சேர்வைக்கான என்ற பெயர் ஜாதி பட்டியலில் குறிப்பிடப்படவில்லை.சேர்வைக்காரன் என்பது ஒரு பட்டம். திறமையான படைத் தளபதிகளுக்கு கொடுக்கப்படுவது சேர்வை என்கிற பட்டம் என்று வரலாற்று பேராசிரியர் தேவஆசிர்வாதம் ஓர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். படையில், சேர்மானம்மான திட்டம் வகுப்பவன் சேர்வைக்காரன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேர்வைக்காரன் பட்டம் பெற போட்டிகள் உள்ளன. அவற்றில் வாள்வீச்சு, காளை அடக்குதல் ,மல்யுத்தம் போன்ற பல போட்டிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்றால்தான் சேர்வைக்காரன் என்ற பட்டம் வழங்கப்படும். இதுபோல் பல போட்டிகளில் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் வெற்றி பெற்று திருமலைநாயக்கர் அரசரிடம் சேர்வை என்கிற பட்டம் பெற்றார்.

அதேபோல், மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது. இதுவே அவர் யாதவ குலத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்று குறிப்பிடலாம். ஏனெனறால், ஐயங்கார்கள், மாதுவர்கள், நாயுடுகள், யாதவர்கள் மட்டுமே தங்கள் பெயரிலும் கோத்தரத்திலும் வைணவ சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பார்கள். ஆகையால், மாவீரன் அழகுமுத்துக்கோன், யாதவர் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

அழகுமுத்து கோன் சிலை:

அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் அவர்களின் முயர்ச்சியில் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் முன்பு 1996 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் வீரன் அழ்குமுத்து கோன் சிலையை திறந்துவைத்தார்.கட்டாலங்ககுளத்தில் அழகுமுத்துகோன் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் தமிழக அரசு புதுக்கோட்டை கோட்ட பேருந்துகளை வீரன் அழகுமுத்துகோன் பெயரில் இயக்கியது (Veeran Alagumuthu Kone Transport Corporation).

மதுரை யாதவர் கல்லூரியில் வீரன் அழகுமுத்து கோன் சிலையை அப்போதய பீகார் முதலமைச்சர் திரு லாலு பிரசாத் யாதவ் திறந்துவைத்தார்.

வீரன் அழகுமுத்து கோன் தேனி  மாவட்டம்
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரித்து வீரன் அழகுமுத்து கோன் தேனி மாவட்டத்தை உருவாக்கியது.










21 comments:

  1. http://thevarthalam.blogspot.in/2010/09/blog-post_08.html

    ReplyDelete
    Replies
    1. Avar yadavar endru Madurai high courtila theerppu vazhangiachu...ungalala mudinjatha pathukangada

      Delete
  2. It is clearly mentioned and told, that their descendents itself told that they are yadavas, and they are having the sword to everything. Still how you are saying it is thevar. You are wrong. Dont think everybody as maravar. There are kings from all clans. But maravar community are all became small time polygars under naickars. After 13th century there is no tamil kings in this land. After nayaks, polygors came, polygors were small rulers.

    ReplyDelete
  3. 1. We have historical proof that gingee fort was built by the King Aanantha Kone and it belongs to Yadav's. Even by the invaders of our land British called this fort as South Indian Troy. But most of the people of tamilnadu doesnt know this fort belongs to Yadav's. Yadav People and Yadav Sangh in Tamilnadu should make a memorial ring (Nenaivu Valaivu) in front Gingee Fort for the King Aanandha Kone
    2. Vedic Kshatriya, Panj Kul Kshatriya, Yadu Kshatriya, Chandravanshi Kshatriya these Identifiers should be included in Community Certificates which are given to yadav throughout India.
    Yadav's are mentioned in Rik Veda as Panj Kul Kshatriya, No other caste has this. But still we are regarded as only as shepherds. For example for vanniyar's in tamilnadu in their community certificate it is mentioned them as Agni Kul kshatriya but there is no relevent proof for this, as far as i know it is included just to get their votes. But for yadav's who are real warrior and panj kul kshtriya caste from vedic times in india, we are not recoganized as kshtriyas. Even king makers of indian politics such as mulayam singh yadav, lalu prasad yadav are not making this point clear. If they want to include our true lineage (Vedic Kshatriya, Panj Kul Kshatriya, Yadu Kshatriya, Chandravanshi Kshatriya as Identifiers) in our Community Certificate they can do it within a week, such is real power of yadav in India. Even in the last period of congress they tried to pass a bill to favor the realease of Lalu prasad yadav if you can remember. We have to send letters to Yadav Politicians and to urge them to make the government include these identifiers in yadav community certificate. In many parts of india christian missioneries are targeting yadav's and trying to convert them to christians. Because they know the importance of yadav's in india, if these christian missioneries gets yadav's they get india, its as simple as that.

    ReplyDelete
  4. தாஸ் என்பது தமிழ் மொழியா? தாஸ் என்பது தமிழ்குடி சமுதாயமா?

    ReplyDelete
  5. karthick yadav yadav enbathu engalin uyir moochu

    ReplyDelete
  6. Super yadavanai vella oruvan pirakka vendum

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஒரு சிலர் இருப்பார்கள் அடுத்தவர் பெற்றபிள்ளைக்கு.எனது விளாசத்தை தான் போட வேண்டும் என்று.
    வீரன் அழகுமுத்துகோன் கோனார் தான்

    ReplyDelete
  9. nan jathi veriyanum illai , kula perumaiyai vitu kudupavanum illai, manithanaga pirantha yalla makkalum samam. yaninum pala ilakiyangal ,antha kala puthagangalil, yam kula perumaiyai kooriyiruppathu yamaku miguntha perumaithan. yam inam pasathal kattupattathu.....yadhavar yalloraiyum veruppavar alla... yalloraium aravanaipavar ...jai yadhav ... jai samajwadhi...

    by nellai veera arumugam yadhav
    nellai district head officer
    whatsapp no +65 82911705

    ReplyDelete
  10. Yathavan pasakaran,athe nerathil veeranum kuda. servai enpathu paddam athu innum pechu vazhakkil irukkirathu.

    ReplyDelete
  11. Dey ungalukku yenda intha maanam ketta polappu adimai na adimaiya irunga da.. yenda unga Appa Amma perai kedukiringa ...y don't you people find your forefathers instead of naming others blood relation which has valuable history and adding credit to yours and celebrating ruthlessness...I know about you people ninga aadu maadu kooda olunga meikka maatinga ippudi than blog pottu unga maana pundaiya uumbhuvinga..

    ReplyDelete
  12. Ivar Pirantha varudam kuripidave ilaye

    ReplyDelete
  13. திருட்டு பயலுகளா.... கோனாரை யாதவ் என்று வெக்கம் இல்லாமல் சொல்கிறீர்கள்..

    அவர் என்றுமே கோன் தான்

    ReplyDelete
  14. வரலாறை படிக்கலாம் னு வந்தா.. எல்லாம் யாதவ் யாதவ் னு பொய் ஆ இருக்கு.

    ReplyDelete
  15. Alagumuthu Kone. maravar da..avaroda varisu community certificate parugada avar maravar.

    ReplyDelete
    Replies
    1. Yadhava King 👑 alagumuthu konar

      Delete

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar