ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Wednesday, July 15, 2015
திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன் அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tuesday, July 14, 2015
Monday, July 13, 2015
திருநெல்வேலி அழகுமுத்துக்கோன் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் அருகேயுள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் சாதிய அமைப்பினரும் வருகை தருவர் என்பதால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், சிலைக்கு மாலை அணிவிக்க ஒவ்வொரு கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.
இதன்படி திமுக சார்பில், அதன் மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைப் பொதுச்செயலர் நிஸ்தார் அலி, மாவட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணகுமார், மாவட்டச் செயலர் ஹரிஹரன் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் கண்மணி மாவீரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.