Quick Links

Saturday, December 22, 2012

யாதவர் கல்லூரி

Yadava College, Madurai.jpg
யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில்மதுரையில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல், கணனியியல், தகவல் தொழிற்நுட்பம் முதலான அறிவியல் பிரிவிலும், தமிழ்,வரலாறு,வணிகவியல் முதலான கலைப் பிரிவிலும் படிப்புகளை வழங்குகிறது. மற்றும் அரசு உதவி பெறும் இருபாலர் கல்லூரி.

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ல் தமிழக அரசின் உதவியுடன் யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது. யாதவ சமுதாயம் மட்டுமின்றி பல பின்தங்கிய சமுதாய மாணவர்களின் மேல்படிப்புக் கனவை நனவாக்கிவருகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த கல்லூரி 2008ம் ஆண்டுமுதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று பல துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது

No comments:

Post a Comment