


மேலும் இந்த சாலையில் மின்விளக்குகள் ஏதும் இல்லை. கட்டாலங்குளத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் முழு உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மண்டபத்தின் உள்ளே சென்றால் மடம் போல் காட்சிளிக்கிறது. நினைவு மண்டபத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய உபகரணங்கள் இடம்பெற வேண்டும்.
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் படங்கள் அமைக்கப்பட்டது போன்று கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்திலும் வரலாற்றுச் செய்திகளை படங்களாக வரைந்து பார்வைக்கு வைக்க வேண்டும்.
மேலும் அவர் வைத்திருந்த வாள், திருவிளக்கு, வெண்சாமக்கொடை போன்ற அன்றைய காலத்துப் பொருள்களை மண்டபத்தினுள் காட்சிக்கு வைக்கலாம்.
அல்லது அவற்றின் புகைப்படங்களை அங்கு வைக்கலாம். நினைவு மண்டபத்தினைப் பார்க்க சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில், கோவில்பட்டியிலிருந்து கட்டாலங்குளத்திற்கு சென்று வர பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், மண்டபம் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும். மண்டபத்திற்கு மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி அழகு சேர்க்க வேண்டும்.
மேலும், மண்டபத்தின் முன்பகுதியில் காட்சிப் பொருளாக இருக்கும் நீரூற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தில் அவர் நடத்திய போரை விளக்கி சித்திரங்கள், படங்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment