"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Friday, January 29, 2016

மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரி யாதவ சங்கம் ஆர்ப்பாட்டம்

யாதவ சங்கம்
மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 சதவிகிதம் பிற்படுததப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு செய்து அந்த வேலைவாய்ப்பை முழுமையாக தரவேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் யாதவர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

Tuesday, January 26, 2016

100 Yadava members held in chennai during picketing stir

Nearly 100 members of the Tamil Nadu Yadava Sangam were arrested when they attempted to stage a picketing agitation in front of the Chennai Customs officedemanding the Centre to implement the Mandal Committee recommendations providing 27 per cent reservation for the backward classes.

The agitation was led by its President S Sarasumuthu Yadav.They were arrested as they attempted to lock the office of the Chennai Customs to press their demand.

Stating that yadavas constitute more than 20 per cent of thecountry's population, predominantly in states like Uttar Pradesh,Bihar, Madhya Pradesh, Haryana and Delhi, he sought to knowwhy the government was not willing to provide 27 per cent reservation in jobs in Central government institutions as mandated by the Mandal Commission.

He also sought to know whey the Centre, which was releasingreligion based census, was hesitant to bring in amendmentsto release the caste -based census.

He said agitation was aimed at retrieving the rights of the Yadava community, who constitute about 10 to 14 per cent of Tamil Nadu's population

Saturday, January 23, 2016

Dravidian parties asked to give ticket to Yadava candidates

Gokulam Makkal Katchi
Gokulam Makkal Katchi (GMK), pro yadava political party, demanded dravidian parties to give tickets to people of Yadava caste.

A resolution was passed at the cadres meeting of the party held here on Wednesday. The resolution said that for the last 48 years dravidian parties never gave a ticket to a Yadava candidate either in assembly or in lok sabha elections in the constituencies that are part of the present Tiruvannamalai district. The resolution added that every caste should get its due representation. As Yadavas did not get it, the neglect is fit to be condemned, it added.

Therefore they wanted a ticket each in Tiruvannamalai district in the coming assembly election.

District Secretary K.Rajaram, president M.Rajangam and Treasurer R.Sivakumar were among the participants.

கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டி

பரமக்குடியில் யாதவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டிஅளித்தார்.

ஆலோசனைகூட்டம்

பரமக்குடியில் யாதவ மகாசபையின் ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைகூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாஇளம்பரிதி தலைமை தாங்கினார். தென்னவனூர் சந்திரன் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் வேலுமனோகரன் மற்றும் சண்முகராஜ், செந்தாமரைகண்ணன், பரமக்குடி யாதவர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட பொறுப்பாளர் ஹரிகரன், யாதவ சபை மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவன் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


பின்னர் தமிழ்நாடு யாதவ மகாசபையின் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டில் யாதவ மகாசபை நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. யாதவ சமுதாயத்துக்கு கொடுக்கவேண்டிய அரசியல் அங்கீகாரத்தை அ.தி.மு.க.,தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழங்குவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குகளை பெற வருகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் கண்டுகொள்வதில்லை. 1931–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் 4–வது சமுதாயமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் பேர் உள்ளோம்.


அரசு விழா

வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கவேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். தமிழகத்தில் நீதிபதிகள் நியமனத்தில் யாதவ சமுதாய மக்களுக்கு பங்களிப்பு இல்லாமல் உள்ளது. வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று கட்சிகள் அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சட்டஆலோசகர் சதீஷ்வரன்,வக்கீல் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்

தேர்தலில் யாதவர்களுக்கு அதிக இடம் வழங்கக் கோகுலம் மக்கள் கட்சி கோரிக்கை

கோகுலம் மக்கள் கட்சி
திருவண்ணாமலையில் கோகுலம் மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் செங்கம் கு.ராஜாராம் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செந்தில்வேலவன் வரவேற்றார்.

கோகுலம் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு யாதவர் மகாசபை பொதுச் செயலர் (பொறுப்பு) எஸ்.வி.சிவபெருமான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், ஆடு, மாடு நலவாரியம் உருவாக்கி யாதவர்களை தலைவராக நியமிக்க வேண்டும், பால்வளத் துறை அமைச்சராக யாதவரை நியமிக்க வேண்டும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட கட்சியின் சார்பில் மாவட்டத்தில் தலா ஒரு சீட்டு யாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Tuesday, January 19, 2016

குருசாமியாதவ் நினைவுகல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு

சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பத்தாம் வகுப்புதேர்வில் 470 மேல் எடுத்த மாணவி சீதாவுக்கு குருசாமியாதவ் நினைவுகல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு உயர்திரு உடையார்கோனார் (யாதவ சங்கத்தலைவர் மற்றும் குருசாமியாதவ் க்கு நினைவு கல்யாண மஹால் கட்ட உறுதுணையாக இருந்தவர்) அவர்களால் வழங்கப்பட்டது.மேலும் 2016 ம் ஆண்டு காலண்டர் ஊர்நாட்டாமையால் வழங்கப்பட்டது.

நன்றி.....

Monday, January 18, 2016

இலங்கையும்(ஈழம்) இடையர்களும்! ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்!!

குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,
நாகர்கள்,
இயக்கர் அதாவது யக்க்ஷர்கள்,
வேடர்கள்,
இடையர்கள்,
அமானுயர்கள்,

என்ற இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை அகழ்வாராய்சிகளும் ,அவற்றில் கிடைத்த ஆதார சான்றுகளும், பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறி உள்ள கருத்துக்களும், மெய்பித்தே நிற்கின்றது .இதை உண்மை படுத்த இந்த இனத்தவர்கள் அவர்கள் அறிவுக்கு எட்டியவகையில் எழுதிவைத்த குறிப்புக்கள் ,திட்டம் இட்டு பின் வந்த அரசர்களாலும் அரசியல் ஆளர்களாலும் அந்நிய படை எடுப்பாளர்களாலும் அழிக்கப்பட்டும் சூறை ஆடப்பட்டும் விட்டது எமது துர்அதிஸ்டமே.,,,எஞ்சிய முற்காலத்து தென்னிந்திய மற்றும் ஈழத்தமிழர்களினது குறிப்புக்களும் வரலாற்று நூல்களும் ஜெயவர்த்தனா அரசால் திட்டம் இட்டு யாழ் நூலகம் எரிக்க பட்டபோது அழிந்து விட்டது.

தென்னிந்தியாவில் ஆரம்ப மக்கள் வாழ்ந்த தாக அறியபடுகின்ர அதே காலத்திலேயே ,ஈழத்திலும் மக்கள் வாழ்த்து இருக்கலாம் ஈழத்தின் தெனிந்தியாவுக்கு அண்மித்த அமைவிடத்தை பொறுத்தவரையில் அது சாத்தியமான ஒன்றாகும் ,நாகர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர் என்பதை துவாரக யுகத்தில் நடந்ததாக கூறும் புனை கதையான மகாபாரதம் கூட நிரூபிக்கவில்லை .மகா பாரதத்தில் கூட நாகலோகத்து நாகர்கள் குந்தி தேவியின் உறவினர்கள் நாகதீபத்தில் வாழ்ந்த தாக தான் அறிய முடிகின்றது .

ஈழத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த நாகர்கள் பிற்காலத்தில்அரசர்கள் இராஜ ரட்டை என்று அழைக்க பட்ட ஈழத்தின் வடபகுதிலேயே அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படுகின்றது .இவர்கள் நாகதீபம் அதாவது யாழ்குடாநாடு கடலால் பிரியும் பூநகரிக்கு மேற்பட்ட பிரதேசம் யாழ் தீபகற்பம் இந்த பிரதேசத்தை 26 குறுநில அரசர்களை கொண்ட நாக அரசர்கள் நீதி தவறாமல் ஆண்டு வந்தார்கள் .இவர்கள் தன்னிறைவு கொண்டவர்காகவும் பண்டமாற்று மூலம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தவர்களாகவும் தங்களுடைய தனித்துவமான நாகரிக ஒழுங்கில் வாழ்ந்தவர்களாகவும் ,உறவுமுறைகளில் திருமண பந்தங்களை முறைப்பெண் திருமணம் ,செய்து வந்து வந்தார்கள் ,இயற்கை வழிபாட்டோடு சேர்ந்த தாந்திரிய சைவத்தின் சிவ சத்தி வழிபாட்டையும் நாக பாம்பினை வழிபடும் மரபினையும் கொண்டு இருந்தார்கள் 


நாகர்கள் பேசும் மொழியாக தமிழ் மொழியை பேசினார்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நிய மொழிகளையும் சகோதர மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்து இருக்கலாம் 

ஆரம்பத்தில் வாழ்ந்த யச்ஷர்கள் இனம் .இவர்கள் மாதோட்டம் எனப்படுகின்ற மன்னார் மேற் பகுதியிலும் அனுராத புரம் போன்ற காடுகளை அழித்து உருவாக்கிய பிரதேசங்களிலும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்தார்கள் .இவர்களும் தனித்துவமான இன அடையாளங்கள் கொண்டவர்கள். இவர்கள் குவேனியின் மூதாதையரின் வம்சத்தினை அரச வம்சமாக கொண்டு இருந்தாலும் ஒரு அரசை ஏற்றுகொள்ளும் மனபாங்கு இல்லாத காரணத்தால் ஈழத்தின் ஏனைய பிரதேசங்களையும் காடுகளையும் அழித்து அப்பிரதேசங்களிலும் தமது வாழ்விடங்கள் ஆக்கினார்கள் இதனால் ஈழத்தின் தென் பகுதியிலும் வாழ்விடங்களை அமைத்து கொண்டார்கள்,இவர்கள் உறவு முறை பந்தங்களில் தனித்துவமான பாரம்பரிய கட்டுபாடுகளை கொண்டு இருக்கவில்லை ,திருமண பந்தங்களில் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளும் வழக்கத்தில் வாழ்ந்தார்கள் ,இவர்கள் இயற்கை வழிபாட்டோடு சத்தி வழிபாட்டையும் கொண்டு இருந்தார்கள் இவர்கள் ஏலு மொழியையும் தமிழ் மொழியையும் பேசினார்கள் பொருளாதாரத்தை இவர்களும் பண்டமாற்று மூலமும் தன்னிறைவு தொழில்களின் மூலமும் மேம்படுத்தி வாழ்தார்கள்.

இவர்களே அரை மொட்டை அடித்த நிலையில் நாடு கடத்தப்பட்டு வந்த விஜையனுக்கும் 700 தோழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஈழத்தின் அழிவுக்கு உதவினார்கள்

அடுத்து ஆரம்பத்தில் வாழ்த்த குடிகள் ,,வேடர்கள், இடையர்கள் ,இவர்கள் காடுகளிலேயே வேட்டையாடி மர உரி தரித்தவர்களாக வாழ்ந்தார்கள் .இவர்கள் கொடிய விலங்குகளிடம் இருந்து மற்ற இனங்களை காத்தவர்கலாகவும் இருந்தார்கள் ,இவர்கள் பலகாலமாக தங்கள் தனித்துவத்தை இழக்காமலேயே இருந்தார்கள் இவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் ஈழத்தில் காடுகளில் வாழ்கின்றார்கள் இவர்கள் கதிர்காமத்தை அண்டிய காட்டு பகுதிகளில் வாழ்ந்ததாகவும் ,முருகப்பெருமானையும் ,இயற்கை தெய்வங்களையும் வழிபடும் முறையை கொண்டு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ,

ஈழவம்சத்தினர் தாங்கள் தங்களுக்கு உரிய தனித்துவத்தோடு ,தமது தேவைகளில் மற்றவர்களில் தங்கி வாளாமால் தம் நிறைவு செய்து ,தமக்கான நாகரீக ஒழுங்கில் இஷ்ட தெய்வங்களை வணங்கி வாழ்ந்து கொண்டு இருந்த வேளையில் தான் குற்ற தண்டனையாக அரை மொட்டை விஜயன் ,700 தோழர்களுடன் கி .மு 6 ம் நூற்றாண்டு அளவில் கலிங்க நாட்டில் இருந்து மாதோட்டத்தில் வந்து இறங்கினான.

இடையர்களே குமரிகண்டத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள் என்பதை காட்டும் கலித்தொகை


"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
நல்லினத்து ஆயர்”
(கலித். 104)

தொல்குடி மக்களான நல்லினத்து ஆயர்(இடையர்) என்று தங்கள் பூர்வீகத்தைக் கூறுகிறாள் ஒரு ஆயர் மகள்.3 ஆம் ஊழிக்கு முன் இருந்த இவர்கள் குடியினர்,
ஊழியின் காரணமாக தங்கள் இருப்பிடங்கள் கடலுக்குள் முழுகி விடவே,
பாண்டிய அரசனைத் தொடர்ந்து நிலப்பகுதிக்கு வந்தனர் என்பதை
இந்த வரிகள் தெரிவிக்கின்றன.

தன் நாட்டுப் பகுதியைக் கடல் கொண்டது என்பதற்காக அதனை ஈடு கட்டிக்கொள்ள புலி, கெண்டை பொறித்த சோழர் சேரர் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றிக் தன் கெண்டைமீனைப் பொறித்துக்கொண்டவன் 'வாடாச் சீர்த் தென்னவன்'. நல்லினத்து ஆயர் (பசு வளர்க்கும் ஆயர்) அந்தத் தென்னவன் குடியில் பிறந்தவர்களாம். (கலித்தொகை 104)- நல்லுருத்திரனார்

குமரிகண்டத்தின் ஒருங்கினைந்த பகுதியே ஈழம்(இலங்கை) ஆகும்


 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar