யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் தமிழ்நாடு யாதவ மாணவர் இயக்கத்தின் அமைப்பாளர் ஆ. கல்லத்தியான் தலைமையில் அளித்த மனு: சுதந்திரப் போராட்டத் தியாகி அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவித்து நடத்த வேண்டும். அழகுமுத்துக்கோன் நினைவு நாளில் தடை உத்தரவு பிறப்பிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அவரது நினைவு விழாவில் வாடகை வாகனங்களில் சென்று பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
பாளையங்கோட்டையில் அழகுமுத்துக்கோன் சாலை எனப் பெயரிடும் வகையில், மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த வேண்டும். யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment