
இன்று அதிகாலை கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் சென்ற ரயில், ஆடுகள் மீது மோதியது. உயிரிழந்த செம்மறி ஆடுகளின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தானமும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும் இணைந்து 350 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். அவர்கள் திருவிடைமருதூர் பகுதியில் அறுவடை செய்த வயல்களில் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம். நேற்றிரவு மழை பெய்ததால் வயலில் தண்ணீர் தேங்கியது.
மேலும், பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பும் சாய்ந்தது. இதனால், செம்மறி ஆடுகள் அனைத்தும், அருகிலிருந்த தண்டவளாகத்தில் படுத்துக்கிடந்தன.
No comments:
Post a Comment