Quick Links

Friday, January 8, 2016

ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வலியுறுத்தல்



ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு யாதவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இந்தச் சபையின் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட்டு, விகிதாசார அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாவட்டத் தலைவராக ஆர். சீனிவாசன், செயலராக எஸ்.ஏ. யாதவ், பொருளாளராக ஜெ. துளசிராமன் உள்பட 10 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர் ஏ.எஸ். பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment