"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label கோகுல மக்கள் கட்சி. Show all posts
Showing posts with label கோகுல மக்கள் கட்சி. Show all posts

Thursday, March 3, 2016

கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு

கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் சட்டமன்ற தேர்தலில் கோகுல மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். இந்த மனுக்களை பூர்த்தி செய்து 12ம் தேதிக்குள் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பொது தொகுதிக்கு ₹2 ஆயிரம், தனி தொகுதி மற்றும் பெண்களுக்கு 1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Friday, February 26, 2016

பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்

கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது.

கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில இந்திய யாதவ மகாசபையின் துணை தலைவர் சோம் பிரகாஷ் யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

இந்திய வரலாற்றின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனுக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில் தமிழக வரலாற்று பாட புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க வேண்டும்.

டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அழகு முத்துக்கோன் பெயரை வைக்க வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோன் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும்.

விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். ஆடு மேய்த்தல் தொழில் புரிபவர்களுடைய வாரிசுகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாநில நிர்வாகிகள் எல்.வி.ஆதவன், துரை, சுரேந்தர்பாபு, கோவிந்த ராஜுலு, ராஜமாணிக்கம், அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 23, 2016

கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு


















கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு தீர்மானம்






Friday, February 19, 2016

பிப்.21-இல் கோகுல மக்கள் கட்சி மாநாடு

காஞ்சிபுரத்தில் கோகுலம் மக்கள் கட்சியின் வடக்கு மண்டல மாநாடு வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கோகுல மக்கள் கட்சியின் முதல் மாநாடு காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்அம்பியில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் அகில இந்திய யாதவ மகா சபையின் துணைத் தலைவர் சோம்பிரகாஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த பலர் இதில் பங்கேற்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இம் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

Saturday, January 23, 2016

Dravidian parties asked to give ticket to Yadava candidates

Gokulam Makkal Katchi
Gokulam Makkal Katchi (GMK), pro yadava political party, demanded dravidian parties to give tickets to people of Yadava caste.

A resolution was passed at the cadres meeting of the party held here on Wednesday. The resolution said that for the last 48 years dravidian parties never gave a ticket to a Yadava candidate either in assembly or in lok sabha elections in the constituencies that are part of the present Tiruvannamalai district. The resolution added that every caste should get its due representation. As Yadavas did not get it, the neglect is fit to be condemned, it added.

Therefore they wanted a ticket each in Tiruvannamalai district in the coming assembly election.

District Secretary K.Rajaram, president M.Rajangam and Treasurer R.Sivakumar were among the participants.

தேர்தலில் யாதவர்களுக்கு அதிக இடம் வழங்கக் கோகுலம் மக்கள் கட்சி கோரிக்கை

கோகுலம் மக்கள் கட்சி
திருவண்ணாமலையில் கோகுலம் மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் செங்கம் கு.ராஜாராம் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செந்தில்வேலவன் வரவேற்றார்.

கோகுலம் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு யாதவர் மகாசபை பொதுச் செயலர் (பொறுப்பு) எஸ்.வி.சிவபெருமான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், ஆடு, மாடு நலவாரியம் உருவாக்கி யாதவர்களை தலைவராக நியமிக்க வேண்டும், பால்வளத் துறை அமைச்சராக யாதவரை நியமிக்க வேண்டும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட கட்சியின் சார்பில் மாவட்டத்தில் தலா ஒரு சீட்டு யாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Saturday, January 16, 2016

சங்ககிரியில் கோகுல மக்கள் கட்சி கிளைத் தொடக்க விழா

கோகுல மக்கள் கட்சி கிளைத் தொடக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்ககிரி அருகேயுள்ள இடையப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர் அந்தக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, சங்ககிரி கிளையை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இடையப்பட்டி ராமச்சந்திரன், சின்னுசாமி, பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர். இ.ஆர்.ராமசாமி, கே.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மேற்கு மாவட்டச் செயலர் கே.சத்தியவேல், சங்ககிரி நகர ஒன்றியத் தலைவர் கே.சுப்ரமணியன், நகரச்செயலர் எம்.கமலேஷ்குமார், பொருளாளர் ஆர்.செல்வராஜி, இளைஞரணி செயலர் எம்.பிரகாஷ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர். நிர்வாகிகள் ரத்தினம், வி.பழனிசாமி, எம்.விஸ்வநாதன், எஸ்.சோமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Monday, July 13, 2015

கோகுல மக்கள் கட்சி சார்பில் இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

















Thursday, July 9, 2015

வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜை:கோகுல மக்கள் கட்சி

சென்னை: வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜையை முன்னிட்டு, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு கோகுல மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.வீரன் அழகுமுத்துகோனின் 258வது குருபூஜையை முன்னிட்டு நாளை மறுதினம் கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். விழாவில் பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு யாதவ மகா சபை பொதுச்செயலாளர் என்.சுப்பிரமணியன், கொங்கு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜன், நடிகர் கே.ராஜன், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி தலைவர் ராஜ்குமார், கோகுல மக்கள் கட்சி நிர்வாகிகள், எல்.வி.ஆதவன், பி.சுரேந்திரபாபு, கோதண்டராமன், மயிலை எம்.கிருஷ்ணன், சைதை மனோகரன், வடசென்னை குணசேகரன், ஆலந்தூர் ராஜேந்திரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

Tuesday, March 24, 2015

மதுரையில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி தலைவர் வற்புறுத்தல்

கோகுல மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் N.சரவணன் தலைமை தாங்கினார் S.P.கோனார், M.M.ஸ்ரீதர்,ராஜீகோபிநாத்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் V.C.காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் M.V.சேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அப்போழுது மதுரையில் சுதந்திரபோராட்ட வீரன் அழகுமுத்துகோன் சிலை வைக்க இடம் ஓதுக்கி தரவேண்டும். என்றும் மேலும் அண்ணாரின் வாழ்க்கை வரலாரை பாடபுத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் கூரினார்.
மேலும் விவசாயிக்களின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களை 
கையக்ப்படுத்த கூடாது, மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் கூரினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதசார அடிப்படையில் இடஓதுக்கிடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார். 

மேகதாத்தில் அனைகட்டிட


துடிக்கும் கர்நாடக அரசின் செயலை மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக விவசாயப் பெருமக்களுக்கு பாதுகாப்பு வழங்க்கிட வேண்டும் என மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார். 

உயர்நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதயாமான யாதவ சமுதயத்தினரை நீதிபதியாகவும், தேர்வாணைகுழு உறுப்பினராக யாதவரை நியமிக்த்திட வேண்டும் என்றும் மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார். 

திருவள்ளுர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட சாலைகளை உடனடியாக சீர்மைத்திட போர்கால அடுப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுருத்தி பேசினார்...
மேலும் கொள்கைபரப்பு செயலாளர் L.V.ஆதவன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
T.P.முர்த்தி மாவட்ட இளைஞரணி நன்றியுரை வழங்கினார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar