
நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பு உணவு வழங்கப்பட்டது, கோடை வெயில் தெரியாதவாறு அரங்கம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்சிகளில் இருந்தும் அனைத்து மதம் மற்றும் சாதியினரை சேர்ந்த பெரியவர்களும், ஏரணிக்கோட்டை கிராமத்தினர் மற்றும் அதனை சுற்றியிருக்கூடிய கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து நண்பர்களும் உறவினர்களும் வருகை தந்தனர்.
நாகரிகமாக வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் தங்களுடைய அடையாளங்களை தமக்கே தெரியாமல் தொலைத்து செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் நம் சகோதரர் சந்திர மோகன் அவர்கள் தன் தந்தைக்கு அவர் கட்டிய மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா நிகழ்வு நம் இளைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை அதற்கு காரணமான சகோதரர் "சந்திர மோகன்" அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம் !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம் - காரைக்குடி மற்றும் மதுரை
No comments:
Post a Comment