யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரில் மதுரைக்கு வர இருக்கிறார்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்ட அரங்கில் மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
-- சமூகப்பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சார்ந்த ஒருவருக்கு "அழகுமுத்துகோன் - விருது"
"தீப் சந்த் யாதவ் - விருது"
-- இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் இதில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கிய அறிஞர் ஒருவருக்கு "செந்நாப் புலவர் கார்மேக கோனார் - விருது "
இந்த மாபெரும் விருதை பெற இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும், அதற்கான பணியை தேர்வு குழு ஆரம்பித்துள்ளது. முக நூல் வழியாக உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.
நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம்
தொடர்புக்கு: 0452 4354343



விருது பெற்ற புகைப்படங்கள் பதிவு செய்யவும்
ReplyDelete