வேட்புமனு தாக்கல்யாதவ மகாசபை தலைவரும், இந்திய மக்கள் கழக நிறுவனர் தலைவருமான டி.தேவநாதன் யாதவ் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மு.கருணாகரனிடம், வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்திய மக்கள் கழக தென்மண்டல அமைப்பு துணை செயலாளர் முத்து யாதவ், யாதவ மகா சபை சட்ட ஆலோசகர் ஜனார்த்தனன், மாநில இளைஞர் அணி தலைவர் சாலமோன் ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் தேவநாதன் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

15 தொகுதிகளில் போட்டிதமிழ்நாட்டில் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், என்னை தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர். குலுக்கல் முறையில் நெல்லை தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுகிறேன்.இவ்வாறு இந்திய மக்கள் கழக தலைவர் டி.தேவநாதன் யாதவ் கூறினார்.
0 comments:
Post a Comment