"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, October 16, 2013

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி யாதவ மகாசபை தலைவர் தேவநாதன்

               நெல்லை:  வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் பேசினார்.
                    அழகுமுத்து கோன் 254 குருபூஜை தினத்தை முன்னிட்டு பாளையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் பேசியதாவது: யாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்புகளில் உரிய முன்னுரிமை, உரிய இடஒதுக் கீடு கேட்டு நாங்கள் போராடி வருகிறோம்.

                 அரசியல் கட்சிகள் அனைத்தும் யாதவர்களை புறக்கணித்து வருகின்றன. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் நமது கட்சியான இந்திய மக்கள் கழகம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். மத்தியில் ஆளும் காங்கிரசின் அரசின் நிர் வாக திறமையின்மையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இப்போதைய நிலையில் நாட்டின் பிரதமராக முலாயம் சிங் யாதவிற்கு தகுதி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

            பொதுக்கூட்டத்தில் தென்மண்டல அமைப்பு செயலா ளர் மரியசுந்தரம், இணை செயலாளர் வல்லநாடு முத்து, மாநில இளைஞரணி செயலாளர் சுந்தரம், மாவட்ட தலைவர் மாடசாமி, யாதவ பண்பாட்டு கழக நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன், மாநகர துணை செயலாளர் தளவாய் மணி, நிர்வாகிகள் செந்தில், அப்பாஸ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக கட்டாலங்குளத்தில் நடந்த குருபூஜை விழாவில் தேவநாதன் கலந்து கொண்டார்.

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar