"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, February 17, 2014

மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங்

மத்தியில் 3-வது அணி  ஆட்சி அமைக் கும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்  முலாயம்சிங் யாதவ் கூறினார். கோரக் பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முலாயம்சிங் பேசியதாவது:

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்த லில் 3-வது அணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில்  காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை  கிடைக்காது. அந்த நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.  அதற்கு 3-வது அணிதான் தீர்வாக அமையும்.  3 -வது அணி ஆட்சி அமைக்கும். அந்த அரசாங் கத்தில் நாம் பெரிய கட்சியாக பங்கேற்போம். நான் பிரதமர் ஆக மக்கள் ஆதரவு தர வேண்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80  தொகுகிதளிலும்  நாம் வெற்றி பெற்றால் போதும். நமக்கு ஆட்சி அமைக்கும் பலம் கிடைத்துவிடும். வேறு எந்த மாநிலத்திலிருந்தும் இவ்வளவு தொகுதிகள் கிடைக்காது.  பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும்  இடையேதான் போட்டி நடைபெறுகிறது.

காங்கிரஸும், பாஜகவும் விவசாயி களையும், முஸ்லிம்களையும் மறந்து விட்டன. அவர்கள் தான் இந்த நாட்டை  உருவாக்கியவர்கள். நான் சொல்வதைக் கேட்டால் நாட்டில் பண வீக்கம் குறையும்.நமது நாட்டில் அதிக அளவு சர்க்கரை உற்பத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசு சர்க்கரையையும், கோதுமையையும்  இறக்குமதி செய்கி்றது.  

இந்தத் தவறான கொள்கையால் விவசாயிகள் பலவீனப்படுத்தப் படுகிறார்கள். ஆந்திராவை பிரிப்பதன் மூலம் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும்  பிரிவினைக்கு ஆதரவளிக்கின்றன. இதுவே இரு கட்சி மோதல்களுக்கும் காரணம்.  பாராளுமன்றத்தில்  நடந்த மோதல்களுக்கு இந்த இரு கட்சிகளுமே காரணம் என்று அவர் சிதினார்

Related Posts:

  • யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services உறவுகளுக்கு, வணக்கம். யாதவர் தன்னுரிமைப் பணியகம்/Yadava Empowerment Services நாம் நமது உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ, நமக்குள் இணைப்பை ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற, ஒத்த கருத்துள்ளவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க 'யாதவர் … Read More
  • செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் மிக விரைவில் திறக்கப்பட உள்ளது - யாம்/YES உறவுகளுக்கு வணக்கம். செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் குடும்பத்தாரின் முயற்சியாலும் சமூகப் பெரியவர்கள் உதவியுடனும் மிக விரைவில் இராமநாதபுரம், அபிராமம் - அகத்தாரிருப்பு கிராமத்தில் திறக்கப்பட… Read More
  • சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ… Read More
  • திருவண்ணாமலை யாதவர் சங்கமம் அறிக்கை யாதவ சொந்தங்களுக்கு வணக்கம், தற்போது இணையதலத்தில் திருவண்ணாமலையில் உள்ள அழகுமுத்து கோன் சிலை அவமதிக்கபட்டதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது. அது 2011 ஆம் ஆண்டு நடந்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சில நபர்கள் அந்த தகவ… Read More
  • ஆநிரை கவர்தல் பசுக்களை முதன் முதலில் வீட்டுப் பிராணிகளாக வளர்த்தவர்கள், தெற்காசியாவில் உள்ள இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்பதே மரபணு ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபு  பசுக்களை வைத்திருப்பதே செல்வம் என்று நினைத்த மக்கள் வாழ்… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar