ஆயர் குல வரலாறு
உலகின் இயற்கை அமைப்பை ஒட்டி நிலங்களைப் பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பாகுபாடு செய்தனர். மழை தவழும் மலைச் சாரலிலே பல்வேறு பூக்கள் மலர்ந்த போதும், அவற்றுள் தேன் நிறைந்த பூவான குறிஞ்சிப்பூவே சிறப்புப் பெற்றிருந்தது. அதனால் மலையும், மலைசார்ந்த இடமும் "குறிஞ்சி' எனச் சுட்டப்பட்டது.
முல்லைக்குரிய பெரும்பொழுதையும், சிறுபொழுதையும் வரையறுக்கும் தொல்காப்பியர், "காரும், மலையும் முல்லை' எனச் சுட்டுகிறார். ""கார் காலமாவது, மழைபொழியும் காலம். அது ஆவணித் திங்களும், புரட்டாசித் திங்களும். மாலையாவது இராப்பொழுதின் முற்கூறு'' என்பது இளம்பூரணம். முல்லைக்குரிய உரிப்பொருளான "இருத்தலை' பற்றி, நச்சினார்க்கினியர்,
""இனித் தலைவி பிரிவுணத்திய வழிப்பிரியார் என்றிருத்தல், பிறிந்துழிக்குறித்த பருவம் அன்றென்று தானே கூறுதல். பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன ஆகியவை இருத்தல்'' என்று விளக்குவார்.
பொதுவாக, கருப்பொருள்களாகக் கருதப்படுபவை இவை என்று தொல்காப்பியர் விளக்குகிறாரேயன்றி ஐந்திணைகளுக்கும் உரியவை இவை என்று அவர் வகுக்கவில்லை. உரையாசிரியர்களே அங்ஙனம் வகுத்துள்ளனர். மேலும், தொல்காப்பியர்,
"ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும்உளரே''
என்று முல்லைத் திணைக்குரிய மக்களை மட்டும் விளக்குகிறார்.
முல்லைத் திணைக்குரிய முதற்பொருள்:
பெரும்பொழுது - கார்காலம்.
சிறுபொழுது - மாலை.
கருப்பொருள்: திருமால் (நெடுமால்) முல்லைத்திணைக் கடவுள்.
உரிப்பொருள்: நிலத்தலைவர்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் ஆகியோர்.
பறவை: கானக்கோழி, சிவல், விலங்கு: மான், முயல், ஊர்: பாடி, சேரி, பள்ளி என்று அழைக்கப்பட்டன. பூக்கள்: முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ.
மரங்கள்: கொன்றை, காயா, குருந்தம் முதலியன.
உணவு: வரகு, சாமை, முதிரை பறை: ஏறு கோட்பறை.
யாழ்: முல்லையாழ். நீர்நிலை: கான்யாறு.
தொழில்: நிரைமேய்த்தல், பயிர் விதைத்தல், களை கட்டல், அறுத்தல் முதலியன.
மனித வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள், மக்கள் தொகைக் பெருக்கத்தின் காரணமாக அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லை நிலத்திற்குச் சென்றனர். மனிதன், இதற்குள் நாய், எருமை, பசு, ஆடு போன்ற விலங்குகளைப் பழக்கி, வளர்க்கக் கற்றுக்கொண்டான்.
மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர்நிலை' இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்பமுறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.
காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு' என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு' மணம் ஏற்பட்டது.
தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தைவழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்' ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்' (கோன்-இடையன், அரசன்; இடைச்சி-ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே' பின்னாளில் அரசனின் "செங்கோல்' ஆயிற்று.
ஆநிரையைச் செல்வமெனப் போற்றும் முல்லை நிலச் சிற்றரசுகளிடையே ஏற்பட்ட சிறுசிறு போர்களே (ஆநிரை கவர்தல்) தொடக்ககாலப் போர்களாக இருந்தன. எனவே, பண்டைத் தமிழகத்தின் முதற்போர் முறையாக, ஆநிரை கவர்தல் அமைந்தது. கிராமிய வாழ்வை - கற்பனையான பொற்கால வாழ்வைச் சித்திரிக்கும் பாடல்களே முல்லைப் பாடல்கள் என்பர் மேலை நாட்டு மொழி இயல் வல்லுநர்கள். தமிழகத்தில் உள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் போன்றே கிரேக்கம், லத்தீன், எபிரேயம், வடமொழி மற்றும் இந்திய மொழிகளிலும் முல்லைப் பாடல்கள் உள்ளன.
இந்திய நாகரிகத்தின் இரண்டாம் நிலையாக முல்லை நில வாழ்க்கை அமைந்துள்ளது. தமிழகத்தில் அரசன் உருவானது முல்லை நிலத்தில்தான். லத்தீன், தமிழ் ஆகிய செவ்வியல் மொழிகளில் இருப்பது போல் வடநாட்டில் ஏனோ, எந்த மொழியிலும் முல்லைப் பாடல்கள் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைச்சங்க இலக்கியங்களாக எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமே கருதப்படும். எட்டுத்தொகை நூல்களில் அக இலக்கியங்களான நற்றிணையில் 30 பாடல்கள், குறுந்தொகையில் 45, ஐங்குறுநூற்றில் 100, கலித்தொகையில் 40, அகநானூற்றில் 40 பாடல்கள் முல்லைப் பாடல்களாகும். பத்துப்பாட்டில் நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இரண்டு பாடல்களும் முல்லைத் திணைப் பாடல்கள். முல்லை நிலப் பாடல்கள் மொத்தம் 234. மிகக்குறுகிய 3 அடிச் சிற்றெல்லையில் ஐங்குறுநூற்றுப் பாடலையும், மிக அதிகமாக 188 அடிகளைக் கொண்ட நெடுநல்வாடைப் பாடலையும் காண்கிறோம்.
எட்டுத்தொகை நூல்களில் ஐங்குறுநூறு(100), முல்லைப் பாடல்கள் பாடிய பேயனாரை அடுத்து இடைக்காடரும், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரும் மிக அதிகமாக முல்லைப் பாடல்கள் பாடியுள்ளார்கள். முல்லைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 73. பாடிய புலவர்கள் பெயர்கள் தெரியாத பாடல்கள் எண்ணிக்கை 6.
உலகச் செம்மொழிகளான கிரேக்கம், லத்தீன், எபிரேயம் ஆகிய மொழிகளிலுள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கையைவிட, தமிழ் மொழியில் உள்ள முல்லைப் பாடல்களின் எண்ணிக்கை அதிகம்.
முல்லைப் பாடல்கள் வழி நாம் அறியும் சில சங்கச் செய்திகளாவன: விரிச்சி கேட்டு நிற்கும்பொழுது நற்சொல் கேட்பின், நன்மை நடக்கும் என்றும், நல்லது அல்லாத சொல் கேட்பின், நன்மை நடவாது என்றும் நம்பினர் அக்கால மக்கள். இன்றும் கிராம மக்களிடையே இந்தப் பழக்கம் தொடர்கிறது; யானைகளோடு பேசப் பாகர்கள் வடமொழியைப் பயன்படுத்தினர்; போர்க்களங்களில் மங்கையர் பணி புரிந்தனர்; ஏழடுக்கு மாளிகைகளில் மக்கள் வசித்தனர்; நாழிகைக் கணக்கர், "நாழிகை வட்டில்' கொண்டு காலத்தைக் கணித்தனர்; அரசுச் செய்திகளைப் பிறர் அறியாதிருக்க ஊமையர்களை (மிலேச்சர்) அரசர்கள் தங்களுக்குக் காவலாக வைத்திருந்தனர்; இதுபோன்ற சங்கச் செய்திகள் பலவற்றை முல்லைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
அற்புதமான கட்டுரை.இந்தியாவின் பல்வேறு சமூகங்களின் வரலாறு போற்றப்பட வேண்டிய ஒன்று.நாங்கள் இதை வரவேற்கிறோம்.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
Deleteஅற்புதம்
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி
DeleteVellore Yadav Hawk
ReplyDeleteஇந்திய மற்றும் அனைத்து நாகரீகத்தின்
ReplyDeleteதோன்றலே முல்லை நிலம் தான் .
சேர ,சோழ பண்டியர் ,மற்றும் அனைவருமே இடையர்கள் தான் .
இடையர் எப்படி ஆயர்கள் ஆனார்கள்.
ReplyDeleteஇடையர் வேறு ஆயர் வேறு. இடையர்கள்
ஆடுகளை வளர்ப்பது. ஆயர் என்பது மாடு
வளர்ப்பது.சிறந்த கள ஆய்வு செய்யுங்கள்.
சேர,சோழ,பாண்டியன் என்று நகைச்சுவை செய்யாதீர்கள்.
கோனார் பெயர் காரணம் தெரியும்.முதலில்
அதைப்பற்றி ஒரு விரிவான உண்மையான
கருத்தியியலை பதிவு செய்யுங்கள்.
இடையர் வம்சத்தில் கிருஷ்ணன் பிறக்கவில்லை. மாறாக ஆயர் குலத்தில் அவரித்தன் முல்லை அரசன் .
யாதவர் என்பது வடநாட்டு சொல்.வட நாட்டில்
ReplyDeleteசெம்மறி ஆடு வளர்ப்பவர்கள். செம்மறி ஆடு எழுப்பும் ஓலியைக்கொண்டு உருவான சொல் யா...... யாதவர்.நீங்கள் தமிழர்கள் தானே அதில் உங்களுக்கு ஐயமில்லையே.
தமிழன் தனித்தன்மை வாய்ந்தவன் நீங்களும்தான் பிறர் சொல்லை பயன்படுத்துவதால் உயர்ந்த நிலையில் சென்றதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். நமது அடையாளத்தை மாற்ற நினைப்பது எவ்வளவு பெரிய அபத்தம்.
உங்களுக்கு தெரியாது ஒன்றுமில்லை நமது
ஆடுகள் எவ்வாறு ஒலி எழுப்புகிறது மே........
மேயோன்,மேசன் அவ்வாறு இருக்க யாதவர் என்று கூறுவது வெட்க செயல்.
கோனார் கோல்+அனார் கோல் என்பது கையில் பயன்படுத்தும் மூங்கில் ஆன இலை
தழைகளை பறிப்பதற்கு ஏதுவான முன் இரும்பினால் ஆன வளைவுடன் கூடிய கோல்
அதை கையில் கொண்டு ஆள்பவன் அனார்
இதுவே கோனார் என்று திரிந்தது.
This comment has been removed by the author.
Deleteஇடையர் இடைச்சியர் என்பது
Deleteஇடைநிலத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த முல்லை நிலத்தின் மக்களையும் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுச் சொல்
ஆயர் ஆய்சியர் என்பது ஆனிறை மேய்க்கும் மேய்ச்சல் சமூகத்தை குறிக்கும் சொல் முல்லை நிலத்தில் வாழ்ந்த மேய்ச்சல்
சமூகம் மூன்று
1) கோவினத்தாயர்
2)கோட்டினத்தாயர்
3)புல்லினத்தாயர்
இதில் கண்ணன் பிறந்தது புல்லித்தாயர் வம்சத்தில்
கண்ணன் வளர்ந்தது
கோவினத்தாயரிடம்
இதில் கோட்டினதாயாருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை
இந்த மூன்று ஆயர்களின் வாழ்க்கை முறை என்பது எவ்வாறு இருந்தது
புல்லினத்தாயரின் வாழ்க்கை
பனையும் வெள்ளாடு வளர்ப்பும்
இவர்களின் தொழில் வெகுதூரம் மேய்ச்சலுக்கு போகவேண்டிய நிலையில்லை என்பதால் இவர்கள் முலைநிலத்தின் நிலைகுடி என்பது குறிப்பிடத்தக்கது
கோவினத்தாயர் மாடு வளர்க்கும் ஆயர்கள் மோய்ச்சலுக்கா வெகுதூரம் சென்றுதான் ஆகவேண்டும் இருப்பினும் மாலை நேரத்திற்குள் வீடு திரும்பி விடுவார்கள் என்பதால் இவர்கள் நாடோடிகள் இல்லை
நிலைகுடி
கோட்டினத்தாயர் செம்மறி ஆடு மேய்ப்பர்கள் இவர்களின் வாழ்க்கை முறை என்பது நாடோடி வாழ்க்கை முறை கெடை போடுவதற்காக ஊர் ஊராக சென்று வாழ்பவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் கூட நிலைத்து வாழ முடியாத
அலைகுடி இவர்கள்
முல்லை நிலத்தில் உழவு குடிகளும் உண்டு
🙏🙏🙏
மாமல்லன் விளக்கம் சரி.
Deleteஇடையர் என்பது மறவர்,கள்ளர்,எய்னர் வேடுவராகியோரை குறிக்கும். இடைநிலம் என்பது பாலை நிலமே ஆகும். பாலை நில மக்கள் மறவர், கள்ளர், எய்னர், வேடுவர்.
ReplyDeleteஇன்றளவும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஏறுதழுவுதல் நடத்திக் கொண்டிருப்பவர்கள் கள்ளர் மறவர் மட்டுமே.
பிற சமூகங்கள் தற்போது செல்வம் நிறைந்த காரணத்தினால் இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் பாலை நிலம் என்று ஒன்று கிடையவே கிடையாது.
குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையே வாழ தோன்றிய ஒரு தற்காலிக மற்றும் வறட்சி நிறைந்த நிலமாகும்.
குறிஞ்சியும் முல்லையும் வறண்ட பிறகு அங்குள்ள மக்கள் வேறு பெயரில் அழைக்கப்படுவார்களா என்ன?
அவ்வாறு அழைக்கப்படுவார்களேயானால் அவர்கள் தான் மறவர்கள் மற்றும் கள்ளர்கள் ஆவர்.
ஆகவே இடையர் என்பது பாலை நிலத்து மக்களை குறிக்கும்.
அந்த இடை நிலத்தில் வாழ்ந்த மக்களின் பெயர்தான் இடையர்கள்.
முல்லை நிலத்து மக்களின் பொது பெயர் தான் ஆயர்.
ஆயர் என்றால் மேய்ச்சல் சமூகம் என்று அர்த்தம்.
அந்த ஆயராகிய மேஜர் சமூகங்களில் உள்ள பிரிவு தான்
அவர்கள் எந்த வகை விலங்குகளை மேய்க்கிறார்கள் என்பதை பொறுத்து மாறும்.
இடையர் என்பது பாலைத்திணை மக்களை மட்டுமே குறிக்கும்.
உங்கள் விளக்கம் சரி அல்ல.யுகங்கள் யுகங்களாக 'ஆயர்குலம் ',சீரும் சிறப்புமாக சகாப்தம் படைத்துள்ளது.'இடையர்' -என்ற சொல் சங்க காலத்தில் தேவையில்லா இடைச்சொறுகல்.ஒரு நிலத்திற்கும் மற்றொரு நிலத்திற்கும் இடைப்பட்ட மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் காலகட்டம் இருக்கும் சமயத்தில் பிற மக்கள் மாடுகளையும் ஆடுகளையும் கவர்ந்து சென்றார்கள்.அவர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்ட சமயத்தில் பிற நிலமக்கள் மாடுகளையும் ஆடுகளையும் தனது வாழ்வாதாரத்திற்காக குறிப்பாக மருதநிலத்திற்கு குழுமமாக செல்லும் காலத்தில் அவர்களை இடையர்கள் என அழைத்தனர்.இது புனைப்பெயர்.ஆதாரபூர்வ பெயர் 'ஆயர்' ஒன்றுதான்.அஆடுமாடுகளை களவு அல்லது கைப்பற்றுவதில் என்ற நிகழ்வும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.அவர்கள் ஆயர் அல்லாதவர்கள் என அழைத்திருக்க வாய்ப்புகள் உள்ளன.வரலாறு மீண்டும் சரியாக தாங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.'பாலைவனம்' கலியின் தொடக்கத்தில் இல்லை.ஆனால் வறட்சி என்று இருந்தது.குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையில் எந்த வறட்சியும் இல்லை.ஆனால் மனிதனிடம் ஆசை,பொறாமை,கர்வம் வளர்ந்திருக்க வாய்ப்பு உள்ளன.அதேசமயம் வலிமை உள்ள அதேசமயம் பிறர் பொருளை தனதாக்கி கொள்ளும் மக்கள் இருந்தனர்.அவர்களை பாலை நிலங்கள் என அழைக்க வாய்ப்பு அதிகம்.கண்ணன் ஆயர்குலம் காத்தவர்.பிற தேசத்து மக்கள் கள்வர்கள் மற்றும் விரோதம் காரணமாக மக்கள் நலன்களை திசை திருப்பி பிரிவு உருவாக்கினர்.அமைதியாக வாழ விரும்பியவர்கள் ஆயர்கள் அவர்களில் நல்ல வலிமை உள்ள ஆளுமைத்திறன் அதிகம் உள்ளவர்கள் 'கோன்' என போற்றப்பட்டார்.இடையர் என்ற சொல் வாய்மொழிக் சொல்லே.ஆக கோன் ஆயர் என தங்கள் கவனத்தை கொண்டு செல்லவும்.சரியான வரலாறு காண முயல்வோம்.
Deleteஏன்டா மருத நிலமே ஒரு தற்காலிக செயற்கை நிலம் அது தெரியுமா டா உனக்கு...
Deleteஇயற்கையான நிலங்கள் எதுனு உலகம் முழுக்க தேடி பார் டா...
நீ சொன்ன மருத நிலம் மட்டும் கிடைக்கவே கிடைக்காது டா...
இடை நிலம் அப்படினா ..
இடையர் என்பது யார் எல்லாம் தமிழர் என்பதை கண்டறிய உதவும் ஒரு உதவி கோல் ஆகும்.
இடையர் என்பது தினை பெயர் . உழவர் என்பதும் தினை பெயர் தான்...
நிலம் மூன்று வகை படும்
1. மேடு
2. காடு
3. கடற்கரை
தினைகள்:
1.குறிஞ்சி
2. பாலை(இயற்கை)
3. முல்லை
4. மருதம்(செயற்கை)
5. நெய்தல்
இடையர் என்பது வறண்ட குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில் வாழும் மக்களின் பொது பெயர் ஆகும்...
இடயரும், மறவரும் ஒண்ணு அப்படினு சொலவடை சொல்லுவாங்க தெரியுமா.. உனக்கு...????
மறம் என்றால் கொள்ளுதல் என்று பொருள்...
மறவர் கொலைகாரன் என்று அர்த்தம் டா...
இடையன் என்றால் வறண்ட நிலம் வழியாக செல்வோரை இடைமறித்து வழிப்பறியில் ஈடுபடுவரே...
இடையர் எனப்படுவர்... பொருள்களை தர மறுத்தால் கொலை செய்வர்.(மறம்=கொள்ளுதல்)
ஆகவே இடையரும், மறவரும் ஒண்ணு தான் என்பது என் மக்கள் அறிவர்...
நீ போய் உன் வரலாறு எதுவென்று கண்டறிந்து உன் சமூகத்தை முன்னே t றும் வழியை பார்.
Yaruda neee
Deleteமுட்டாப்பயலே, வரலாறை படித்து பிறகு கருத்து கூறு.
ReplyDeleteநீ யாரடா சொல்லுற முட்டா த்தேவிடியா பையா...
Deleteபோங்கடா முட்டா புண்டை மகங்களா...
ReplyDeleteபோய் வரலாறு படித்து விட்டு வந்து ஊம்புங்கள்....
மருதம் அப்படினு ஒரு நிலம் கிடையவே கிடையாது டா...
ங்கோத்தா...
அது செயற்கையானது டா ங்கோத்தா...
நல்லா இருக்கிற காட்டை அளித்தால் மட்டுமே மருத நிலம் மயிரு நிலம் உருவாகும்...
புண்ட எங்களுக்கு தெரியும் நீங்க மறவர் கிட்ட போய் உம்பு என் மருத நிலத்திற்கு வார ஆடு மெய்த்த புண்ட தற்குறி மாதிரி இளரீட்டு இருக்க மருத நிலம் செயற்கை தான் சொரு வெனும் நா வும்பு
Delete