"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, August 12, 2015

விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி



விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி

விடுதலைக்கான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சார்ந்த மாவீரர் அழகுமுத்து கோன் அவர்களின் நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று 12/08/2015, பிற்பகல் 1.30 மணியளவில் தில்லி பாராளுமன்ற செயலக கட்டித்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்து அழகுமுத்து கோன் அவர்களின் வரலாற்றை எடுத்துரைத்து, சுமார் 256 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் விடுதலைக்கு முதல் குரல் கொடுத்ததற்காக ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் இரவு நேரத்தில் கைது செய்து பீரங்கி வாயில் கட்டி, சுதந்திர போராட்ட வரலாற்றில் முதல் களப்பலியான அழகுமுத்து கோன் அவர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறினார், அவருடன் யாதவர் தன்னுரிமைப் பணியகத்தை சார்ந்த பேராசிரியர் பெரி கபிலன் மற்றும் எ.சுகுமார் ஆகியோர் சந்தித்து தமிழகத்தில் உள்ள யாதவர் சமுகத்தின் 19 ஆண்டு கால கனவாக இருப்பதாகவும் தெரிவித்தனர், இதை ஆர்வமுடன் கேட்டுவிட்டு கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் மிக விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதியளித்தார்.

நன்றி - யாதவர் தன்னுரிமைப் பணியகம் - தில்லி

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar