Quick Links

Sunday, March 12, 2017

அழகுமுத்துக்கோன் சிலையை மாற்ற போராடும் கோகுலம் அறக்கட்டளை

மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மணிமண்டபம் சிலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2004 திறக்கப்பட்டது..ஆனால் தற்பொழுது அழகுமுத்துக்கோன் சிலை உடையும் தருவாயில் உள்ளது இதை பற்றி பல முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேரிலும் மனு மூலமாக தெரிவித்தோம் எந்த பலனும் இல்லை...

வருடா வருடம் ஜூலை 11 ம் தேதி அழகுமுத்துக்கோன் ககுருபூஜை தமிழக அரசால் நடத்த படுகிறது அன்றைய தினம் மட்டும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் வருவார்கள் அவர்களிடம் பலமுறை தெரிவித்துளோம்...


அடுத்த வருடம் கண்டிப்பா மாற்றுகிறோம் என்று 7 வருடங்களாக தெரிவிகிறார்கள் ஒன்றும் நடக்க இல்லை, இப்படி இருக்க முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க சொன்னார்கள் அதையும் 3 முறை கொடுத்துள்ளோம் எந்த பயனும் இல்லை

புதிய முதல்வர் திரு பழனிசாமி அவர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தோம் அது மட்டும் இல்லாமல் அவர்கள் தலைமை அலுவலகத்திலும் கடிதம் மூலமாக தெரிவித்தோம்....அழகுமுத்துக்கோன் அவர்களின் சிலையை மற்றமால் என் உயிர் போகாது என்று சபதம் எடுத்துள்ளேன்.






இப்படிக்கு 
மூர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை

Thursday, March 2, 2017

யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்: அழகு முத்துகோன் பேரவை

காளையார்கோவில்: யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அழகு முத்துகோன் பேரவை வலியுறுத்தியுள்ளனர்.காளையார்கோவிலில் நிறுவனத்தலைவர் வேல்ராஜ் கொடியேற்றினார். பேரவை ஆலோசனைக்கூட்டம் யாதவா சங்க ஒன்றியதலைவர் அங்குசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜன், செயலாளர் சுபாஷ் சேர்வைக்காரர், இளைஞரணி செயலாளர் கோகுல் சத்யா,மகளிரணிதலைவி சுமித்ரா, மாவட்ட செயலாளர் பாலா,பொருளாளர் திரு மூர்த்தி பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: அரசு யாதவா சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், கால்நடை வளர்ப்புக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், ஆடு, மாடுகள் வாங்கி பராமரிப்பதற்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நன்றி தினமலர்