Quick Links

Tuesday, January 7, 2014

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை 

யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
அதில் கூறியுள்ளவை

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வண்க்கம்,


            யாதவ மகாசபை சார்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை  யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு மாநாடு, பேரணி, கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சென்னை மன்ரோ சிலை அருகிலிருந்து பேரணியும், 25.04.2010 நெல்லையில் மாநில மாநாடும், 21.08.2010 சென்னையில் பேரணியும், 30.01.2011 சென்னை ராயபேட்டையில் மாநில மாநாடும், 25.04.2012  சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியுள்ளோம்.

மெலும் யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டுயலில் சேர்க்க கோரி லட்சக்கணக்கனா யாதவர்களின் கையெழுத்தை பெறும் இயக்கமும் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கையை நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் கடந்த ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை என்பது வரலாற்று உண்மை.

தங்களது ஆட்சிக்காலத்தில் தான் யாதவ குல முதலி சுத்ந்திரப் போர் வீரன்
அழகுமுத்துக் கோனுக்கு சென்னையில் சிலை வைத்ததும், போக்குவரத்து கழகத்துக்கு பேர் வைத்து பெருமை சேர்த்ததை நாங்கள் அறிவோம்

சமுக நீதி காத்த வீராங்கை என்ற பட்டத்திற்கு ஏற்றபடி யாதவைகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையில் யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆவண செய்ய வேண்டுகிறோம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீட்டாக ஏழு சதவீதம் யாதவர்களுக்கு ஒதுக்குமாறு யாதவர்கள் இந்த ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறோம்



No comments:

Post a Comment