"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Tuesday, July 29, 2014

கோகுலம் அறக்கட்டளை முதலாம் ஆண்டுவிழா பரிசு போட்டி

Photoகோகுலம் அறக்ட்டளை முதலாம் ஆண்டுவிழா வருகின்ற கிருஷ்ணா ஜெயந்தி அன்று நடைபெறுகிறது அது சமயம் யாதவ இளைஞர் களுக்கு மைபைல் பரிசு வழக்கப்படுகிறது குலுக்கல் நடைபெறும் இடம் சிங்கப்பூர் நடத்துபவர் இசக்கிமுத்து யாதவ் இவ்வாறு கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர் திரு ஜெ முர்த்தி  யாதவ் கூறினார்

அனைத்து யாதவ இளைஞர்கள் தங்களது பெயர் மைபல் நம்பர் கோகுலம் அறக்கட்டளை யில் பதிவு பண்னவும்
Click Here to Register

இப்படிக்கு
ஜெ முர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை நிறுவுனர்

Monday, July 28, 2014

ஆயர்களின் பிரிவுகள்

ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை
          1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து ஆயர்)
                       2.ஆட்டினத்து ஆயர் (புல்லினத்து ஆயர்)
          3.கோவினத்து ஆயர் 

பசுவினத்து ஆயர்
இவற்றில் பசுவினத்து ஆயர்கள் பசுக்கூட்டங்களை மிகுதியாக உடையவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் பசுக்கள் மூலம் கிடைக்கும் பால், வெண்ணெய் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்துள்ளனர். இதனை,
       “............................................................................தொடுதரத்
       துன்னி தந்தாங்கே நகைகுறித்து எம்மைத்
       திளைத்தற்கு எளிய மாக்கண்டை அளைக்கு எளியாள்
       வெண்ணைக்கும் அன்னள் எனக் கொண்டாய்”
                                           ( முல்லைக்கலி.11௦.3-6)
என்ற முல்லைக்கலியின் மூலம் அறியலாம். பசுவினத்து ஆயர் ‘நல்லினத்து ஆயர்’ எனவும் வழக்கப்பெற்றனர். இதனை
        “தொல் இசை நட்ட இசையோடு தோன்றிய
         நல் இனத்து ஆயர்”                      (முல்லைக்கலி 4.5-6)
என்ற முல்லைக்கலியின் பாடல்வரிகள் சுட்டுகின்றன.

          இவ்ஆயர்களின் தலையாய பணி ஆநிரைகளை மேய்த்தலும் பால் கறத்தலும் ஆகும். கறந்த பாலினைத் தயிராகவும், மோராகவும் பக்கவப்படுத்தி அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று விற்று வருதல் ஆயர்குலப் பெண்களான ஆய்ச்சியரின் வேலையாகக் கருதப்பட்டது.
இதனை இக்குலப் பெண்கள் மனமுவந்து செய்து வந்தனர் என்பதை,
          “அஃது அவலம் அன்று மன்
          ஆயர் எமர் ஆனால், ஆயர்தியேம் யாம்” (முல்லைக்கலி 8.8-9)
என்ற வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆட்டினத்து ஆயர்:

         ஆட்டினத்து ஆயர்கள் ஆடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இதனை,
         “தளரியால் என்னறிதல் வேண்டின் பகையஞ்சாப்
          புல்லினத் தாயர் மகனேன் மற்றியான்” (முல்லைக்கலி.113.6-7)
என்ற முல்லைக்கலியின் வரிகள் உறுதிபடுத்துகின்றன. இவர்களைப் ‘புல்லினத்து ஆயர் என்றும் வழங்குவர். இந்த மாட்டினத்து ஆயர், ஆட்டினத்து ஆயர் ஆகிய இருவரில் மாட்டினத்து ஆயர்களே உயர்வானவர்களாக மதிக்கப்பட்டுள்ளனர். இதனை,
          “புல்லினத் தாயனை நீயாயிற் குடஞ்சுட்டு
           நல்லினத் தாயர் எமர்”     (முல்லைக்கலி 113.6-7)
என்ற வரிகள்மூலம் உறுதிபடுத்த முடிகின்றது.
           ஆயர் எனப்படுவர் தம்குலத்தால் ஒருவரேயெனினும் அவர்கள் வளர்த்துவந்த உயிரினங்களின்பொருட்டு மேற்காணும் பெயர்களைப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

கோவினத்து ஆயர்
கோவினத்து ஆயர்கள் உழவுக்குப் பயன்படும் எருதுகளை அதிகமாக வைத்திருந்தனர். இக்கோவினத்து ஆயர்களும் பசுக்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் பால் முதலிய பொருட்களை விற்று தங்களின் தேவையைப்  பூர்த்தி செய்துகொண்டனர்.

நன்றி
     யாதவர் தன்னுரிமை பணியகம் (YES)
தட்டச்சு வேலை
     மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்

கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.
மேலும் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. கோமாதா = கோ” என்றால் பசு, மாதா” என்றால் அன்னை. அன்னைக்கு நிகரான பயன்தருவதால் இந்துக்கள் கோமாதாவை போற்றி வணங்குகிறோம்.
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
இனியாவது இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவார்களா ? பசுவதையை எதிர்த்து போராடுவார்களா ?

நன்றி
இந்து மதம் - உலக மக்களின் மதம்

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா

IMG-20140728-WA0116மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் கணபதி விழா நடக்கவுள்ளது இதற்க்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் விழா நடத்துவது பற்றி சில முக்கிய முடிவுகளை எடுக்கப்பட்டது இந்த விழாவில் பேசிய அந்தேரி யாதவ மகாசபை தலைவர் திரு.மாடசாமி யாதவ். என் உயிரிலும் மேலான யாதவ சொந்தங்களே இன மானம் காக்க ஓரணியில் திரள்வோம்.தமிழகத்தில் யாதவனின்றி எதுவும் நடக்காது என நிருபித்து காட்டுவோம்.ஆண்டவன் அவதரித்த குலம் நமது ஆயர் குலம்,ஆனால் ஆள முடியவில்லை?

முதல் விடுதலை வீரனை ஈன்ற இனம் நமது ஆயர் இனம்,இன்று தமிழகத்தில் அடையாளம் இல்லாமல் இருக்கிறது.இதற்கு யார் காரணம்?
மகாபாரதம் மூலம் உலகிற்கு அரசியலை கற்று தந்த இனம் இன்று அரசியல் அங்கிகாரம் இல்லாமல் தவிக்கிறது.இதற்கு யார் காரணம்?
நம் சமுதாயத்தின் மீதான அடக்கு முறையை அழித்தெறிய ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்.
என்றும் சமுதாய பணியில் ஓன்று திரள வேண்டும் என்றும் வரும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை மிக சீரும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்றும் பேசினார் அதனை தொடர்ந்து  கூட்டத்திற்கு வந்த அணைத்து உறுப்பினர்களுக்கும் அந்த கிளையின் ஆலோசகர் திரு.முத்துகுமார் யாதவ் அவர்கள் நன்றி  தேரிவித்தார்  பின்னர் அந்தேரி யாதவ மகாசபை சார்பாக அந்த ஏரியா சிவசேன பிரமுகர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் அணைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
நன்றி
   S P Das, Mumbai

யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இலவச இருதய மருத்துவ முகாம்

இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர்

நாள்: 16-08-2014 சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

நன்றி
    யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை,தஞ்சாவூர்

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar