Sunday, November 22, 2015
Home »
» சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவில் உருவான வரலாறு
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவில் உருவான வரலாறு
ஆங்கிலேயர்களுக்கும் சிவகங்கைசீமையின் ராணி வேலுநாச்சியாருக்கும் இடையே சண்டை நடக்கும் போது ஒரு கட்டத்தில் வேலுநாச்சியார் கொல்லங்குடி காட்டு பகுதிக்குள் தஞ்சம் அடைகிறாள்.
வேலுநாச்சியார் குதிரையில் வருகிறாள் அப்போது வெள்ளைக்காரன் தன்னை நெருங்கியவுடன் குதிரையிலுரு
ந்து இறங்கி முட்புதர் ஒன்றில் மறைந்து கொள்கிறார்
அந்த இடத்தில் மாடுமேய்க்கும் யாதவகுல சமுதாயத்தை சேர்ந்த உடையாள் என்கிற இளம் பெண்ணை பிடித்துவைத்து இந்த குதிரையில் வந்த பெண் எங்கே என்று கேட்கிறான் ஒரு வெள்ளைக்காரன்.
அதற்கு அந்த இளம்பெண் சொல்லமுடியாது என்று பதில் சொல்கிறாள்அப்போது வெள்ளையர்கள் நீசொல்லவில்லையென்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று சொல்கிறான்.
இதை புதரில் ஒளிந்து இருக்கும் வேலுநாச்சியார் பார்த்துக்கொண்டு இருக்கிறார் இப்படி வாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இறுதியாக மறைந்து இருக்கும் இடத்தை கூற மறுத்தவுடன் வெள்ளைக்காரன் உடையாளை வெட்டிசாய்க்கிறான் திருமணமாகாத 17வயது இளம் பெண் உடையாள் துடிதுடித்து சாகிறாள்
இதை மனதில்கொண்டு தமது உயிரை கொடுத்து என்உயிரை காப்பாற்றிய உடையாளே என்தெய்வம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்
அந்த இடத்தில் அவளுக்ககு மிகப்பெரிய கோயிலை கட்டி அந்த கோயிலுக்காக பதினெட்டு ஊரையும் நிலத்தையும் எழுதி வைத்து உயிருள்ளவரை தெய்வமாக உடையாளை வணங்கினார் வேலுநாச்சியார்.
இன்று கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவிலாக அது இன்று காட்சி தருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடக்கூடிய முக்கியமான வழிபாட்டு தலங்களுள் ஒன்றாக இன்று அது புகழ்பெற்று திகழ்கிறது.
Regards,
ALEX PANDIAN.P
Related Posts:
கடலூர் யாதவா சங்கத்தின் வேண்டுகோள் அன்பான யாதவ சொந்தங்களே..... ஒரு அன்பான வேண்டுகோள்.... கடலூர் துறைமுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா யாதவா சங்கத்தின் சாா்பில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணா பஜனை மடம் கட்டுமானபணிகள் நடந்துகொண்டிருக்கிறது. யாதவ சொந்தங்கள் தங்களாலான நிதி உதவ… Read More
மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா இரத்ததான முகாம் பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம் "யது குல போராளி" மறைந்த "மாவீரன் குருசாமி யாதவ்" அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா (04/03/2015) "இராமநாதபுரம்" மற்றும் "சங்கரன் கோவில் - ஆட்கொண்டார்குளம்" ஆகிய இரு திசைகளில் இரத்த தானம் … Read More
சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் P.Mani Sivagangai 9047964626. … Read More
பாலை - தேசிய இனத்தைக் கருவாகக் கொண்ட முதல் திரைப்படம் ! - கவிஞர் காசி ஆனந்தன் வழமையான தமிழ்த்திரைப்படப் போக்கிலிருந்து வழி விலகி 'பாலை' திரைப்படத்தை வரைந்திருக்கிறார் இயக்குநர் ம.செந்தமிழன். முல்லை- குறிஞ்சி- மருதம்- நெய்தல்-பாலை எனும் ஐந்திணை நிலமாய்த் திகழ்ந்த தம… Read More
மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன். 1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார்.… Read More
0 comments:
Post a Comment