மும்பை,
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, உயரமான இடத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் வெண்ணைய் நிரப்பிய பானையை மனித கோபுரம் அமைத்து உடைக்கும் விளையாட்டு கொண்டாடப்படுகிறது.
இந்த விளையாட்டுக்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க கூடாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், 20 அடிக்கு மேலாக வெண்ணைய் நிரப்பிய பானைகளை தொங்க விடக்கூடாது என்றும் கூறியுள்ளது. தற்போது 40 அடி வரை உயரமாக இந்த பானைகள் தொங்கவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment