"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, July 3, 2018

'யாகூ' நம் தொழில்முனைவோர் பயிற்சி முகாம்


வேலை தேடுவோர் அல்ல 'யாம்', வேலை கொடுப்போரே 'யாம்'

'யாகூ' வரலாற்று நிகழ்வின் துவக்க நாயகன் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS, (Small & Medium Scale Industries, Secretary to the TN Government) அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி 'யாகூ 2018' தொழில் முனைவோர் இரண்டு நாள் பயிலரங்கை துவக்கிவைத்து, தமிழக அரசின் தொழிற் கொள்கை குறித்த எளிமையான விளக்கமும், தொழில்முனைவோருக்கு உதவ விரும்பும் அவரின் உற்சாகப் பேச்சும் கேட்ட அனைவரையும் ஈர்த்தது.



நம் முதல் தலைமுறைத் தொழில் முனைவோருக்காக 'யாம் கூடுகை' என்னும் 'யாகூ' தொழில் முனைவோர் பயிற்சி முகாம் சர்வதேசத் தரத்தில் சென்னை - வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டலில், ஜீன் 23 & 24 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை, தலைவர் டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நம் இளைஞர்கள் 'வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்' என்பதை அடிநாதமாகக் கொண்டு, நம் முதல்தலைமுறை தொழில்முனைவோர்களை முதல் கட்டமாக 20-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆர்வமுள்ள 100 இளைஞர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நோக்கம் இளையோருக்குள் நல்ல அறிமுகம், இணைப்பு, தொழில் விரிவாக்கத்திற்கான சூட்சுமங்கள், நெறிமுறைகள் முதலானவற்றை கற்றுக் கொள்ளவும், அந்தந்தத்துறையின் சமகால நிகழ்வுகள், புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்கள் முதலானவற்றை உள்வாங்கித் தத்தம் தொழில் நிலைப்பாடுகளைச் செம்மையாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும். தொழில் அதிபர்களுடன் நேரடியாக உரையாடி உத்வேகம் பெற வைக்கும் என்ற அடிப்படையில் நடைபெற்றது.
தொடரும்...யாகூ 2018

Related Posts:

  • நெல்லையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டி இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் நெல்லை பாராளுமன்ற வேட்பாளராக யாதவ மகாசபை  நிறுவனர் தேவநாதன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணியளவில் … Read More
  • முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறத… Read More
  • மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய மக்கள் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத்  தலைவர் பாலு தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிறுவனரும் இந்திய… Read More
  • ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை வரலாறு கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒ… Read More
  • யாதவ பெருமக்களுக்கு - ஒரு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டாக்டர் திரு. M. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், Indian Bank அவர்கள் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற (April 2014) தேர்தலில் யாதவர்களின் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவுக்கும் கூட… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar