"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, November 20, 2013

அண்ணா ஹசாரே

அண்ணா ஹசாரே ஒரு சமூக ஆர்வலர் ஆவார். ஊழலுக்கு எதிரான ஒர் அமைப்பான “ஜன லோக்பால்” என்ற மசோதா முன்வரைவை முன்வைத்து, ஹசாரே பெரும் போராட்டத்தை நடத்திக்காட்டி அனைவராலும் “இரண்டாம் காந்தி” என்று அழைக்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அஹமது நகர் மாவட்டம் பர்தேர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது. ராணுவ அதிகாரியாக பணியாற்றிய பிறகு மக்களுக்கு சேவைசெய்வதையே தன்னுடைய வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்ட அண்ணா ஹசாரேவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.


Anna Hazare


பிறப்பு
கிசான் பாபுராவ் ஹசாரே எனப்பட்ட அண்ணா ஹசாரே அவர்கள், 1937 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்திலுள்ள பிங்கார் என்ற இடத்தில் பாபுராவ் ஹசாரேக்கும், லட்சுமிபாய் ஹசாரேக்கும் மூத்தமகனாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் மற்றும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
அண்ணா ஹசாரேவின் தந்தை ஒரு மருந்தகத்தில் வேலைபார்த்து வந்தார், ஆனால், அவருடைய வருமானம் போதாத காரணத்தால் அவர்களுடைய மூதாதையர் வாழ்ந்த கிராமமான “ரலேகன் சித்தி” என்ற இடத்திர்கு அவருடைய குடும்பம் இடம் பெயர்ந்தது. உறவினரின் உதவியால் ஏழாம் வகுப்புவரை படித்த அண்ணா ஹசாரே அவர்கள், நிதி பற்றாக்குறையால் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஏழாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, மும்பை ரயில் நிலையத்தில் பூ விற்க ஆரம்பித்தார். பிறகு தனியாக பூக்கடை ஒன்றினையும் தொடங்கினார்.
இந்திய இராணுவத்தில் அண்ணா ஹசாரே
1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போர், இந்திய இராணுவத்தில் அவசர ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. ஹசாரே போதிய உடல்தகுதி இல்லாதவராக இருந்த போதிலும், 1963 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, பயிற்சி மேற்கொண்ட பிறகு ஒரு சிப்பாயாக தன்னுடைய பணியைத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் “கேம் கரன்” துறையில் எல்லைப்பணிக்காக அனுப்பப்பட்டார் அங்கு நடந்த போர்கல அனுபவம் அவரை மிகவும் பாதித்தது என கூறியுள்ளார். அவர் தன்னுடைய ஓய்வு நேரங்களை சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவே போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி படிப்பதில் செலவிட்டார். பிறகு 1975 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வினை பெற்றுக்கொண்டு, தனது சொந்த ஊரான “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு வந்தார். 13 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்த அவர் சிக்கிம், பூட்டான், ஜம்மு & காஷ்மீர், அசாம், மிசோரம், மற்றும் லடாக் போன்ற பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.
ரலேகன் சித்தி கிராமத்தை மேம்படுத்துவதில் ஹசாரேவின் பங்கு
அண்ணா ஹசாரே அவர்கள், இராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தன்னை மக்கள் சேவைக்கு அற்பணிக்க விரும்பினார். கடுமையான வறுமை, தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுசூழல் மற்றும் ஒரு நம்பிக்கை இழந்த கிராமமாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமத்திற்கு சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென தீர்மானித்தார். இராணுவப் பணியில் தான் சம்பாதித்த பணத்தைக்கொண்டு, அழியும் நிலையிலிருந்த கோவிலை மீட்டு சீர்படுத்தினார். அதிக அளவில் இளைஞர்கள் தங்களை இந்த பணியில் ஈடுபடுத்திகொண்டதால் “தருண் மண்டல்” என்ற இளைஞர்கள் இயக்கத்தை தொடங்கினார். இதன் மூலம் கிராமத்தில் மதுக்கடைகளை மூடியது மட்டுமல்லாமல், மதுகுடிப்பவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. கிராமத்தில் பீடி, புகையிலை மற்றும் சிகரெட் போன்றவை விற்கத் தடைவிதிக்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு “தானிய வங்கி” என்ற ஒன்றை தொடங்கி, குறைந்த விலையில் தானியம் வழங்கப்பட்டு பசி மற்றும் கடன் தொல்லைக்கு முற்றுபுள்ளி வைத்தார். பிறகு “ஆற்று பள்ளதாக்கு வளர்ச்சித் திட்டத்தை” உருவாக்கி நிலத்தடி நீர் சேமிப்பின் மூலம் பாசனத்தை மேம்படுத்தவும் செய்தார். இந்த திட்டத்தின் மூலம், தண்ணீர் பற்றாக்குறை பெருமளவு தீர்க்கப்பட்டது எனவும் கூறலாம். அவர் அந்த கிராமத்திற்கு வரும்பொழுது 70 ஏக்கர் நிலத்தில் மட்டுமே பாசனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வளர்ச்சித் திட்டத்திற்கு பிறகு 1500 ஏக்கராக மாறியது. கால்நடை வளர்ச்சியை ஊக்குவித்து, பால் உற்பத்தியை பெருக்கவும் வழிவகை செய்தார். கிராமத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த 1976 ஆம் ஆண்டு ஒரு மாதிரிபள்ளியும், 1979ல் ஒர் உயர்நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. ரலேகன் சித்தி கிராமத்தில் நிலவிய சமூக தடைகள் மற்றும் பாகுபாடுகள் அறவே ஒழிக்கப்பட்டது. “கூட்டு திருமண திட்டத்தின்” மூலம் ஏழை எளிய மக்களின் கடன் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு புறக்கணிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையிழந்த இந்திய கிராமங்களில் ஒன்றாக இருந்த “ரலேகன் சித்தி” கிராமம், இந்தியாவில் பல கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியது எனலாம். இந்த கிராமத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு அவருடைய சிறப்பான பங்களிப்பை பாராட்டி நாட்டின் உயரிய விருதான “பத்ம பூஷன்” விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரானப் போராட்டங்கள்
ஊழலுக்கு எதிராக போராட ஒரு வெகுஜன இயக்கமான “பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன்” என்ற மக்களமைப்பை 1991 ஆம் ஆண்டு, அண்ணா ஹசாரே “ரலேகன் சித்தி” கிராமத்தில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் 40 வனத்துறை அதிகாரிகள் மற்றும் மர வியாபாரிகளின் கூட்டு சதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், தற்கால பணிநீக்கம் மற்றும் இடமாற்றத்திற்கு வழிவகுத்தது. 2003 ல் தேசியவாத காங்கிரசு அமைப்பின் நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டை எழுப்பி, 2003 ஆகஸ்ட் 9 ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார். பிறகு, சுஷில் குமார் தோஷி அவரின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, தனிநபர் ஆணை குழு ஒன்றை நியமித்ததால், 2003 ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் மற்றும் அரசு உதவிப்பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட “தகவல் பெரும் உரிமைச் சட்டம்” 2005 ஆம் ஆண்டு நீக்கப்பட்டதால், இதற்கு எதிராக 2006 ஆகஸ்ட் 9ஆம் தேதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பிறகு, அரசு தன்னுடைய முடிவை மாற்றி கொண்டதால், 2006 ஆகஸ்ட் 19 ஆம் தேதி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இடமாற்றங்கள் ஒழுங்குமுறை மற்றும் உத்தியோகப்பூர்வ பணியில் தாமதம் போன்றவற்றிற்காக அண்ணா ஹசாரே கடுமையாகப் போராடினார். உணவு தானியங்களிலிருந்து, மது தயாரிக்க ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்தும் போராடினார்.
ஜன்லோக்பால் மசோதா இயக்கம்
2011 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான “ஜன் லோக்பால் மசோதாவை” (இந்தியாவில் ஊழல் மற்றும் பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மசோதா ஆகும்) இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என ஒரு சத்தியாகிரக இயக்கத்தைத் தொடங்கினார். உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, வழக்கறிஞர் பிராஷாந்த் பூஷன், அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் “ஊழலுக்கெதிரான இந்தியா” என்ற இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்ந்து இந்த “ஜன் லோக்பால் மசோதாவை” வரையறுத்தனர். சுதந்திரமான இந்த மசோதாவை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்ததால், ஹசாரே தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரதத்தை 2011 ஏப்ரல் 5 ஆம் தேதி புது தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் தொடங்கினார்.
இந்த ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டம் நாடுமுழுவதும் லட்சகணக்கான மக்களை அணிவகுக்கச் செய்தது. மேதா பட்கர், சமூக ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி, ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் தங்களுடைய ஆதரவைக் கொடுத்தனர். சென்னை, மும்பை, அகமதாபாத், ஷில்லாங் போன்ற பலநகரங்களில் எதிர்ப்புகள் பெருகியதால், 2011 ஏப்ரல் 8 ஆம் தேதி அரசாங்கம் இவ்வியக்கத்தின் கோரிக்கைகளை ஏற்றது மட்டுமல்லாமல், ஒரு கூட்டுக்குழு அமைக்கவும், அந்த கூட்டுக்குழுவில் இந்திய அரசால் தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் ஐந்து மக்கள் சமூக பிரதநிதிகள் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால், 2001 ஏப்ரல் 9 ஆம் தேதி அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார். இந்த கூட்டுக்குழு அமைப்பில் இந்திய அரசு வேட்பாளராக பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோரும் அரசியல் அல்லாத சமூக பிரதநிதிகளாக அண்ணா ஹசாரே, என்.சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் இடம் பெற்றனர்.
உண்ணாவிரதத்தை முடித்துகொண்ட அவர், 2011  ஆகஸ்ட் 15 ஆம் தேதியை மசோதா அமைக்க கெடுவாக விதித்தார். கருப்புப்பணத்திற்கு எதிராகவும், ஊழலுக்கெதிராகவும் அரசாங்கத்தின் தீவிரத்தை எதிர்த்தும், 2011 ஜூன் 5 ஆம் தேதி சமூக பிரதிநிதிகள் உண்ணாவிரதத்தில் இருந்த பொழுது, சுவாமி ராம்தேவ் அவர்களைக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல், லோக்பால் மசோதா நிறைவேற்ற படவில்லையென்றால், 2011  ஆகஸ்ட் 16 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்போவதாக அறிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதினார். 2011 ஆகஸ்ட் 16 ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்க இருந்த அவரை, இந்திய அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி கைதுசெய்தது. ஆனால், சிறையில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கிய ஹசாரேவிற்கு நாடுமுழுவதும் மக்களிடமிருந்து ஆதரவு பெருகியது. 2011 ஆகஸ்ட் 20 ஆம் தேதி விடுதலைசெய்யப்பட்டு ராம் லீலா மைதானத்திற்கு வந்த அவர், வலுவான “ஜன் லோக்பால் மசோதா” நிறைவேற தனது கடைசி மூட்சிவரை போராடப் போவதாகவும் அறிவித்து, தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். 2011 ஆகஸ்ட் 28 ஆம் தேதி “லோக்பால் மசோதா” ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
ஊழலுக்கெதிரான தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை தன் பின்னால் அணிவகுக்கச் செய்த காந்தியவாதியான அண்ணா ஹசாரேவிற்கு இந்தப் போராட்டம் வெற்றியைத் தந்தாலும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அவர் மேல் விழத்தான் செய்தது. இருந்தாலும், அவருடைய போராட்டங்கள் இந்திய வரலாற்றில் மற்றுமொரு சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தியது எனவும் கூறலாம்.
விருதுகளும் அங்கீகாரங்களும்:
  • 1986 – “இந்திரா பிரியதர்ஷனி வ்ரிஷமித்ரா விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1989 ஆம் ஆண்டு “வேளாண் பூஷணா விருது” மகாராஷ்டிர அரசால் வழங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டு “பத்ம ஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு “பத்ம பூஷன்” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • 1996 ஆம் ஆண்டு “ஷிரோமணி விருது” வழங்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு “மஹாவீர் விருது” வழங்கப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு கேர் நிவாரண அமைப்பால் “கேர் சர்வதேச விருது” வழங்கப்பட்டது.
  • 2003 ஆம் ஆண்டு “வெளிப்படையான சர்வதேச ஒருமைப்பாட்டு விருது” வழங்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டு ‘காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்’ மூலம் “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு உலக வங்கியால் “சிட் கில் நினைவு விருது” வழங்கப்பட்டது.
காலவரிசை:
1937 – மகாராட்டிரம் மாநிலத்திலுள்ள பிங்கார் என்ற இடத்தில் பிறந்தார்.
1952 – மும்பைக்கு சென்றார்.
1963 – இந்திய இராணுவத்தில் ஓட்டுனராக தேர்வு செய்யப்பட்டார்.
1965 – இந்திய பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானதாக்குதலில் இருந்து உயிர் தப்பினார்.
1975 – இந்திய இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
1990 – “பத்ம ஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
1991 – “பிராஷ்டாசார் விரோதி ஜன் ஆண்டோலன்” என்ற ஊழலுக்கு எதிரான ஒரு மக்கள் அமைப்பைத் தொடங்கினார்.
1992 –“பத்ம பூஷன்” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.
2003 –‘தகவல் பெரும் உரிமை சட்டம்’ அனுமதி பெற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
2011 – ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான “ஜன் லோக்பால் மசோதாவை” கொண்டுவரகோரி உண்ணாவிரத போராட்டம்.
2011 – ஆகஸ்ட் 16 ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்க இருந்த அவரை, இந்திய அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி கைதுசெய்து சிறையில் அடைத்தது.


பாபா ராம்தேவ் (or) ராமகிருஷ்ண யாதவ்.

பாபா ராம்தேவ் அவர்கள், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்திலிருக்கும் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்னும் கிராமத்தில், ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.





ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
அலிப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். எட்டாம் வகுப்பு வரை, அப்பள்ளியில் பயின்ற அவர், பின்னர் குருகுலத்தில் சேர்ந்தார். அவர், பல்வேறு குருக்குலங்கில் சேர்ந்து, இந்திய இலக்கியம், யோகா மற்றும் சமஸ்க்ருதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருக்குலங்களில் சன்யாசிகளிடம் பாடம் கற்ற அவர், அவர்களைப் போலவே மாற விரும்பினார். இதன் வெளிப்பாடாக, அவர் காவி உடைத் தரித்து, துறவறம் பூண்டார். ராமகிருஷ்ண யாதவாகப் பிறந்த அவர், ‘பாபா ராம்தேவ்’ என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டார்.

துறவியாக பாபா ராம்தேவ்
ஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் கல்வா குருகுலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்தார். பின்னர், பண்டைய இந்திய வேதங்களைக் கற்கும் நோக்கமாக அவர் ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்க்ரி விஸ்வவித்யாலயாவிற்குச் சென்றார். அங்குப் பல ஆண்டுகள் செலவிட்ட அவர், அரபிந்தோ கோஷின் ‘யோகிக் சதன்’ என்ற புத்தகத்தைப் படித்தார். அரிய புத்தகமான ‘யோகிக் சதனை’ படித்தப் பிறகு, அவர் இமயமலைக் குகைகளுக்குச் சென்று, சுய கட்டுப்பாடு மற்றும் தியானம் போன்றவற்றில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.

யோகாவும், ராம்தேவும்
சுய கட்டுப்பாடு மற்றும் தியானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், ‘திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை, ஆச்சார்யா நிதின் சோனி அவர்களின் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். முதன்முதலில், அவரது யோகா பயற்சி ‘ஆஸ்தா தொலைக்காட்சியில்’ ஒளிபரப்பானது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால், அவரைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர். அவர், திரைப்படப் பிரமுகர்களான அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, மற்றும் பலருக்கும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், முஸ்லீம் மத குருக்களின் கல்லூரியிலும் யோகா பயிற்சியளித்திருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் யோகா பயிற்சியளித்து பிரசித்தி பெற்ற அவரின் பதஞ்சலி யோகபீடத்திற்கு, ஸ்காட்லான்டடில் ஒரு தீவை, இந்தியாவில் இருந்து சென்று அங்கு குடிபெயர்ந்த தம்பதியர்கள் பரிசாக்கினர். மேலும், அவரது பிராணயாமா பயிற்சிகளாலும், ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை உணர்ந்த அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் சம்பந்தமான பாடங்களை அறிமுகப்படுத்தியது.
அரசியல் மற்றும் சமூக பிரச்சாரங்கள்
பாபா ராம்தேவ் அவர்கள் ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்தியும், ஈடுபட்டும் உள்ளார். அவர், 2011ஆம் ஆண்டில் நடந்த ‘ஜன லோக்பால்’ போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டில், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் கொண்ட பெரிய பேரணியை வழிநடத்தினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் அரசுக்கு, கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், ஒழிக்கவும் அவர் பல வழிகளைப் பரிந்துரைத்தார்.இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், 15 நாட்கள் கழித்து, விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்விளைவாக, ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், ஜம்மு மற்றும் லக்னோ போன்ற இடங்களில் போராட்டங்களை நிகழ்த்திய அவர், பல சமூக ஆர்வலர்களின் விண்ணப்பங்களை ஏற்று 9 வது நாள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.


பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்த லாலு பிரசாத் யாதவ்


லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.




அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.

பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.


அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.

ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.


1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.

லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.



ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.

இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.

2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.


லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
- See more at: http://vannimedia.com/site/news_detail/24807#sthash.pFOBWkKQ.dpuf

Monday, November 18, 2013

நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!

நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)


பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.

கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.

குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.

திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை


முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே வந்தது என்பது பலருக்கும் தெரியும். பரிசு பெற்ற ஒரு புலவர் பரிசு தந்த புரவலரின் - வள்ளலின் பெருமைகளைக் கூறி, அந்த வள்ளலின் ஊருக்குச் செல்லும் வழியை இன்னொரு புலவருக்குச் சொல்லுதல் ஆற்றுப்படை எனப்படும். முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற நக்கீரர் என்னும் தெய்வப்புலவர் திருமுருகனின் பெருமைகளைக் கூறி அவனின் ஊர்களான ஆறு வீடுகளைப் பற்றிப் பாடி மற்றவருக்குச் சொல்வது திருமுருகாற்றுப்படை. இந்த சங்க கால நூலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி என்னும் பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் திருவேரகம் சுவாமிமலை என்றும் குன்றுதோறாடல் 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று சொல்வது போல் இவ்வைந்தும் போக இருக்கும் எல்லா முருகன் திருக்கோவில்களையும் குறிக்கும் என்றும் சொல்லுவார்கள்.

முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடும் இந்தத் திருமுருகாற்றுப்படையில் முப்பெரும் தெய்வங்களாக மூவர் போற்றப்படுகின்றனர்.

...வால் எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள் கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர் புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெரும் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவராக
...

ஒளிவீசும் நெற்றியுடன் தீயென மூச்சினை விடும் அஞ்சும் படி வரும் மிகுந்த வலிமை கொண்ட பாம்புகளும் அஞ்சும் படி அவற்றைத் தாக்கும் பல வரிகளுடன் கூடிய நீண்ட வலிய சிறகுகளைக் கொண்ட பறவையைக் (கருடனைக்) கொடியில் கொண்ட செல்வனும் (திருமாலும்), வெண்மையான எருதின் மேல் எல்லோரும் போற்றும் உமையம்மையோடு அமர்ந்து விளங்கும் இமைக்காத மூன்று கண்களையுடைய மூன்று கோட்டைகளை கொளுத்திய சினம் மிகுந்த செல்வனும் (சிவபெருமானும்), மலை போன்ற உடலையும் அழகான நடையும் நீண்ட தும்பிக்கையும் கொண்ட யானையின் மேல் அமர்ந்திருக்கும் பெருமையும் புகழும் உடைய செல்வனும் (திருமுருகனும்)...

நாஞ்சில் (கலப்பை) கொடியுடைய பலராமனும், புட்கொடியுடைய திருமாலும், எருதேறிய சிவபெருமானும், பிணிமுகம் ஏறிய முருகப்பெருமானும் உலகம் காக்கும் நாற்பெருந்தெய்வங்களாகத் திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகின்றனர் என்ற குறிப்பைக் கண்டு இணையத்தில் திருமுருகாற்றுப்படை நூலைப் பார்த்தேன். நான் தேடிய வரையில் பலராமனைப் பற்றிய பாடல் அடிகள் கிடைக்கவில்லை. சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள என்னால் இயலாததால் பலராமனைக் குறிக்கும் பாடல் அடிகள் என் கண்ணிற்குத் தென்படாமல் சென்றிருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்

பழந்தமிழ் இலக்கியங்களில் தற்போது கிடைக்கும் இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம் என்று கருதப்படுகிறது. தற்போது கிடைக்கும் சங்க நூற்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படும் போது தொல்காப்பியம் இதில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலைபெற்றிருக்கிறது. இந்த சங்க நூற்களின் காலத்தை இன்னும் முன்னால் கொண்டு சென்று கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்குகிறது இப்போது கிடைக்கும் நூற்களின் காலம் என்ற கருத்தும் இப்போது கேட்கத் தொடங்கியிருக்கிறது. தொல்காப்பியத்தின் காலத்தைப் பற்றிய கருத்துகளை விவரிப்பது இந்த இடுகையின் நோக்கமில்லை. இந்த நூலின் தொன்மையைச் சுட்டிக்காட்டுவதற்காக இந்த கருத்துகளை இங்கே தொட்டுச் செல்கிறேன்.

தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே


முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.

இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள். பிற்கால இலக்கியங்களில் எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான் இங்கே மாயோன் என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும். அப்படியே பிற்கால இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும் அவன் சிவனின் மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும் சேயோன் என்பது முருகனே என்ற பொருளும் பொருந்தும். வேந்தன் என்றால் இந்திரன் தானா? இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற பொதுப் பொருளைக் கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும் பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும். வருணன் என்பவன் வடமொழி வேதம் சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு. வடமொழி வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான். இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம் நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். இங்கே பிற்கால இலக்கியங்கள் என்று சொன்னது தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியங்களும் அடக்கம்.

இப்படிப் பொருள் சொல்வதை மறுப்பவர்களும் உண்டு.

***

புறத்திணையியலில் ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்


மாயோனின் நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும்புகழைப் பாடுவதைப் போல் தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை. மாயோனின் சிறப்பையும் பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை. சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும் புகழையும் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுவிடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும் தாவா விழுப்புகழ் என்றும் மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறது என்பது விளங்கும்.

Friday, November 15, 2013

Veeran Azhgumuthu Kone tamil Song Free Download

Indian First Freedom First Freedom Veeran Azhgumuthu kone Songs

Download Veeran Azhgumuthu Kone Songs and Yadavar songs

Veeran azhgumuthu kone Download Songs1

Veeran azhgumuthu kone Download Song2

Veeran azhgumuthu kone Download Song3

Gurusamy Yadav Song Download
மாவீரன் அழகு முத்துக்கோன்

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar