Quick Links

Tuesday, October 6, 2015

திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை



திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் பி. இசக்கியம்மாள், ஏ. ராஜவேணி ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்மண்டல யாதவ முன்னேற்றச் சங்கத் தலைவர் கே. ராமகிருஷ்ணன், அரிமா வானமாமலை, அமைப்பின் நிர்வாகிகள் காந்திராஜன், விநாயகம், எஸ்.ஆர். வெங்கடாசலம், வேலுதாஸ், இசக்கிமுத்துதாஸ், வேலு, பால்துரை, பண்டாரம், சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்க பொன்விழாவை சிறப்பாக நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் டி. ராமசாமி வரவேற்றார். பொருளாளர் கே. பாவநாசம் அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment