கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் செங்கம் கு.ராஜாராம் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செந்தில்வேலவன் வரவேற்றார்.
கோகுலம் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு யாதவர் மகாசபை பொதுச் செயலர் (பொறுப்பு) எஸ்.வி.சிவபெருமான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், ஆடு, மாடு நலவாரியம் உருவாக்கி யாதவர்களை தலைவராக நியமிக்க வேண்டும், பால்வளத் துறை அமைச்சராக யாதவரை நியமிக்க வேண்டும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட கட்சியின் சார்பில் மாவட்டத்தில் தலா ஒரு சீட்டு யாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment