திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் தேநீர்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னையா யாதவ் வயது 25, த.பெ.செல்லையா. 25.2.2015 அன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ்சாலை தனியார் மருத்துவமனை அருகே வந்த பொன்னையாவை 4 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், படுகொலை செய்யப்பட்ட ஏழை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க கோரியும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு ஆயர்குலத் தலைவன் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment