"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label தூத்துக்குடி. Show all posts
Showing posts with label தூத்துக்குடி. Show all posts

Saturday, January 30, 2016

கோகுலம் அறக்கட்டளை சார்பாக கட்டாளங்குலத்தில் குடியரசு தின விழா கொண்டாப்பட்டது


கோகுலம் அறக்கட்டளைஉறவுகள் அனைவருக்கும் வணக்கம் கோகுலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு தின விழா கொண்டாப்பட்டது இந்த வருடம் கோகுலம் அறக்கட்டளை மகளிர் அணியின் தலைவர் திருமதி சுடலியாதவ் மற்றும் தோழிகள்மாரியாதை செய்தார்கள் நாங்கள் இந்த செயலை கடந்த மூன்று வருடமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டுக்குமே எங்கள் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள் சென்னை மாவீரன் சிலைக்கும் கட்டாளஙகுலம் மணிமண்டபத்திற்க்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது... இதை போல் நமது யாதவ அனைத்து அமைப்பும் இனைந்து செய்தால் நன்றாக இருக்கும்... இது தான் எங்கள் கோகுலம் அறக்கட்டளையின் நோங்கம்.. கண்டிப்பாக வரும் ஆணடில் அனைத்து யாதவ அமைப்பும் வந்து மரியாதை செலுத்தவேண்டும்... என்று கோகுலம் அறக்கட்டளையின் நிறுவுனதலைவர் ஜெ மூர்த்தி யாதவ் தெரிவித்தார்
கோகுலம் அறக்கட்டளை



நன்றி 
மா மோகன் ஜீ யாதவ் 
இணையதள பொறுப்பாளர் 
திரு வெங்கி யாதவ் 
இயக்குனர் 
மற்றும் அனைத்து கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்

Wednesday, October 21, 2015

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை:கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்



பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பா.குமார் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்ட, பால் உற்பத்தியாளர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரகிருஷ்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: யாதவ சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ஒதுக்கீடாக 15 சதவீதம் உயர்த்தித் தரவேண்டும், கால்நடை வளர்த்து வரும் மக்களுக்கு நியாயவிலைக் கடையில் மாட்டுத் தீவனங்களை வழங்க வேண்டும்; கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் அரண்மனை மிகவும் பழுதடைந்துள்ளது. அதை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; யாதவ சமுதாய மக்கள் அனைவரும் கால்நடைகளை பராமரித்து, பால் உற்பத்தியை பெருக்கி வருவதால், பால் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில், கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் சதீஷ்குமார், தங்கமாரியப்பன், கருப்பசாமி, பொன்மாடசாமி, சின்னத்துரை, சின்னகருப்பசாமி, பாஸ்கரன், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tuesday, September 1, 2015

கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு






கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செய்யபட்டது பின்பு கோவில்பட்டி ரோவா பிளாசா ஹோட்டலில் 11 மணியளவில் பாடல் வெளியிடபட்டது இதற்கு சிறப்பு விருந்தினராகா க் K.கண்ணாயிரம் யாதவ் பரமக்குடி சுபாஸ் அய்யா அவர்கள் மாவீரன் அழகு முத்துக்கோன் வரலாற்று ஆசிரியர். மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் வாரிசுதாரர் வணஜா அம்மா. மணிவண்ணன் அவர்கள் யாதவ இளைஞர் மாக சபை தமிழ்நாடு. மற்றும் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்,நிர்வாகிகள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் திரு வெங்கிவரன் நிகழ்ச்சியை முடித்துவைத்தார்

இவண்.
 JRK.மூர்த்தியார்யாதவ்
 நிறுவன தலைவர்
மோகன்ஜுயாதவ்
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை-தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி

Monday, August 17, 2015

69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை




69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் வெங்கி யாதவ் மற்றும் சகோதரன் சதிஷ்யாதவ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் குமார் யாதவ் நமது மாஸ்டர் ஜீ மாரிச்சாமி யாதவ் நிர்வாகம் தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் மாரிக்கோனார் தலைமையில் விழா சிறப்புடன் நடைபெற்றது இந்த நிகழச்சி கோகுலம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திரு மூர்த்தி யாதவன் ஏற்பாட்டில் நடைபெற்றது.








Monday, July 13, 2015

பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா

இளைஞர் படையை உருவாக்கி ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டி இந்திய விடுதலைக்காக போராடியவர் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன். 
தூத்துக்குடி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட அவருக்கு அவர் வசித்த கட்டாலங்குளத்தில் அரசு சார்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு ஆண்டு தோறும் விழா எடுக்கப்பட்டு வருகிறது, 
இந்தாண்டும் வழக்கம்போல் உற்சாகம் பொங்க அழகு முத்துக்கோன் குருபூஜை விழா கட்டாலங்குளத்தில் நடைபெற்றது. அங்குள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அதன்பின்னர் திருச்சியில் இருந்து பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் 500-க்கும் மேற்பட்டவர்களுடன் கட்டாலங்குளம் சென்ற பாரத ராஜா யாதவ் வீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அழகு முத்துக்கோனின் வாரிசுகளை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தினார். 
தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை 7 மணியளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மஹாலில் வீரன் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவினை தலைமையேற்று நடத்தினார். 
இந்நிகழ்ச்சியில் திருச்சி, சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், கோவை, அறந்தாங்கி பகுதிகளை சேர்ந்த யாதவ பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் திரளாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பாரத முன்னேற்றக்கழகம் சார்பில் நிறுவனரும் அதன் தலைவருமான பாரதராஜா யாதவ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்று யாதவர்கள் வரலாற்றை பகிர்ந்துக்கொண்டார். பின்னர் சிறப்பு அழப்பாளர்களாக வந்திருந்த திருச்சி அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். 
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, பாஜகவை சேர்ந்த பார்த்திபன், இந்துமஹா சபையை சேர்ந்த ராஜசேகர், புதிய தமிழகம் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் அழகு முத்துக்கோனின் வீர தீர செயல்களை நினைவு கூர்ந்து பாராட்டி பேசினர். 
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவிநாயகா அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன், பாரத முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார், கட்சியின் துணைத்தலைவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆறுமுகசாமி, கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.பி.யாதவ், ஸ்ரீரங்கம் அதிமுக பிரமுகர் திருவேங்கடம் யாதவ், அரசியல் உளவாளியின் ஆசிரியர் சேதுராமன், ஆட்டுக்காரத்தெரு யாதவர் அமைப்பின் இளைஞரணி செயலாளர் ரூபன், விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆர்.கே.ராஜா மற்றும் இளைஞரணி தலைவர் பிரசன்ன வெங்கடேஷ், அரவிந்த், வினோத்குமார், சூப்பர் சின்னையா, அலுவலக நிர்வாகி தாமஸ், ராமு, எடத்தெரு ராசு, பார்த்திபன், ராமு, நந்தகுமார், உதயகுமார், ரத்தினக்குமார், சரவணன், செல்வம் உள்பட பலரும் பங்கேற்று விழாவினை சிறப்புரச்செய்தனர். 
விழாவின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் அருசுவை உணவு பரிமாறப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை


சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்டவருமான வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.கடம்பூர்.செ.ராஜீ ஆகியோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தி 39லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


சுதந்திர போராட்ட வீரரும், இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்டவருமான வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் இருக்கும் அவரது மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் வீரன் அழகுமுத்துகோன் திருவுருவ சிலைக்கு இன்று காலை முதல் பல்வேறு சமுதாய அமைப்பினர், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மாலை அணிவித்து மாரியதை செய்தனர்.தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் .செ.ராஜீ ஆகியோர் அழகுமுத்துகோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து அழகுமுத்துகோன் வரிசுகள் கௌரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் உழவர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் உதவி, முதியோர் உதவி தொகை , திருமண உதவி தொகை என 99 பயனாளிகளுக்கு சுமார் 39லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்கள்.நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் கண்ணபிரான், தாசில்தார் ஜோதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு கட்டாலங்குளம் பொதுமக்கள் சார்பில் பால்குட ஊர்வலம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. கோகுலம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் மூர்த்தி ஏற்பாட்டின் பெயரில் அறக்கட்டளை நிர்வாகிகள் அழகுமுத்து கோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.256 பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar