"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Saturday, December 10, 2016

ஆயர் விருதுகள் 2015

வணக்கம். "விருது வாங்கிய சமூகம், இன்று விருது வழங்குகிறது" மதுரையில் 'ஆயர் விருதுகள் 2015' வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தங்களை பதிவு செய்யுங்கள் - யாம்/YES






Saturday, March 12, 2016

யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்

மதுரையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் (பொறுப்பு) வீரணன் தலைமையில் நடந்தது. செயலாளர் கருப்பணழகு, பொருளாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன்,

சுந்தரராஜன் பேசினர். அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், புதிய

உறுப்பினர்கள், அறங்காவலர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Friday, March 4, 2016

ரயில் மறியல் முயற்சி: யாதவர் பேரவையினர் 55 பேர் கைது



யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற யாதவர் தேசிய பேரவையினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது, சாதிவாரிக் கணக்கெடுப்பு பட்டியலை வெளியிடுவது, ஆடு வளர்ப்போருக்குத் தனிவாரியம் அமைப்பது, யாதவர் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு காண்பது, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாதவர் தேசிய பேரவை மாநிலத் தலைவர் ஏ.கே. பூமிராஜன் தலைமை வகித்தார். இளைஞரணித் தலைவர் பி. வேலுசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் மூவேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ரயில் மறியலுக்கு முயன்ற இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, ரயில் நிலைய நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட யாதவர் தேசிய பேரவையைச் சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Monday, February 22, 2016

யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை

யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவீரன் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவை 2000ஆம் ஆண்டு வரை மாநில அளவிலான அரசு விழாவாக தமிழக அரசு நடத்தி வந்தது. தற்போது, அது மாவட்ட அளவிலான விழாவாக நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மாவீரன் அழகுமுத்துக்கோனின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு குரு பூஜை விழாவை அரசு விழாவாக தொடர்ந்து நடத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலையை அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும். பள்ளி வரலாற்று பாடங்களில் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்குத் தான் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்றார்.

Monday, November 30, 2015

யாம் கூடுகை விழா

மதுரையில் யாதவர் தொழில் வணிக கூடம் சார்பில் 'யாம் கூடுகை 2015' விழா நடந்தது. யாதவர் மகா சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கோனார் விபூதி திட்டம், யாதவா சேம்பர்.காம் இணையதளத்தை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி துவக்கி வைத்தார். யாதவர் தொழில் வணிகக்கூட கையேட்டை கல்யாணசுந்தரம் வெளியிட்டார். சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் சீனிவாசன், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் பேசினர். சரவணன் வரவேற்றார். கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Friday, October 30, 2015

மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்.

1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். தக்கிளியில் நூல் நூற்பது எப்படி என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவர் முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டன் இந்திய ராணுவத்தினரை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர் அப்போது மெஸபடோமியாவுக்குச் சென்றிருந்தார். ராணுவப் பணியை விட்டுவிட்டு இந்திய தேசியப் பணிக்குத் திரும்பினார். 1940இல் காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கேற்றார். அதில் கைது செய்யப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 4 மாத காலம் அடைக்கப்பட்டார். இவருடைய மூத்த சகோதரர் அய்யாக்கண்ணு பிள்ளை மதுரையில் பிரபலமான மனிதர். பரமன் ஒரு சிறந்த தேசிய வாதி.

Monday, October 26, 2015

மதுரை 'கச்சைகட்டி கருப்பாடு இனம்', 'முட்டுக்கிடா' வளர்ப்பில் முதலிடம்

மதுரை மாவட்டம் கச்சை கட்டி கருப்பாடுகளை, 'முட்டுக்கிடா' வளர்ப்புக்கு கேட்கும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டில் முதலிடம் பிடித்தது ஜல்லிக்கட்டு. அடுத்ததாக ரேக்ளா ரேஸ், முட்டுக்கிடா, சேவல் சண்டை போன்றவை பொழுது போக்காக இன்றளவும் பல இடங்களில் நடத்தப்படுகிறது. முட்டுக்கிடா வளர்ப்புக்கு செம்மறி ஆடுகள் தேர்வு செய்யப்படுகின்றன

கச்சைகட்டி கருப்பாடு:

முட்டுக்கிடா' வளர்ப்புக்கு ஏற்ற இனமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கருப்பாடுகள் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது. கருப்பு நிறம், கம்பீர நடை, அகன்ற புஜங்கள், அடர்த்தியான ரோமங்கள், கால் முதல் தலை வரை நான்கு அடி உயரம், விரிந்த நெற்றிப்பட்டை, சுருள்வாள் போல் நீளமான வளைந்த கொம்புகள், கருமஞ்சள் நிற கண்கள், கூர்மையான முரட்டுப்பார்வை, தலையை கீழே சாய்த்து... வலது கால் நகங்களை தரையில் தேய்க்கும் தோரணை... இதுவே கச்சைகட்டி கருப்பாடுகளின் அடையாளங்கள்.

40 நாள் குட்டி ரூ.4000:

கச்சைகட்டி கருப்பாடு வளர்க்கும் முருகன் கோனார் கூறியதாவது: பாட்டனார் முருகக்கோனார், தாத்தா ஆயப்பிள்ளை, தந்தை முத்துப்பிள்ளை ஆகியோரை அடுத்து நான்காவது தலைமுறையாக, கருப்பாடுகளை வளர்க்கிறேன். இந்த இனம் கச்சைகட்டியை தவிர வேறு எங்கும் இல்லை. முட்டுக்கிடா வளர்ப்புக்கு இதை விட்டால் வேறு இல்லை. முட்டுக்கிடா வளர்ப்போர் முன்கூட்டியே குட்டிகள் கேட்டு அட்வான்ஸ் கொடுக்க குவிந்து விடுகின்றனர்.

நல்ல முறையில், ஊட்டச்த்து கொடுத்து வளர்த்தால், ஆறு மாதத்திற்கு ஒரு குட்டி ஈனும். நுாறு ஆடுகளுக்கு ஒரு கிடா என இனப்பெருக்கத்திற்கு விடுவோம். 40 நாள் குட்டி ரூ.4000. பட்டிக்கே வந்து வாங்கி செல்வர். கச்சைகட்டி கருப்பாடு கள் முட்டுக்கிடா போட்டியில் ஒன்றுடன் ஒன்று முட்டும்போது, இருதயம் படபடவென துடிக்கும் அளவுக்கு உடைகல் உடைபடும் சப்தம் கேட்கும். இதுபோன்ற பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் பல நுாற்றாண்டுகளை கடந்து கச்சைகட்டி கருப்பாடுகள் கம்பீரமாக வலம் வருகின்றன என்றார்.

தொடர்புக்கு 97506 62881.

Monday, October 19, 2015

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற யாதவ இளைஞரால் பரபரப்பு: 70 பேர் கைது

தமிழ்நாடு இளைஞர் யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று 70–க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள், மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார், முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது பேரணியில் பங்கேற்ற சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது23) என்ற வாலிபர் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் பேரணியாக செல்ல முயன்ற 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Wednesday, October 14, 2015

கல்வெட்டை தெய்வமாக வழிபடும் கிராமத்தினர்: பாரம்பரிய நடைபயணத்தில் ருசிகர தகவல்


கி.பி. 14-ம் நூற்றாண்டை சேர் ந்த பழங்கால கல்வெட்டை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருவதாக பாரம்பரிய நடை பயணத்தில் தெரிவிக்கப்பட்டது.

தானம் அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே யா.கொடிக்குளம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் கூறியது: மண் சார்ந்த மரபின் வெளிப்பாடாக நாட்டுப்புறத் தெய்வங்கள் திகழ்கின்றன. வெள்ளைச்சாமி, கருப்புச்சாமி, அய்யனார், வீரணன் என பல பெயர்களால் இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். யா. கொடிக்குளத்தில் அமைந்துள்ள பகுதி தூங்காவனம் என்றும், அழகிய மணவாளன் திருநந்தவனம் என்றும் அழைக்கப்பட்டுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கரையில் அமைந்துள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் கி.பி. 1308-ம் ஆண்டு குலசேகர பாண்டியனின் அதிகாரி சுந்தரபாண்டிய சோழக் கோனார் என்பவர் திருப்பணி மேற்கொண்டதாக, திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இங்குள்ள இலுப்பையூற்று கிணறுதான் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பாரதி கூறியது: சிவன் கோயிலோடு குலசேகரன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த பொய்கை பகுதியை பாதுகாப்பதில் தீவிர பங்காற்றி வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றார்.

Thursday, August 20, 2015

உறுப்பினர்களுக்கு உதவும் மதுரை ஆட்டிறைச்சி சங்கம்

ஆட்டிறைச்சி தொழிலில் ஏற்பட்ட இன்னல்களை தவிர்க்க, எதிர்காலத்தில் உரிமையாளர்களும், உழைப்பாளர்களும் ஒற்றுமையுடன் இருக்க, தொலைநோக்கு பார்வையுடன் 1944 ஏப்.,21ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை ஆட்டிறைச்சி சில்லரை விற்பனையாளர் சங்கம்.மதுரை நாயக்கர் புதுத்தெருவில், 137 உறுப்பினர்களுடன் இச்சங்கத்தை ஆரம்பித்தவர் சி.பிரவிக்கக்கோனார். தற்போது கீழமாசிவீதி துலக்கர் பூக்கார சந்தில் செயல்படுகிறது. ""இன்றைய சங்ககட்டடம், 1966-67ல் சங்க பொறுப்பாளர்கள் வாலகுருக்கோனார், நல்லதம்பி கோனார், சுப்பிரமணிய கோனார், தலைமை கணக்கர் தனுஷ்கோடியா பிள்ளை முயற்சியால் வாங்கப் பட்டது,'' என்கிறார் சங்க செயல்பாடுகளை அறிந்த வரதராஜன்.மதுரை ஆட்டிறைச்சி சங்கம், தமிழகத்தில் உள்ள இறைச்சி வணிக சங்கங்களில் மிகப்பெரியதும், தென்னகத்தில் பெயர் பெற்றதுமாகும். 1953-54ல் ஆட்டிறைச்சிக்கு அரசு விதித்த வரியை விலக்க,திருப்பூரில் அமைச்சர் ரோச்விக்டோரியா தலைமையில் மாநாடு நடத்தி, சாதித்து காட்டி சாதனை படைத்தது இச்சங்கம்.சங்க உறுப்பினர்களுக்கு இலவச தராசு, படிக்கற்கள், வட்டியில்லா கடன், உறுப்பினர்கள் மறைவிற்கு இறுதிச்சடங்கு செலவு பல உதவிகளை சங்கம் பார்த்துக் கொள்கிறது. ஆடறுக்கும் போது சிந்தும் ரத்தத்தை சேகரித்து, விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு, வடக்குமாசி வீதி நவநீதகிருஷ்ண சுவாமி திருவிழாவில், பிரசாதம் வழங்குகின்றனர். ஜாதி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, கோனார்கள், பிரமலைக் கள்ளர்கள், முஸ்லிம்கள் இணைந்து சங்க பொறுப்புகளை கவனிக்கின்றனர். இன்று 450 உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக ந.முத்துராமலிங்கம், செயலாளராக ரா.நவநீதனும் உள்ளனர்.

Monday, July 13, 2015

விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும்:மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில், அழகுமுத்துக் கோனின் 256 ஆவது நினைவு நாள் விழா, மதுரை யாதவர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பொன். ராதாகிருஷ்ணன் மேலும் பேசியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு இந்தியா. ஆனால், 200 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை மட்டுமே நாம் நினைவில் கொண்டுள்ளோம். சுதந்திரப் பெருமைகளை மறந்தால், நம் நாடு மீண்டும் அடிமைப்பட வாய்ப்புண்டு. அதனால், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவுகூருவது அவசியம்.

முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் 256-வது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி மதுரை சொக்கிகுளத்தில் உள்ள யாதவர் தன்னுரிமை பணியகத்தில் நேற்று அவரது வரலாற்று ஓவியங்களைத் திறந்துவைத்துப் பார்வையிட்டார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். 
தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராளிகள் தேசிய அளவில் போற்றப்படுவது இல்லை. இதைக் கருத்தில்கொண்டு, வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என்றார்.

பின்னர், வீரர் அழகுமுத்துக் கோன் பற்றிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு யாதவர் மகாசபைத் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன், பாஜக மாநில துணைத் தலைவர் எஸ். சுரேந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் ஐ.எஸ். முத்தண்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar