Quick Links

Tuesday, March 31, 2015

இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்

இடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்
ஓர் இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாய் தானியத்தைப் பெற்றுக்கொண்டதை முதுகூத்தனாரின் குறுந்தொகைச் செய்யுள் விளக்குகிறது.


"பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாருடை இடையன்'' (குறு.221:3-4)

இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல், காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து, குறிப்பிட்ட தொகை சேர்ந்த பின்னர் அக்காசுகளைக் கொடுத்துப் பசுவையும், எருமையையும் விலைக்கு வாங்கினர் என்பதை, பெரும்பாணாற்றுப்படை தெரிவிக்கிறது (பெரும்பாண்.164-166)

ஆயர்களின் உணவு குறித்து தமிழ் இலக்கியப் பதிவுகள்

ஆயர் உணவு

முல்லை நிலத்தில் வாழ்பவர்கள் ஆயர் ஆவார். காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழும் ஆயராகிய இடையர்கள் ஆடுமாடுகளைச் செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய உணவு காடுகளாகிய புன்செய் நிலத்தில் விளையும் தானியங்களே ஆகும். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும் காலும் அவர்கள் உண்ணும் உணவாகும். இவ்வுணவைத் தாமும் உண்டு தம் விருந்தினருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,

“மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (166-168)

-என்ற பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
ஆடுகள் மேய்த்து வந்த ஆயர்கள் பாலுணவை அதிகம் உண்டனர். அவர்ளின் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு பசும்பாலை உண்பதற்காக்க் கொடுத்தனர். இதனை,

“வேறுபுலம் படர்ந்த ஏறுடையினத்த
வளைஆன் தீம்பால் மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்
பலம பெறுநசையொடு பதிவயின் தீர்ந்தநும்
புலமபுசேண் அகலப் புதுவிர் ஆகுவிர்” (408-412)

-மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. இவ்வரிகளில் ஆயர்பெருமக்களின் அன்புள்ளத்தைக் காணலாம். மேலும் அவர்கள் இரவில் பாலையும் பாற்சோற்றையுதம் உண்பார்கள். விருந்தினர்களுக்கும் கொடுப்பர் என்பதை,

“கல்லென் கடத்திடைக கடலின் இரைக்கும்
பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர்” (415-417)

-மலைபடுகடாம் மொழிகின்றது.

நன்றி
இடையர் விழுதுகள்

No comments:

Post a Comment