Quick Links

Thursday, December 24, 2015

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் தபால் தலை: 26–ந்தேதி வெளியிட தபால் துறை திட்டம்

சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் அழகுமுத்து கோன், ஜெகவீர ராமபாண்டி எட்டப்பன் என்ற எட்டயபுரம் அரசருக்கு நண்பர். கப்பம் கட்ட மறுத்து, முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். 

மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து, பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு, வீரன் அழகுமுத்து கோன், படைத்தளபதிகளும், போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டனர். இவர்களை கவுரவிக்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை, அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது. வரும் 26-ந்தேதி (சனிக்கிழமை) அழகுமுத்து கோன் நினைவு அஞ்சல் தலை, அஞ்சல் உறை, விவரக் குறிப்பேடும் அஞ்சலகங்களில் விற்பனைக்கு கிடைக்கும். 

மேற்கண்ட தகவலை அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment