"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, January 7, 2014

YADAVA POLITICAL CONFERENCE MADURAI - 1971



In the year 1971 the DMK which was controlling the Tamilnadu politics with full strength neglected Yadavas by not giving proper representation to the participation of Yadavas in Assembly and Parliament.

Year
Total No.
Name
Legislative Assembly
1937
1
Shri L.S. Karayalar
Kovilpatty
1946
1
Shri L.S. Karayalar
Kovilpatty
1952
1
Shri K. Ramasamy Das
Kovilpatty
1957
1
Shri K.Sathanantha Karayalar
Tenkasi
1962
1
2
Shri Rama Arangannal
Shri T. P. Alagamuthu
Mylapore
Perambalur
1967
1
2
3
4
5
Shri Rama Arangannal
Shri T. P. Alagamuthu
Shri C. Govindarajan
Shri M.R. Kannan
Shri M. Bupathy
Mylapore
Uppliapuram
Madurai Central
BasinBridge
Coimbatore
1971
1
2
3
4
5
6
Shri Rama Arangannal
Shri T. P. Alagamuthu
Shri K. R. Krishnan
Shri M.R. Kannan
Shri N. Manickam
Shri Padmanabhan
Egmore
Uppliapuram
Uthankaria
Basin Bridge
Pennagaram
Tirunelvelli
1977
1
2
3
Shri S.Balakrishnan
Shri N. Lakshminarayanan
Shri S. Muthusamy Karayalar
Mudukulathur
Madurai Central
Tenkasi
1980
1
2
Shri K.Sathanantha Karayalar
Shri S. Anguchamy
Tenkasi
Thiruvadanour
1985
1
2
3
4
5
Shri A. Deivanayagam
Shri T. Perumal
Shri K. Solairaj
Shri Ella Rajamanickam
Shri Rajarathinam Mani
Madurai Central
Kadayanallur
Marungapuri
Tambaram, Madras
Villupuram
1989
1
2
3
4
Shri Dr. M. Tamilgudimagan
Shri M. A. Vaithialingam
Shri S. Paulraj
Shri AChiyur Mani
Ilayangudi
Tambaram, Madras
Madurai,Central
Nanguneri
1991
1
2
3
4
5
6
Shri S. Kannappan
Smt. S. Mallika
Shri A. Deivanayagam
Shri S. Balakrishnan
Shri S. Kannan
Shri  S. Alagiri
Thirupathur
Bhuvanagiri
Madurai Central
Mudukulathur
Thiruvannamalai
Chidambaram

Yadavas were to contest the elections. Without a short notice (5 days notice) the Yadava Political Conference was arranged on 31.01.1971 which was attended by least people. No pandal was erected. Only on the ground all sat and heard the deliberation. The conference was organized by Tamilnadu Yadava Association under the stewardship of Shri E.Rengasamy and Shri D. Nagendhiran. When the conference was in session the Hon. Chief Minister Dr. Kalianjar M. Karunanidhi who was at Madurai saw with his own eyes the enthusiasm of Yadava Youth and send word to the conference to send delegates to meet him and accordingly Shri K. Sreenivasan Karayalar, Shri E. Rengasamy met the Hon. Chief Minister at circuit house on the same day. This yielded good result of getting additional seats for Yadavas to contest in the General Election in 1971.
In the year 1989 the Tamilnadu Yadava Maha Saba took a decision to boycott the General Election because the government has not acceded to any of its demands and no party also fielded any Yadavas for the Lok sabha poll. Because of this agitation DMK nominated a Yadava to contest from Pudukottai parliamentary seat but he could not succeed. Shri S. Lakshmana Yadav, Shri G. Varadan, Shri D. Nagendhiran under the leadership of Shri Shyamlal Yadav of All India Yadava Maha Saba met Shri Rajiv Gandhi and represented for more seats from the congress party. This yielded good result. In the 1991 Assembly election 4 Yadavas were contested on congress ticket. Previously only 2 seats were given.

Year
Seats
Name
Assembly
1996
1
2
3
4
5
6
Shri Dr. M. Tamilkudimagan
Shri S. Balakrishnan
Shri M.A. Vaithialingam
Shri A. Deivanayagam
Shri S. Alagiri
Shri Sethunathan
Ilayankudy
Mudukalathur
Tambaram – Madras
Madurai – Central
Chidambaram
Tindivanam
2001
1
2
3
Shri S. Balakrishnan
Shri M.A. Vaithialingam
Shri Rubin alias Krishnakumar
Kadalady
Tambaram – Madras
Coimbtore
LEGISLATIVE COUNCIL
1954

Shri M.S. Karayalar

1969 - 71

Shri S. Raghavanandam

1977-85

Shri S. Raghavanandam

LOK SABHA
1971

Shri K. Veeraiah
Pudukottai
 


 

இடையர் இன மக்களின் கோத்திரப் பாகுபாடும் சடங்கு முறையும்

இடையர்
               இடையர் என்பவர் சங்க காலத்தில் ஆயர் என்றழைக்கப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர்,


ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வருஉம் கிழவரும் உளரே


என்று முல்லைத் திணைக்குரிய மக்கள் ஆயர், வேட்டுவர் என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் ஆயர் என்று கூறிய மக்களைத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ஆயருடன் சேர்த்து இடையர், கோவலர், பொதுவர் என்றும் கூறியுள்ளார். பெண்பாலில் ஆயமகளிர், ஆய்ச்சியர், இடைச்சியர், கோவித்தியர், பொதுவியர் என்றும் கூறியுள்ளார்.

இடையர் பெயர்க்காரணம்:
                 முல்லை நிலத்திற்குரிய மக்கள் ஆயர் எனப்பெற்றனர். இவர்களின் முக்கியத் தொழில் ஆனிரைகளைப் பேணிக்காத்தல். அவற்றில் பெறப்படும் பொருள்களை பிற நிலங்களில் கொண்டு விற்றல். மேற்கூறிய தொல்காப்பிய உரையின் மூலம் ஆயர் என்பவரே இடையர் என்பது திண்ணமாயிற்று.
சங்க இலக்கியத் திறனாய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் இடையர் எனும் சொல்லாட்சிப் பற்றிப் பலவாறான விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக,

கிடை என்றால் கால்நடைக் கூட்டம் என்று பொருள். அதற்கு உரியவர் என்ற பொருளில் கிடையர் என அழைக்கப்பெற்று நாளடைவில் அது இடையர் என்றாயிற்று என்று சி.ஈ. இராமச்சந்திரன் குறிப்பிடுவதாகவும்,
செல்வம், வாழ்க்கை நிலை ஆகியவற்றில் தலையாயவராய் (முதல்வராய், முதலிகளாய்) உள்ளவர்க்கும், நாள்தோறும் உழைத்து வயிறு வளர்க்கும் கடையருக்கும் இடைப்பட்டவரே இடையர் என்று மொ.அ. துரை அரங்கசாமி குறிப்பிடுவதாகவும்,

குறிஞ்சி நிலத்துக்கும் மருத நிலத்துக்கும் இடைப்பட்ட முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் இடையர் ஆவர் என்று சக்திதாசன் சுப்பிரமணியன் போன்றோர் கூறுவதாக டாக்டர் அ. முத்துசாமி சங்க இலக்கியத்தில் ஆயர் என்ற நூலில் கூறியுள்ளார்.

இடையர் இனமக்களுக்கு வழங்கபெறும் பட்டப்பெயர்கள்:-
                      முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்களை ஆயர் என்றும் இடையர் என்றும் அழைத்தனர். ஆயர், இடையர் என்றழைக்கப்பெற்ற மக்களுக்குப் பிற்காலத்தில் பல பட்டப்பெயர்கள் வழங்கலாயின. அவையாயின அம்பலகாரர், கரையாளர், கீதாரி, கோன் அல்லது கோனார், சேர்வை, தாஸ், நம்பி, நாயுடு, பிள்ளை, மணியக்காரர், மந்திரி அல்லது மந்தடி, மன்றாடியர், யாதவர், ரெட்டி இவை போன்ற பட்டப்பெயர்கள் இடையர் இன மக்களுக்கு வழங்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது, கீதாரி, கோன் அல்லது கோனார், இடையர், பிள்ளை சேர்வை, யாதவ் போன்ற பட்டப்பெயர்கள் தான் வழக்கில் இருந்து வருகின்றன.

மேற்கூறப்பெற்ற பட்டபெயர்களில் இன்றைக்கு இடையர், கோனார், யாதவர் போன்ற பெயர்கள் மட்டும் பேச்சு வழக்கிலும் சாதி அடிப்படையிலும் காணப்படுகின்றன. இதிலும் சாதிய அடிப்படையில் படித்த, நடுத்தர மக்களிடமும், நகரப்புறங்களில் வாழ்பவர்களின் மத்தியிலும் யாதவர் என்ற பட்டப்பெயரே மேலோங்கியிருக்கின்றது.
இடையர் இன மக்களின் கோத்திரப் பாகுபாடு:-
                           பல வகையான பட்டப்பெயர்களைக் கொண்டுள்ள இடையர் இன மக்களுக்கு அவர்களின் பட்டப்பெயர்களின் அடிப்படையிலும், சடங்கு முறைகளின் அடிப்படையிலும், பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் பல கோத்திரங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளன. அவையாயின, கல்கட்டி இடையர், நார்கட்டி இடையர், பால்கட்டி, பஞ்சாரம் கட்டி, சிவியர், சோழியாடு, சாம்பார், இராமக்காரர், பூச்சுக்காரர், கொக்கிக்கட்டி போன்ற பல கோத்திரப் பெயர்களைக் கொண்டுள்ளனர்.
சடங்குமுறைகள்:-
சடங்கு என்பது மக்களின் வாழ்வில் நிகழும் நிகழ்வைக் குறிப்பதாகும். இந்நிகழ்வானது நிகழ்த்தப்படும் தன்மைக்கு ஏற்றவாறு சடங்கு, விழா தேவை, போன்று வேறுவேறு சொற்களால் குறிக்கப்படுகின்றன. மரபு வழியாகச் செய்யப்படும் செயல்களும் சில சமயங்களில் சடங்கு என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. மரபு வழியாகச் செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன.
நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் சடங்கு முறைகள் அனைத்தும், ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு சமயத்தவருக்கும், ஒவ்வொரு வகையாக அமைகின்றன. இவ்வகையில் பல கோத்திரப்பாகுபாடுகளைக் கொண்டுள்ள இடையர் மக்களின் சடங்கு முறைகள் ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும், ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளன.

நார்கட்டி இடையர்:-
நார்கட்டி இடையர் எனும் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள், கணவன் இறந்த பின்பு பனை ஓலை அல்லது நாரைத் தன் கழுத்தில் அணிந்து கொள்ளுவர். நாரைக் கழுத்தில் அணியும் வழக்கத்தால் தான் இவர்களுக்கு நார் கட்டி இடையர் என்ற பெயர் கோத்திரப் பெயராக வழங்கலாயிற்று. இவர்கள் தங்கள் கோத்திரத்திற்குள் மட்டுமே பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் போன்ற நிலை ஆரம்பகாலங்களில் காணப்பெற்றது. ஆனால் தற்பொழுது பிற கோத்திரத்திற்குள்ளும் எடுப்பு, கொடுப்பு முறைகள் காணப்படுகின்றன. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், அரசாணி போன்ற சடங்குகள் நடைபெறும்.

கல்கட்டி இடையர்:-
கல்கட்டி இடையர் எனும் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள், திருமணத்தின் போது தாலியுடன் சேர்த்து கல்மணி பாசியை அணிந்து கொள்வர். இவ்வகை கோத்திரத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் கோத்திரத்திலேயே பெண்ணெடுத்தல், கொடுத்தல் முறையினைப் பின்பற்றுவர். இக்கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் மூக்குத்தி அணிந்துகொள்ளும் வழக்கமுடையவர்கள். இவர்களின் சடங்கு முறைகள் நார்க்கட்டி இடையரிலிருந்து சில வேறுபாடுகளுடன் காணப்படும்.

சிவியர் இடையர்:-
இடையரின் மக்கள் முல்லை நிலக் கடவுளாகிய திருமாலை வழிபடக் கூடியவர்கள். திருமாலுக்கு மிகவும் பிடித்தமான பால், நெய் முதலியவற்றை விற்றல் சிவியர் என்னும் கோத்திரத்தினரின் முக்கியத் தொழில். அதிலும் மேலானது இறைவனின் பல்லக்கைத் தாங்கிச் செல்பவர்களும் இக்கோத்திரத்தைச் சார்ந்த குடும்ப மக்கள் தான். இவர் நெற்றியில் நாமம் அணிந்து கொள்வர். இறைவனைத் தூக்கிச் செல்லும்போதும் விழாக்காலங்களிலும் புத்தாடை அணிந்து கொள்வர். சிவியர் கோத்திரத்தில் மட்டும் தான் பெண் எடுத்தல், கொடுத்தல் நிகழும், பிற கோத்திரத்தில் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ மாட்டார்கள்.

இராமக்கார இடையர் (நாமம்):-
இராமக்கார இடையர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள், எப்பொழுதும் நெற்றியில் ராமம் அணிந்து கொள்வர். புரட்டாசி மாத விரதம் மேற்கொள்வர். நண்டு உட்கொள்ள மாட்டார்கள். சனிக்கிழமை விரதம் மேற்கொள்வர். இவர்களும் தங்கள் கோத்திரத்திற்குள்ளேயே எடுத்தல், கொடுத்தல் வைத்துக்கொள்வர். ஆனால் இப்பொழுது பிற கோத்திரத்திலும் பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் முறையானது வழக்கில் இருந்து வருகிறது.
இவ்வாறு இடையர் மக்களின் கோத்திரச் சடங்கு முறைகள் பலவாறாக அமைந்துள்ளன

முதன் முதலில் ஆட்சி முறையை அறிமுகபடுத்திய ஆயர்கள்

                                  முல்லை நில மக்கள், ஆயர், இடையர், கோவலர், அண்டர் முதலிய பல பெயர்களாற் குறிப்பிடப்படுவர். அவர்கள் காட்டு ஒதுக்குகளில் சிறு இல்லங்கள் கோலி வாழ்ந்தனர். இல்லங்கள் வரகு வைக்கோலால் வேயப்பட்டன. முற்றத்தே இறுக்கப்பட்ட முளைகளில் இராக்காலங்களில் ஆடு மாடுகள் கட்டப்பட்டன. குடியிருப்பைச் சுற்றி விழங்குகள் நுழையாதபடி முள் வேலி யிடப்படடிருந்தது. விடியற்காலத்தே இடைப்பெண்கள் தாழிகளில் உறைந்திருக்கும் தயிரை மத்துப்பூட்டிக் கடைந்தார்கள். அவர்கள் மோரையும் வெண்ணெயையும் அயல் இடங்ளுக்குக் கொண்டுசென்று விற்றார்கள். ஆடவர் விடியற்காலத்தே மாடுகளையும் ஆடுகளையும் மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செந்றார்கள், அவைகளைப் புலி கோநாய் முதலிய விலங்குகள் கொல்லாதபடி காவல் காத்தார்கள். ஆடுகளும் மாடுகளும் மேயும் போது அவர்கள் மர நிழல்களில் இருந்து இனிய பண்களைப் புல்லாங்குழலில் வாசித்தனர். கொன்றைப் பழத்தைக் குடைந்து நெருப்புக் கொள்ளியால் துளையிட்டுச் செய்த குழல்களிலும் அவர்கள் இனிய இசைகளை அமைத்துப் பாடினார்கள்.

கோனார் பெயர் காரணம்
            தமிழர்களின் செல்வம் ஆடு மாடுகளே ஆகும். மாடு என்னுஞ் சொல் ஒருகாலத்தில் செல்வம் என்னும் பொருளில் வழங்கிற்று. அதனால், மக்கள் ஒருகாலத்தில் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்தார்கள் என அறிகின்றோம். ஆடு மாடுகள் மேய்வதற்குப் பொது மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. அவை குடும்பங்களுக்குச் சொந்தமாயிருந்தன. குடும்பங்களுக்குரிய மேய்ச்சல் நிலங்கள் சிறிது சிறிதாகப் பிரிக்கப்படின் அவை ஆடு மாடுகள் மேய்வதற்கு ஏற்றனவாகா. அகவே இடையர் குடும்பங்களாக வாழ்ந்தனர். சொத்துக், குடும்பத்தவர்கள் எல்லாருக்கும் பொதுவாக விருந்தது. குடும்பத்தவருள் மூத்தவன் குடும்பத் தலைவனாயிருந்தான். மற்றவர்கள் அவனுக்கு அடங்கி நடந்தார்கள். பல குடும்பங்களுக்குப் பெரிய தலைவன் ஒருவன் இருந்தான். இவ்வாறு பண்டை மக்களிடையே ஆட்சி முறை உண்டாயிற்று. கோ என்னும் சொல் மாட்டைக் குறிக்குமாதலால் அதனையுடையவன் கோன் எனப்பட்டான். கோன் என்னுஞ் சொல் அரசனையும் குறிக்கும். அதனால் ஆட்சி முறை இடையருள்ளேயே தொடங்கிற்றெனக் கருதப்படுகின்றது. கோன் ஆட்டுமந்தைகளை மேய்க்கும் கோலைக் கையிடத்தே வைத்திருந்தான் அக்கோலே ஆட்சியை உணர்த்தும் செங்கோலாக மாறிற்று.

      இடையரின் குலதெய்வம் திருமால். ஆயர் பாற் பொங்கல் இட்டுத் திருமாலை வழிபட்டனர். மகளிர் கைகோத்துக் குரவை ஆடித் திருமாலின் புகழ் பாடினர். கண்ணபிரான் இடைக்குலத்தினன். பாரதப் போருக்குப்பின் முல்லை நிலத்தாரின் திருமால் வணக்கம் கண்ணன் வணக்கமாக மாறிற்று.

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை 

யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
அதில் கூறியுள்ளவை

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வண்க்கம்,


            யாதவ மகாசபை சார்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை  யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு மாநாடு, பேரணி, கூட்டங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சென்னை மன்ரோ சிலை அருகிலிருந்து பேரணியும், 25.04.2010 நெல்லையில் மாநில மாநாடும், 21.08.2010 சென்னையில் பேரணியும், 30.01.2011 சென்னை ராயபேட்டையில் மாநில மாநாடும், 25.04.2012  சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியுள்ளோம்.

மெலும் யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டுயலில் சேர்க்க கோரி லட்சக்கணக்கனா யாதவர்களின் கையெழுத்தை பெறும் இயக்கமும் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கையை நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் கடந்த ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை என்பது வரலாற்று உண்மை.

தங்களது ஆட்சிக்காலத்தில் தான் யாதவ குல முதலி சுத்ந்திரப் போர் வீரன்
அழகுமுத்துக் கோனுக்கு சென்னையில் சிலை வைத்ததும், போக்குவரத்து கழகத்துக்கு பேர் வைத்து பெருமை சேர்த்ததை நாங்கள் அறிவோம்

சமுக நீதி காத்த வீராங்கை என்ற பட்டத்திற்கு ஏற்றபடி யாதவைகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையில் யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ஆவண செய்ய வேண்டுகிறோம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீட்டாக ஏழு சதவீதம் யாதவர்களுக்கு ஒதுக்குமாறு யாதவர்கள் இந்த ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறோம்



 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar