Quick Links

Monday, September 29, 2014

பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா

இன்று பரமக்குடி அருகில் உள்ள பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த விழாவை மிக சிறப்பாக விழா குழுவினர் செய்திருந்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அங்கு பார்த்து வியந்த செய்தியை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன் ......
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை மதுரையில் கோவலன் பத்திரமாக விட்டு செல்லும் இடம் ஆயர்/யாதவர் வீட்டில் என்பதை அனைவரும் அறிவோம், ஏன் என்றால் யாதவர் சமுகம் மட்டுமே ஆடு/மாடுகளை கூட பத்திரமாகவும்/பாதுகாப்பாகவும் பார்த்து கொள்வார்கள், அதனால் கண்ணகியை நம்மிடமே விட்டு நம் சமூகத்தின் பெருமையை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறேன். அதை இன்று பூவளத்தூர் கிராமத்தில் பார்த்தேன்..... முப்பெரும் விழா மிக சிறப்பாக மந்தையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது ஆனால் ..... இரண்டு பெரியவர்கள் (முத்து யாதவ் மற்றும் மூக்கன் யாதவ்) ஊரின் மையத்தில் உள்ள ஊரணியில் ஊறவைத்து இருந்த கருவ குச்சிகளை கொண்டு, பிறந்து சில நாட்கள் ஆனா குட்டி ஆட்களுக்கு "கூடு" செய்து கொண்டு இருந்தார்கள், விழாவில் கலந்து கொள்ளாமல் ஆடுகளுக்கு இரவு நேரங்களில் எந்த பாதிப்பும் வர கூடாது என்றும் குட்டி ஆடுகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்று "கூடு" செய்கிறார்கள், இதை பார்க்கும் பொழுது சங்க இலக்கியம் முதல் தற்காலம் வரை நாம் இன்னும் மாற வில்லை என்பதற்கு இந்த பூவளத்தூர் கிராம மக்களே சாட்சி என்று முப்பெரும் விழா செய்தியாக முடிக்கிறேன் !!!


நன்றி !!!!

ஆயர் விருதுகள் 2014 - மதுரை (28/09/2014)

ஆயர் விருதுகள் 2014 - மதுரையில் நல்ல மழையுடன், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் இருந்த சூழலில் கூட யாதவர் தன்னுரிமைப் பணியகம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்தது. அரங்கம் நிறைய உறவுகளுடன், அறிவார்த்தமான தகவலுடன், தொன்மையான பதிவுகளை உள்ளடக்கிய சமுகம் என்பதை அறிஞர்கள் பதிவு செய்ய மிக சிறப்பாக நிகழ்ச்சி முடிந்தது. - யாதவர் தன்னுரிமைப் பணியகம்.