Quick Links

Tuesday, July 3, 2018

'யாகூ' நம் தொழில்முனைவோர் பயிற்சி முகாம்


வேலை தேடுவோர் அல்ல 'யாம்', வேலை கொடுப்போரே 'யாம்'

'யாகூ' வரலாற்று நிகழ்வின் துவக்க நாயகன் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS, (Small & Medium Scale Industries, Secretary to the TN Government) அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி 'யாகூ 2018' தொழில் முனைவோர் இரண்டு நாள் பயிலரங்கை துவக்கிவைத்து, தமிழக அரசின் தொழிற் கொள்கை குறித்த எளிமையான விளக்கமும், தொழில்முனைவோருக்கு உதவ விரும்பும் அவரின் உற்சாகப் பேச்சும் கேட்ட அனைவரையும் ஈர்த்தது.



நம் முதல் தலைமுறைத் தொழில் முனைவோருக்காக 'யாம் கூடுகை' என்னும் 'யாகூ' தொழில் முனைவோர் பயிற்சி முகாம் சர்வதேசத் தரத்தில் சென்னை - வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டலில், ஜீன் 23 & 24 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை, தலைவர் டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நம் இளைஞர்கள் 'வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்' என்பதை அடிநாதமாகக் கொண்டு, நம் முதல்தலைமுறை தொழில்முனைவோர்களை முதல் கட்டமாக 20-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆர்வமுள்ள 100 இளைஞர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நோக்கம் இளையோருக்குள் நல்ல அறிமுகம், இணைப்பு, தொழில் விரிவாக்கத்திற்கான சூட்சுமங்கள், நெறிமுறைகள் முதலானவற்றை கற்றுக் கொள்ளவும், அந்தந்தத்துறையின் சமகால நிகழ்வுகள், புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்கள் முதலானவற்றை உள்வாங்கித் தத்தம் தொழில் நிலைப்பாடுகளைச் செம்மையாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும். தொழில் அதிபர்களுடன் நேரடியாக உரையாடி உத்வேகம் பெற வைக்கும் என்ற அடிப்படையில் நடைபெற்றது.
தொடரும்...யாகூ 2018

No comments:

Post a Comment