"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Saturday, July 15, 2017

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் வீரன் அழகு முத்துக்கோனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. முன்னதாக, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து ஊர்வலமாக யாதவ மகா சபையினர் வந்தனர். இந்த ஊர்வலம் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் முடிவடைந்தது. 

பின்னர், அங்குள்ள வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைப்பாளர் ேக.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் கே.எத்திராஜ், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் கொம்பூதி செல்வராஜ், பழனி, சேகர், பூவை சங்கர், ராமதாஸ் உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tuesday, July 11, 2017

கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அழகுமுத்துக் கோனுக்கு மரியாதை செலுத்த கட்டாலங்குளம் சென்ற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவிற்க்கு தூத்துகுடி விமானநிலையத்திலிருந்து கட்டாலங்குளம் மணிமண்டபம் வரை இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.





மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மரியாதை




மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

யாதவ் மக்கள் முன்னேற்றம் அடைய தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை

சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் குரு பூஜையை முன்னிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எம்.மோகன் முன்னிலையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: 
இந்திய முதல் சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய-மாநில அரசின் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அழகுமுத்துக்கோனை பீரங்கி வாயிலில் நிறுத்தி குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் இன்றைய சமுதாய மக்களுக்கும் தெரியும் வகையில் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். 

விவசாயம் இல்லாமல், நீர்வளம் இல்லாததால் மேய்ச்சலுக்கான இடங்களை அரசாங்கம் பாதுகாத்து, மானிய விலையில் ஆடு, மாடுகளை கொடுத்து யாதவ மக்கள் முன்னேற்ற் அடைய தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். டெல்லி முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் அல்லது திருச்சி விமான நிலையத்திற்கு அழகுமுத்துக்கோன் பெயர் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் நலன் கருதி மதுபான விற்பனையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







அழகு முத்துக்கோன் 260–வது நினைவு தினம்: விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினத்தையொட்டி நடந்த குருபூஜை விழாவில், ‘‘விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்’’, என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குருபூஜை விழா

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு குருபூஜை விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு, அமைப்பின் நிறுவனர்–தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.குணசீலன், தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அவருடன் இல.கணேசன், கரு.நாகராஜன், சென்னை சி.ராஜா உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தேசிய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். குருபூஜையையொட்டி, அழகு முத்துக்கோன் உருவசிலைக்கு மலர் மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீர முழக்கமும், விடுதலையை பேணிக்காப்போம் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறு

இதனைத்தொடர்ந்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்து, இன்றுவரை அதன் மகத்துவத்தை போற்றும் தேசம் இந்தியா தான். விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து, சிறை சென்று, தங்களது இன்னுயிரை நீத்த தியாகிகள் பலர் உள்ளனர். தமிழகத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்று, பீரங்கி முனையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது வீரத்தையும், உயிர் தியாகத்தையும் என்றும் நம்மால் மறக்க முடியாது.

இதேபோல விடுதலைக்காக வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் உள்பட ஏராளமான வீரர்கள் விடுதலைக்காக தமது உயிரை கொடுத்து உள்ளனர். இவர்களின் தியாகத்தை நாம் என்றென்றும் எண்ணி போற்றவேண்டும். விடுதலை போராட்ட வீரர்களில் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். அதனை படிக்கும் குழந்தைகள் வாயிலாக விடுதலையின் பெருமை பேசப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் சூட்டவேண்டும்

தேவநாதன் யாதவ் கூறுகையில், ‘‘விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் யாதவர் இனத்தின் குலவிளக்காக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது தியாகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, அழகுமுத்துக்கோன் பெயர் சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவல்லிக்கேணியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்கவேண்டும்’’, என்றார்.

கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறுகையில், ‘‘டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கோ அல்லது திருச்சி விமான நிலையத்துக்கோ அழகுமுத்துக்கோன் பெயர் சூட்டவேண்டும்’’, என்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Friday, May 19, 2017

மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம் : 300 ஆண்டு பாரம்பரிய விழா

மாட்டு வண்டிகளில் பயணம்: 300 ஆண்டு பாரம்பரியம் மறக்காத பக்தர்கள்.

அபிராமம் அருகே 300 ஆண்டுகளாக பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 8 நாள்கள் நடக்கும் திருவிழாவுக்காக, 8 நாள்கள் 200 கிமீ., துõரம் பக்தர்கள் பயணிக்கின்றனர்.

அபிராமம் அருகே அகத்தாரிருப்பிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் அண்ணன் கூடலிங்கம், தம்பி இருளப்பன், தங்கை காளியம்மனுடன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பஞ்சம் பிழைக்க சென்று, நற்காரியங்கள் செய்ததால் அங்கேயே தெய்வமாக பிறவி எடுத்தனர். அகத்தாரிருப்பை சேர்ந்த ராஜகுலத்தை சேர்ந்த ஆதிநாராயண கோனார் வகையறாக்களை சேர்ந்த அகத்தாரிருப்பு, நரியன்சுப்பராயபுரம், காடநகரி, முதுகுளத்துõர் அருகே செல்வநாயகபுரம், காமாட்சிபுரம், பூக்குளம், ராமநாதபுரம் அருகே கொம்பூதி, சிவகங்கை மாவட்டம் ஆரியூர், லட்சுமிபுரம் உட்பட 56 கிராமங்களை சேர்ந்தவர்கள் தெய்வமாக உருவெடுத்த அண்ணன், தம்பி, தங்கைகளை குல தெய்வமாக வழக்கமாக வணங்கி வழிபடுகின்றனர்.


அண்ணன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுப்பட்டியில் கூடமுடையர் சுவாமியாகவும், கீழராஜகுலராமனில் தம்பி எத்தீஸ்வரர் பொன் இருளப்பசாமியாகவும், தங்கை ஸ்ரீவில்லிபுத்துõர் அருகே தைலாபுரத்தில் வீரகாளியம்மனாகவும் வீற்றிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடபடும் கோயில் திருவிழாவுக்காக கமுதி அருகே அகத்தாரிருப்புக்கு முந்தைய நாள் இரவே பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்கி, மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை, 8 நாள்கள் பயணித்து, 8 நாள்கள் திருவிழாவாக சொந்தங்களுடன் 16 நாள்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து அகத்தாரிருப்பு ஹரிநாராயணன் கூறுகையில், “ 300 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது மூதாதையர்கள் பின்பற்றி வந்த இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஆதி நாராயண கோனார் வகையறாக்கள் அகத்தாரிருப்பில் முதல்நாளே வந்து தங்கி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூடமுடையர், பொன் இருளப்பசாமி, வீரமாகாளி ஆகிய தெய்வங்களை விரதம் இருந்து தரிசிக்க வருகின்றனர். எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை 8 நாள்கள் பயணிக்கின்றனர். திருத்தங்கல் அருகே கிருஷ்ணா கரை சேர்ந்து, பக்தர்கள் குழுவாக தனித்தனியாக பிரிந்து, தம்பி இருளப்பசாமி, தங்கை வீரமாகாளிக்கு 5 ஆம் நாள் இரவு கிடாவெட்டி அன்னதானம் வழங்கி, தம்பி, தங்கையை பக்தர்கள் புடைசூழ அழைத்து சென்று, அண்ணன் கூடலிங்கம் சுவாமி கோயிலுக்கு சென்று 8 வது நாள் கிடா வெட்டி விரதத்தை முறித்து, சொந்த ஊருக்கு 13 ஆம் நாள் திரும்பும் நிகழ்வு ஏற்படுகிறது. வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் சரக்கு வாகனம், டிராக்டர்களில் கூடாரம் அமைத்து கோயிலுக்கு செல்வது சமீபகாலமாக உள்ளது. இருந்தபோதிலு
ம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள் இன்னும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 400 க்கும் மேற்பட்ட வண்டிகளில் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இத்திருவிழாவால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியூர் சொந்தங்களை சந்தித்து, 16 நாள்கள் மகிழ்ச்சியுடன் வருவது நெஞ்சை வருடுகிறது”, என்றார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar