"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, July 15, 2015

திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.


யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன்  அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட  வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.


அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.









































































Monday, July 13, 2015

திருநெல்வேலி அழகுமுத்துக்கோன் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு



சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் அருகேயுள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் சாதிய அமைப்பினரும் வருகை தருவர் என்பதால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், சிலைக்கு மாலை அணிவிக்க ஒவ்வொரு கட்சியினர் மற்றும் அமைப்பினருக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

இதன்படி திமுக சார்பில், அதன் மத்திய மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைப் பொதுச்செயலர் நிஸ்தார் அலி, மாவட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணகுமார், மாவட்டச் செயலர் ஹரிஹரன் ஆகியோரது தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலர் கண்மணி மாவீரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

258–வது நினைவுநாள்: வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ்- காங்கிரஸ் மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கோகுல மக்கள் கட்சி சார்பில் இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி இர்வின் சாலையில் இருந்து கோகுல மக்கள் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

சுதந்திர போராட்ட தியாகிகளை இந்த அரசு மரியாதை செலுத்த தவறி விட்டது. வீரன் அழகு முத்து கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை சீரமைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்கும் வகையில் பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் செயலாளர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் என். சுப்பிரமணியன், கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், வேளாளர் – பிள்ளைமார் செங்குந்த முதலியார் கூட்டமைப்பு தலைவர் நடிகர் கே.ராஜன்.

கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி தலைவர் எம். முனுசாமி, தேசிய நெச வாளர் கட்சி தலைவர் பகவான் பரமேஸ்வர முதலியார், இந்து மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், தமிழ்நாடு யாதவ சங்க தலைவர் சரசு முத்து உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோகுல மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எல்.வி.ஆதவன், தலைமை நிலைய செயலாளர் கஜேந்திரபாபு, ஏழுமலை, அரிகிருஷ்ணன், கோதண்டராமன், மணிமாறன், சைதை ஜெயகுமார், ராஜேந்திரன், மனோகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், மயிலை கிருஷ்ணன், அரிதாஸ், கொளத்தூர் குணசேகரன், அன்பழகன், காஞ்சீபுரம் நந்த கோபால், ஜெனனி வெங்கடேசன்.

பா.ம.க. நிர்வாகிகள் ஜெயராமன், செங்குட்டுவன், வண்ணை சத்யா, பாண்டியன், சீமான் இளங்கோவன், சேகர், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி எழும்பூர் பகுதியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

















 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar