"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, August 19, 2015

பண்டமாற்று (வணிகத்தை) முறையை தோற்றுவித்த ஆயர்கள்

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்திலே எல்லா நாடு களிலும் பழங்காலத்தில் பண்டமாற்றுதான் நடந்து வந்தது. மற்ற நாடு களில் இருந்தது போலவே தமிழகத் திலும் பழங்காலத்தில் பண்டமாற்று முறை இருந்தது. சங்க நூல்களிலிருந்து இதை அறிகிறோம்.

இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை முதுகூத்தனார் கூறுகிறார். ‘பாலோடு வந்து கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று குறு. (221.3-4) அவர் கூறுகிறார் (கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலான தானியங்கள்)

ஆயர் மகளிர் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சினார்கள். தயிரையும் மோரையும் மாறித் தானியத்தைப் பெற்று உணவு சமைத்து உண்டதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுகிறார்:

‘நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நல்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி’

என்று (பெரும்பாண். 155-163) அவர் கூறுகிறார்.

Monday, August 17, 2015

69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை




69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் வெங்கி யாதவ் மற்றும் சகோதரன் சதிஷ்யாதவ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் குமார் யாதவ் நமது மாஸ்டர் ஜீ மாரிச்சாமி யாதவ் நிர்வாகம் தூத்துக்குடி தெற்குமாவட்ட தலைவர் மாரிக்கோனார் தலைமையில் விழா சிறப்புடன் நடைபெற்றது இந்த நிகழச்சி கோகுலம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் திரு மூர்த்தி யாதவன் ஏற்பாட்டில் நடைபெற்றது.








அந்தணர் வளர்த்த யாதவப்பெண்


அந்தணர் வளர்த்த யாதவப்பெண்:

ஸ்ரீ வில்லிபுத்தூர் துளசி தோட்டத்தில் அவதாரம் எடுத்தாள் பூமா தேவி. அவளை கண்டெடுத்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் கோதை என்ற பெயரில் வளர்த்து வந்தார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட கோதை கண்ணன் மீது காதல் கொண்டு அவனை அடைந்தாள்.

கோதை இறைவனையே ஆண்டதால் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டாள். ஆண்டாள் தெய்வமாகவும் ஆழ்வார்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் திருப்பாவை அருளினார்.

தான் அருளிய திருப்பாவை மூலம் தன்னை ஒரு யாதவ பெண்ணாக உணர்த்துகிறாள்.

ஆயர் குல பெருமக்கள் அனைவராலும் பூஜிக்கப்பட தெய்வம் ஆண்டாள்

எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவிப்பு

எழும்பூரில், சுதந்திர போராட்ட மாவீரர், வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் நிர்வாகிகள் என்.சுப்பிரமணியம் யாதவ், ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ், கே.ஜோதிலிங்கம் யாதவ், கே.எம்.ராஜன் யாதவ், எம்.வி.சேகர் யாதவ், பூவை சுந்தர், போரூர் முருகா தாமோதரன், கே.எத்திராஜ், கேப்டன் ராஜன், பி.வி.சேகர், எம்.ஆர்.கே.மெய்யப்பன், ஓ.எம்.பி.ராமதாஸ், என்.தேவதாஸ், ஏ.எஸ்.பழனியாதவ், பி.தங்கராஜ், எம்.வி.புண்ணிய சேகர், எம்.சங்கர், எஸ்.செல்வம், வி.ராஜீ, மயிலை கிருஷ்ணன், பி.ஆர்.முத்து, காளிதாஸ் யாதவ், வேல் தளபதி, பி.மகாலிங்கம், சி.எஸ்.தனசேகரன், எஸ்.பாலுச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தென்சென்னை மாவட்டம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய 37 யாதவர் நலச்சங்க நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றிருந்தனர்.

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Thursday, August 13, 2015

யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா:தெற்குப்பட்டி,நெல்லை

நெல்லை மாவட்டம்
தெற்குப்பட்டி
கிராமத்தில் ஆகஸ்ட் 13 அன்று
யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா
நடைபெறுகிறது.யாதவ சொந்தங்களை
வருக வருக என அழைக்கிறோம்.








இவண்
தெற்குப்பட்டி யாதவர் இளைஞர் சங்கம்
மற்றும் KM சுவாமிஜீ யாதவ் பேரவை

ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வரவேற்கபடுகிறது:கோவில் திருப்பணி குழுவினர், படமாத்தூர்,சிவகங்கை


பேரன்புடையீர் வணக்கம்,
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா ,படமாத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ,பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிட பணிக்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்ளுகிறோம் .. 
கோவில் திருப்பணி குழுவினர் ,
படமாத்தூர் .
தொடர்புக்கு 
செல்: 9566782141, 7639962947

Wednesday, August 12, 2015

விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி



விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி

விடுதலைக்கான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சார்ந்த மாவீரர் அழகுமுத்து கோன் அவர்களின் நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று 12/08/2015, பிற்பகல் 1.30 மணியளவில் தில்லி பாராளுமன்ற செயலக கட்டித்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்து அழகுமுத்து கோன் அவர்களின் வரலாற்றை எடுத்துரைத்து, சுமார் 256 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் விடுதலைக்கு முதல் குரல் கொடுத்ததற்காக ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் இரவு நேரத்தில் கைது செய்து பீரங்கி வாயில் கட்டி, சுதந்திர போராட்ட வரலாற்றில் முதல் களப்பலியான அழகுமுத்து கோன் அவர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களை மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய அமைச்சரிடம் எடுத்து கூறினார், அவருடன் யாதவர் தன்னுரிமைப் பணியகத்தை சார்ந்த பேராசிரியர் பெரி கபிலன் மற்றும் எ.சுகுமார் ஆகியோர் சந்தித்து தமிழகத்தில் உள்ள யாதவர் சமுகத்தின் 19 ஆண்டு கால கனவாக இருப்பதாகவும் தெரிவித்தனர், இதை ஆர்வமுடன் கேட்டுவிட்டு கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்றும் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் மிக விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதியளித்தார்.

நன்றி - யாதவர் தன்னுரிமைப் பணியகம் - தில்லி

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar