Quick Links

Monday, July 13, 2015

திருநெல்வேலி அழகுமுத்துக்கோன் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு



சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் அருகேயுள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் சாதிய அமைப்பினரும் வருகை தருவர் என்பதால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், சிலைக்கு மாலை அணிவிக்க ஒவ்வொரு கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

இதன்படி திமுக சார்பில், அதன் மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைப் பொதுச்செயலர் நிஸ்தார் அலி, மாவட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணகுமார், மாவட்டச் செயலர் ஹரிஹரன் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் கண்மணி மாவீரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment