"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, October 21, 2015

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை:கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்



பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பா.குமார் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்ட, பால் உற்பத்தியாளர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரகிருஷ்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: யாதவ சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ஒதுக்கீடாக 15 சதவீதம் உயர்த்தித் தரவேண்டும், கால்நடை வளர்த்து வரும் மக்களுக்கு நியாயவிலைக் கடையில் மாட்டுத் தீவனங்களை வழங்க வேண்டும்; கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் அரண்மனை மிகவும் பழுதடைந்துள்ளது. அதை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; யாதவ சமுதாய மக்கள் அனைவரும் கால்நடைகளை பராமரித்து, பால் உற்பத்தியை பெருக்கி வருவதால், பால் கொள்முதல் விலையை ரூ.35-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில், கோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் சதீஷ்குமார், தங்கமாரியப்பன், கருப்பசாமி, பொன்மாடசாமி, சின்னத்துரை, சின்னகருப்பசாமி, பாஸ்கரன், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தென்மண்டலச் செயலர் எஸ். மரியசுந்தரம் வலியுறுத்தினார்.

இந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட கிளையின் சார்பில், இம்மாதம் 27ஆம் தேதி நடத்தப்படும் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் பிரதான கோரிக்கையாக இருப்பது இலவச கல்வியும், இலவச மருத்துவமும்தான். இக் கோரிக்கையை வென்றெடுக்கவும், மத்திய அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டுசெல்லும் வகையிலும் பாளையங்கோட்டையில் வரும் 27ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் தமிழக மேலிடப் பார்வையாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான முரளிதரராவ் சிறப்புரையாற்றுகிறார். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் ஸ்ரீநிவாசன், யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் பேசுகின்றனர்.

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தியுள்ள அரசு, அதன் விவரங்களை முழுமையாக உடனடியாக வெளியிட்டு, அந்தந்த சாதியினருக்குரிய பிரதிநிதித்துவப்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

வரும் பேரவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நான்குனேரி ஆகிய 4 தொகுதிகளை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலர் எம். முத்து, மாவட்ட தேர்தல் பணிக் குழு செயலர் எஸ். சரவணன், ஒன்றியச் செயலர் சிவந்திப்பட்டி முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆடு திருட்டு வழக்குகளில் காவல் துறை மெத்தனம்: குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் புகார்



தேனி மாவட்டத்தில் ஆடு திருட்டு வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மெத்தனம் காட்டி வருவதாக ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம் சார்பில், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாளிடம் மனு அளித்தனர். அதன் விவரம்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மந்தைகளில் இருந்து ஆடுகள் திருடு போவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து வீரபாண்டி, ஜெயமங்கலம், கண்டமனூர், போடி ஆகிய காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் மந்தையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை காவலாளிகளை மிரட்டி, வாகனத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பல் குறித்தும், இதற்கு பயன்படுத்தும் வாகன எண்ணை குறிப்பிட்டும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திருடு போன ஆடுகளை மீட்டுத் தரவும் போலீஸார் மெத்தனம் காட்டுகின்றனர். எனவே ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து, ஆடு வளர்ப்பு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர். மனு அளித்த போது ஆடு வளர்ப்போர் செம்மறி ஆடுகளுடன் வந்திருந்தனர்.

Monday, October 19, 2015

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற யாதவ இளைஞரால் பரபரப்பு: 70 பேர் கைது

தமிழ்நாடு இளைஞர் யாதவர் மகாசபை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று 70–க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள், மதுரையில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாதவர்களுக்கு 9 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார், முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது பேரணியில் பங்கேற்ற சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது23) என்ற வாலிபர் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் பேரணியாக செல்ல முயன்ற 70 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Thursday, October 15, 2015

மதுர கவிராயரும் ஆனந்தரங்கம் பிள்ளையும்

ஆனந்தரங்கம் பிள்ளை
அக்காலத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் இருந்தார். அவர் தமது தந்தையாருடன் புதுவைக்குச் சென்று வாழ்ந்தார். அப்போது புதுவையில் இருந்து ஆட்சி புரிந்த டுயூப்ளே என்பவர், ஆனந்தரங்கம் பிள்ளையின் அறிவாற்றலையும், அரசியல் தந்திரத்தையும் அறிந்தார். அவரைத் தம் உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சராக நியமித்தார்.
அக்காலத்தில் அவருக்கு அந்த உயர்ந்த பதவி கிடைத்தது, குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலாகும். ஏனென்றால், அக்காலத்தில் ஏகபோக உரிமை பிரெஞ்சுக்காரருக்கே இருந்தது. பிரெஞ்சு ஆட்சியில் பிரெஞ்சு சரித்திரத்தில் முதலிடம் பெற்ற இந்தியர் ஆனந்தரங்கம் பிள்ளையே.
ஆனந்தரங்கம் பிள்ளை அருந்தமிழில் பெரும் பற்றும், புலவர்களிடத்தில் பேரன்பும் கொண்டிருந்தார். அவரது பெருங்குணத்தைப் பற்றி மதுர கவிராயர் என்பவர் கேள்விப்பட்டார். மதுர கவிராயரின் தமிழ் உள்ளம், பிள்ளையவர்களைக் காண விரும்பியது. அதனால், அவர் புதுவை நகர் வந்தடைந்தார்.
புதுவையை அடைந்த மதுர கவிராயர், ஆனந்தரங்கம்பிள்ளையின் அழகிய மாளிகையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது பிள்ளையவர்கள் மாளிகையில் இல்லை. மாளிகையில் இருந்தோர், பிள்ளையவர்கள் வயற்புறம் சென்றிருப்பதாகக் கூறினர்.
அதனை அறிந்த கவிராயரும் வயற்புறம் நோக்கிச் சென்றார். சலசல என்று ஓடும் வாய்க்கால் நீரும், அதை எதிர்த்து உடலசைத்துச் சென்ற மீன்களும் கவிராயருக்குக் களிப்பை உண்டாக்கின. வயல்களில் கதிர்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் பயிர்கள் சாய்ந்து கிடந்தன. அவை சாய்ந்து கிடந்தமையால் வயல்கள் மறைப்புண்டு கிடந்தன. சில வயல்களில் விண்ணில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடப்பதைப் போல் செந்நெல் மணிகள் விழுந்து கிடந்தன.
ஆனந்தரங்கம்பிள்ளை அந்நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். மதுரகவிராயர் மெதுவாகச் சென்று அவர் எதிரே அரவமின்றி நின்றார். பிள்ளையவர்கள் தற்செயலாகத் தலை நிமிர்ந்தார். கவிராயரைக் கண்டார்.
அன்பு நிறைந்த முகத்துடன், ""வணக்கம்! அந்த வரப்பின் மேல் உட்காருங்கள் வந்து விடுகிறேன்!'' என்று கூறினார்.
அவர் கூறியபடியே மதுரகவிராயர், புற்கள் நிறைந்திருந்த வரப்பின் மேல் உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு பிள்ளையவர்கள் முன் போலவே நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் வருவார் என்று கருதி அமர்ந்திருந்த கவிராயர், எழுந்திருப்பதும், உட்காருவதும், சிறிது நடப்பதுமாக இருந்தார். அவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் தம்முடைய அவசரத்தை அவருக்கு உணர்த்தினார்.
அதனை அறிந்த பிள்ளையவர்கள் கவிராயரைப் பார்த்து, ""ஏன் பறக்கிறீர்?'' என்று கேட்டார்.
அதைக் கேட்ட கவிராயரின் முகத்தில் சினக்குறி தோன்றியது. பிள்ளையவர்களின் வார்த்தை கவிராயருக்குக் கடுமையானதாகத் தோன்றியது. கவிராயரின் உள்ளத்தை அவருடைய வார்த்தை சுருக்கென்று சுட்டது.
கவிராயர் உடனே பிள்ளையவர்களைப் பார்த்து, ""கொக்குப் பறக்கும், புறா பறக்கும், குருவி பறக்கும், நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். மக்கள் தலைவனே! நான் ஏன் பறப்பேன்?'' என்று கருத்தமைந்த ஒரு பாடலைப் பதிலாகப் பாடினார்.
ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள் அந்தப் பாடலின் சுவையைச் சுவைத்துக் கொண்டே தம் வீட்டிற்குப் புறப்பட்டார். கவிராயர் முன்னே செல்ல, பிள்ளையவர்கள் பின்னே சென்றார். பிள்ளையவர்கள் மதுரகவியாரைத் தம் மாளிகைக்குள் அழைத்துச் சென்றார். அம்மாளிகையின் மீது பிரெஞ்சுக்கொடி பறந்து கொண்டிருந்தது.
அந்த மாளிகையில் மதுரகவிராயர் களைப்பாறினார். அவருக்கு உணவளிக்க பிள்ளையவர்கள் தலை வாழை இலையை அவர் முன் போட்டர். கவிராயருக்கோ கடும்பசி. பிள்ளையவர்கள் வெள்ளித் தட்டில் பொற்காசுகளைக் கொண்டு வந்து கவிராயர் முன் இருந்த இலையில் வைத்தார். வைத்துவிட்டு, கவிராயரை முகமலர்ச்சியுடன் பார்த்து, ""மதுரகவி பாடும் மதுரகவிராயரே! இதனை மதுரமோடு உண்ணுங்கள்!'' என்று கூறினார்.
அதைக் கேட்ட மதுரகவிராயர் திகைத்தார். பிள்ளையவர்கள், ""கவிராயரே! ஏன் விழிக்கிறீர்? இதனை உண்ணுங்கள். நான் வயலில் உதிர்ந்து கிடந்த நெல்லைப் பொறுக்கினேன். அதனை நீர் அற்பமாக நினைத்தீர். அது நெல்லன்று; பசிப் பிணி மருந்து. அது பசியை ஒழிக்குமா? இந்தப் பொற்காசுகள் பசியை ஒழிக்குமா?'' என்று வேடிக்கையாகக் கேட்டார்.
அதைக்கேட்ட மதுரகவிராயர், ""என்னைப் பசி மிகவும் எரித்தது. அதனால், நான் பசியைப் போக்கிக் கொள்ள உங்களைத் துரிதப்படுத்தினேன்!'' என்று பதில் கூறினார்.
அதைக்கேட்டு பிள்ளையவர்கள் சிரித்தார். கவிராயர் முன் இருந்த இலையை இழுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு, அவர் அருகில் அமர்ந்தார். வேலையாள் அவர்கள் இருவருக்கும் இலையிட்டு உணவு பறிமாறினான். இருவரும் இனிது உண்டனர். பிள்ளையவர்கள் அதன் பிறகு அப்பொற்காசுகளை அக்கவிராயருக்கே பரிசாக அளித்துவிட்டார். மதுரகவிராயர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு தம் ஊர் திரும்பினார்

சுரைக்காய்ச் சித்தர் வரலாறு



சித்தர் என்போர் யாவர் என்ற கேள்விக்கு சித்து ஆற்றல் பெற்றோர் எனவும், சித்தி பெற்றோர் எனவும், மீஇயற்கை (super natural) ஆற்றல் பெற்றோர் எனவும், சித் என்றால் அறிவு ஆதலால் அறிஞர் எனவும் பலரும் பலவாறாக விளக்கம் தருகின்றனர். ஆனால் சித்தர்கள் இப்படிப்பட்டவர் என வரையறுப்பதோ, அடையாளப்படுத்துவதோ மிகக் கடினம்.


'பேறாம் பிரமானந்த மடைந்தோன் சித்தன்' என்பார் கோரக்கர்.


பந்தங் கடந்தவனே சித்தன் - பாரில்
பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன்
இந்த விதஞ் தெரிந்தவனே சித்தன்
அதிலென் நிலைமை கண்டவனே சீவமுத்தன் 


என்கிறார் கல்லுளிச் சித்தர்.


சித்தர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் எனச் சொல்வதற்கு இல்லாமல் எல்லாக் காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் காயகல்பம், மருத்துவம், கணிதம், இதள் மாற்றியம் (இரசவாதம்), மெய்யியல், ஆன்மீகம், கணியம் (சோதிடம்) என பல துறைகளில் வல்லவர்களாக இருந்துள்ளனர். 


சித்தர்கள் நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்க நிறைமாந்தர் எனப்படுகின்றனர். தமிழகத்தின் நெடிய வரலாற்றில் புகழ்மிக்க பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு சித்தர்நாடு என்றே கூட ஒரு பெயர் உண்டு. இவர்களில் சிலரைப் பற்றியாவது நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். அந்த வகையில் மிக அண்மையில் 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்து 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கதில் வாழ்வு நீத்தவரான ஒரு பெரும் பெரியார் (மகான்) தான் சுரைக்காய் சித்தர் என்பவர். அவரைப் பற்றிய வரலாற்றையே இம்முழுக் கட்டுரையும் விளக்குவது.

சுரைக்காய் சித்தரோடு உடனிருந்து அனுபவம் பெற்ற 75 அகவையாளர் திரு. செங்கல்வராய முதலியாரின் அனுபவங்கள் முதல் பகுதியாகவும், சுரைக்காய் சித்தரை சந்தித்து அருள் பெற்ற அவரது பக்தர்கள் சிலரது அனுபவப் பதிவுகள் இரண்டாம் பகுதியாகவும் இடம் பெறும்படியாக ஒரு நூலை தெலுங்குல் எழுதி முதன்முதலாக திரு. R. கிருஷ்ணசாமி நாயுடு B.A. 1911 இல் வெளியிட்டார். பின்பு இந்நூலை திரு. N . ராஜு நாயுடு MBPI தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். அந்த ஆங்கில நூலை 'சுரைக்காய் சுவாமிகள் வரலாறு - அற்புதச் செயல்கள் வருமுன்னுரைத்தல்' என்ற தலைப்பில் திரு. தி. பக்தவத்சலம் பிள்ளை B.A. தமிழில் மொழிபெயர்த்து 1929 இல் வெளியான நூலை மேற்கோளாகக் கொண்டு சுறுக்கமாக எழுதப்பட்டது இக்கட்டுரை.


தமிழ்நாட்டின் வடக்கே திருத்தணிக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்த புத்தூருக்குக் கிழக்கே 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய ஊர்தான் நாராயணவரம் அல்லது நாராயணவனம் என்பது. தம் இறுதிக் காலத்தே இங்கு தங்கி வாழ்ந்தவர் தாம் சுரைக்காய்ச் சித்தர் என்னும் தவப்பெரியார். நூலில் இவர் பெயர் சுரைக்காய் இராமசாமி என்று பதிவாகி உள்ளது. இரு பெரிய சுரைக் குடுக்கைகளை இரண்டு ஏனங்களாகப் பயன்படுத்துவதற்காக அவற்றை இவர் எப்போதும் தம்முடனேயே எடுத்துச் சென்றதால் இவர் சுரைக்காய்ச் சித்தர் என்று அடையாளப்படுத்தப்பட்டார். உணவையும் நீரையும் இக்குடுக்கைகளிலேயே இவர் வைத்துக் கொள்வார். இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்த இவருக்கு குடும்பம் என்று ஒன்று இருந்ததாகத தெரியவில்லை.


உருவத்தில் இவர் சற்றே குட்டையானவர், மாநிறத்தவர். கிழிந்த உடையும், பெரிய தலைப்பாகையும் அணிந்திருப்பார். இதுவே இவருடைய அடையாளம். இவர் பேசும் சொற்களிலிருந்து நேரான பொருளை அறிய இயலாது. எதையும் மறைபொருளாகவே பேசுவார். சிலபோது தம்மிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறுவோருக்கு ஆறுதல் சொல்லுவார்; நோயுற்று நலிந்தவருக்கு நோயைப் போக்கி அருளுவார்; இடருற்றவருக்கு இடர்களைக் களைவார். கெடுதிவருமுன்னே குறிப்பாய் எச்சரித்துத் துன்புற வேண்டியவர் நெஞ்சைத் திடப்படுத்துவார். இவர் எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார் என்று எவராலும் திட்டமாகக் கூற இயலவில்லை. இவர் இடையர் குலத்தில் பிறந்து ஆடுமாடு மேய்க்குங்கால் ஒரு ஓகி(யோகி)யரிடம் ஓகப்பயிற்சி கற்றார் என்பர். இவர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து சமாதி அடைந்தார் என்பர் சிலர். இன்னும் சிலர் இவர் திருப்பதிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து திருவள்ளூரில் ஒரு கையில் கருடனை ஏந்திக் கொண்டு நெடுங்காலம் பிச்சையெடுத்து நாளடைவில் விந்தையான மன ஆற்றலை வளர்த்துக் கொண்டார் என்பர். இவற்றுக்கெல்லாம் உறுதியான, கண்கூடான சான்றுகள் ஒன்றுமே கூட இல்லை.


இவரது சமயம் வைணவம் என்றோ சைவம் என்றோ பாகுபடுத்த இயலாது. குறுகிய நெறிகளைப் பின்பற்றும் சமயங்களைக் கடந்து நின்றவர் அவர். சமயக்குறிகளை அணிவது இவர் வழக்கமன்று ஆனால் எவரேனும் திருநீறோ திருமண்ணோ அவர் நெற்றியில் சாற்றினால் அதற்கு அவர் முகஞ்சுளிப்பதில்லை. அவர்கள் மகிழட்டும் என்று அவர் சும்மா இருந்துவிடுவார்.




சித்தர் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவார் என்பதற்கு ஒரு நிகழ்வு:


ஓரிரவு 12.30 மணிக்கு சுரைக்காயார், பாவம்! ஓர் ஏழைப்பெண் இறக்கப் போகிறாள்! குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்! உடனே விரைந்து சென்று அவளைக் காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டே சொன்னார். உடனே அவரது பக்தர்கள் அங்கிருந்த தோட்டத்தின் தொலைவான மூலையில் இருந்த ஒரு குளத்தில் சென்று தேடியபோது அங்கே எவரும் இருக்கவில்லை. இதை ஓடிச் சென்று சித்தரிடம் தெரிவித்தபோது தவறான இடத்தில் தேடிப்பார்த்துள்ளீர்கள் என்று கடிந்துகொண்டு அவர்களிடம் தொலைவிலுள்ள குளத்தைப் பற்றிய விவரங்களைக் கூறினார். மறுபடியும் சித்தர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று தேடியபோது ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியாக குளத்தின் ஆழமான பகுதியில் அந்த நள்ளிரவில் குளத்தில் மூழ்கிவிட முயல்வதை பார்த்த அவர்கள் அவளிடம் அறிவுரை கூறி அவளது முயற்சியைக் கைவிடச் செய்தனர். அவள் தன் நோயின் துன்பம் காரணமாக அவ்வாறு தற்கொலையில் ஈடுபடத் துணிந்தாள்.


சித்தர் தாம் பிறப்பெடுத்ததன் குறிக்கோள் முடிவுற்றதால் இவ்வுலகை விட்டு நீங்க உறுதிபூண்டார். அவர் சமாதி அடைவதற்கு சில மாதங்கள் முன்பாக அவரது பக்தர் திரு. N. இரத்தினசபாபதி பிள்ளை தம் பணியிடம் செல்லவேண்டி இருந்ததால் சுரைக்காய் சித்தரிடம் விடை பெறச் சென்றபோது மறுபடியும் இவரை சந்திக்கும் பேறு எப்போது கிட்டுமோ என்று எண்ணினார். அப்போது சித்தர் ''சித்திரத்தே குத்தி அப்புறத்தே வைத்திருக்கிறதே! அதைப் பார்த்துக் கொள்வது தானே என்று அங்கே மாட்டியிருந்த தம் புகைப்படத்தைக் காட்டினார். இதுவே இரத்தின சபாபதியுடனான இறுதிச் சந்திப்பு என்பதைத் தான் அவர் மறைமுகமாகச் சுட்டினார். .




இவரது இறும்பூதுச் செயல்கள் (Miracle Deeds):


ஒருபோது ஒரு கிழவி தன் பேத்தியை அழைத்து வந்து சித்தரிடம் காண்பித்தாள். நெடுநாள் காய்ச்சலால் அப்பேத்தி உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆகிப்போயிருந்தாள். மருத்துவர் நோய் இன்னது என்று அறியாதவராக கைவிட்டிருந்தனர். சுரைக்காய்ச் சித்தர் அந்நோயாளி மேல் இரக்கங்கொண்டு அவளை ஆசிர்வதித்துத் தரையில் இருந்த மண்ணை எடுத்துக் கொடுத்து அப்பெண்ணுக்கு மருந்தாக அளிக்கச் செய்தார். அவ்வாறு செய்த சின்னாட்களிலேயே அந்நோய் அகன்றது. ஒரே மாதத்தில் அவள் நல்ல உடல்நிலையைப் பெற்றாள்.


ஒருபோது வண்ணான் ஒருவன் ராசபிளவை நோயினால் அளவிலாத் துன்பமுற்று சுரைக்காய்ச் சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். சித்தர் அவனை ஆசிர்வதித்துக் கழுத்திலும் முதுகிலும் உள்ள பிளவையில் புளியை அரைத்து தடவினால் ஆறிவிடும் என்று சொல்லி அனுப்பினார். அவர் மேல் நம்பிக்கைகொண்டு அவ்வாறே செய்த வண்ணான் இரு வாரங்களில் அந்நோயிலிருந்து விடுபாடு கண்டான்.


1902 இல் ஆகத்து மாதத்தில் சுரைக்கைச் சித்தர் கடைசி முறையாகச் சென்னை வந்தார். ஒரு வாரம் அங்கு தங்கிவிட்டு 'வெற்றி கண்டாகிவிட்டது' இனி ஒரு நொடியும் தாழ்த்தக் கூடாது என்று சொல்லி வழக்கமாக அவருடன் இருப்போரை எல்லாம் சென்னையிலேயே விட்டுவிட்டு திரு. புருசோத்தம நாயுடுவுடன் நாராயணவரத்திற்கு புறப்பட்டு இரவே புத்தூர் சென்றடைந்து அங்கு இரவு தங்கினார். அடுத்தநாள் சித்தர் அங்கிருந்து ஒரு பசனை கூட்டத்துடன் புறப்பட்டார். உள்ளத்தை உருக்கும் பாடலைப் பாடிக்கொண்டும், இறைவனை நெஞ்சார வழிபட்டு கொண்டும், இறைவனுக்கு நன்றி தெரிவித்தும் அவர் எழுப்பிய இன்னிசை கேட்பவர்கள் காதில் தேனாய் ஒலித்தது. நாராயணவரம் சென்றடைந்ததும் புருசோத்தம நாயுடு, பாப்பைய்ய செட்டி ஆகியோரிடம் 'நான் நாளை மறுநாள் என்னுடைய ஊருக்குப் போகிறேன்' என்றார். அன்று இரவு தம் தாகத்தைத் தணிக்க 10 படி தண்ணீர் குடித்தார். ஆனாலும் மலம் ஏதும் கழிக்கவில்லை.


மறுநாள் அவரது வேண்டுகோளின்படி புருசோத்தம நாயுடு 150 குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து அவர்மேல் ஊற்றினார். அப்போது நள்ளிரவு 12 மணி. சித்தர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புருசோத்தம நாயுடுவிடம் தேங்காயும் கற்பூரமும் இல்லையா? என்று கேட்டார். நாயுடு பாப்பய்யச் செட்டியிடம் சென்று சித்தர் விரைந்து உலக வாழ்வைவிட்டு நீங்கிவிடுவார் என்று தாம் அஞ்சுவதாக சொல்லி தேங்காயும் கற்பூரமும் கொடுக்கும்படி வேண்டினார். செட்டியும் அவற்றைக் கொடுத்தார். ஆனால் சித்தர் நாயுடுவிடம் தாம் மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு உயிர் நீப்பதாக சைகை காட்டினார். சித்தர் வாய்திறவாது அனைப்புக்கை (அபயஸ்தம்) காட்டி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றுமாறு குறிப்பிட்டார். அவ்வாறு செய்ததும் சித்தர் புருசோத்தம நாயுடுவின் மேல் மெதுவாகச் சாய்ந்தார். அப்படியே இறைவனோடு ஒன்றிவிட்டார். அடுத்தநாள் அவர் ஏற்கெனவே வழியில் வளர்ந்து இருந்த நாகதாளிச் செடிகளை அகற்றி அங்கிருந்த குழிகளில் குழாங்கற்களையும் மணலையும் நிரப்பிச் சீர்திருத்தி வைத்திருந்த நிலவெளியில் அவரது மெய்யுடல் சமாதி வைக்கப்பட்டது. இச்செய்தி கேட்டு அவரது அடியார்கள் பெருந்துயர் எய்தினர். பின்பு சமாதி வைக்கப்பட்ட இடம் கோவிலாக கட்டி எழுப்பப்பட்டது. மேற்சொன்ன யாவும் செங்கல்வராய முதலியார் நினைவுகளின் பதிவுகள்.




நூலில் சுரைக்கைச் சித்தரது அடியார்கள் பதிந்த தம் அனுபவங்களில் சில:


திரு M. குப்புசாமி செட்டி M.A. கூறியது (பக்கம் - 236): சுரைக்கைச் சித்தர் N. இரத்தின சபாபதி பிள்ளையின் மகள் திருமணத்தின்போது சென்னை வந்திருந்தார். அவருடன் கண்ணுக்குட்டி சாமி என்ற வேறொரு சாமியார் வந்திருந்தார். இருவரும் வியப்புறும் வகையில் நோய்களைப் போக்கினர். இதில் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், சுரைக்காய்ச் சித்தர் தம்மிடம் வந்தவர்களின் பெயரைச் சொல்லி அவரவர் துன்பங்களைப் போக்கி அவர்க்கு ஏற்ற வழியை அவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளும்படிச் சொன்னார்.


(பக்கம் - 240) ஏழாம் எட்டுவர்டு மன்னர் (9th August 1902) முடிசூட்டிய நாளில் சுரைக்காய் சித்தர் சமாதி வைக்கப்பட்டார். அதற்கு முந்தைய நாள் அவர் உயிர் நீத்தார்.


பொதுவாக அவர் பேச்சு உலகில் நடக்கவேண்டிய முறை பற்றியும், ஓகம், மெய்யியல் இவற்றைப் பற்றியுமாகவே இருந்தது.அவர் இயற்கை சக்திகளை அடக்குவதும், நோய்களை நீக்குவதும் வியக்கத்தக்கனவாய் இருந்தன. வயிற்றுவலிக்கு ஒருமுறை அவர் தம் உள்ளங்கையில் ஒரு சிறு குச்சியை சிறிது நேரம் வைத்திருக்க அது ஒருவித பழுப்புத் தூளாக மாறிவிட்டது. அதை நோயாளியிடம் கொடுத்து சிறிதளவு காதில் போட்டுச் சில துளி தண்ணீர் விட்டால் நோய் நீங்கும் என்றார். அவ்வாறே நோயாளியின் நோய் நீங்கியது. அன்றாடம் வருபவர்கள் எண்ணிக்கையையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் சித்தர் முன்னதாகவே உணர்ந்து தெரிவிப்பார். மக்கள் அவரிடம் வருவதற்கு முன்பே அவர்கள் வருகையைப் பற்றி முன்னதாகவேக் கூறுவார். பேய் பிசாசு பிடித்தவர்கள், உணர்வு (மனநலம்) கெட்டவர்கள் ஆகியோர்களை நலமுறச் செய்வது அவரது அன்றாட நிகழ்ச்சியாயிருந்தது.


திரு. V.நாதமுனி முதலியார் கூறியது (பக்கம் - 166): சுரைக்காய் சித்தர் செங்கற்பட்டு வட்டத்தில் வண்டலூரில் பிறந்தவர் என்றும் இடையர் குலத்தவர் என்றும் அவரது உறவினர் சிலர் இன்றும் அங்கிருப்பது தெரியா வந்துள்ளது. அவர் தொழில் மாடு மேய்ப்பது சிறப்பாக, ஆடு மேய்ப்பது. அவர் பெயர் இராமசாமி. தொண்ணூறு அகவையாளர் போல் காணப்பட்டாலும் அவர் வயது என்னென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை. சென்னை சட்டசபை உறுப்பினர் திரு. சீனிவாசப் பிள்ளை, புத்தூரில் நூற்றுநாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டிய சத்திரத்தைப் பற்றிய செலவுக் கணக்கில் எழுதியுள்ள பதிவு ஒன்று சித்தரின் அகவையை உணர்ந்துகொள்ள உதவுகிறது என்கிறார். இந்த பகுதி கணக்கில் முதலாக உள்ளது அதன்படி சத்திரம் கட்டுவதற்கு சுரைக்காய் சித்தரைக் கருத்து கேட்டதாக இருக்கிறது.


(பக்கம் - 213) V. எத்திராசுலு நாயுடு என்பவருடைய வீட்டில் சித்தர் தங்கியிருந்த போது அவரது பெரிய அக்காள் சுப்பராவ் அம்மா சித்தரின் அகவை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுள்ளவராய் யாரிடமேனும் கேட்கலாம் என்று இருந்த போது இதைத் தம் ஓக ஆற்றலால் உணர்ந்த சித்தர் ''எனக்கு இப்போது அகவை 500. நான் இங்கேயே இருந்தால் மற்ற இடங்களுக்கு எப்போது போவது?'' என்று சொன்னார். இதன் பின் 1902 இல் மறைந்தார்.


திரு. C. விஜயராகவலு நாயுடு கூறியது (பக்கம்-115): பலமுறை அவர் தம் உடலை விட்டுவிட்டுச் சென்று சிலருக்குத் தம் அடையாளம் தெரியாமலேயே உதவிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.


திரு. வேணுகோபால் நாயுடு கூறியது (பக்கம் - 127): சமாதி அடைவதற்கு முன்பு 1902 ஆம் ஆண்டு சூலை மாதம் கடைசியில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டபோது வண்டியில் உட்கார்ந்ததும் தம் வழக்கத்திற்கு மாறாகத் தம் கைத்தடியை நிற்கவைத்துக் கொண்டிருந்தார். சுரைக்காய் சித்தர் எங்கு உட்கார்ந்தாலும் தம் கைத்தடியைப் பக்கத்தில் தான் வைப்பது வழக்கம். அப்போது மும்பை மெயில் மாலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது வழமை. மணி ஆறுக்கு காப்பாளர் பச்சைக் கொடி காட்டினார். ஆனால் வண்டி புறப்படவேயில்லை. ஏதோ எஞ்சின் கோளாறு என நினைத்து ஆங்கில இரயில் அதிகாரிகள் வேறு எஞ்சினைப் பூட்டினர். அப்போதும் வண்டி புறப்படவில்லை. மணி 6.15 கடந்துவிட்டது. சுரைக்காயார் தடியைப் பக்கத்தில் வைத்தார் வண்டி உடனே புறப்பட்டது. இதுவே கடைசி முறையாகத் தம் சீடர்களைப் பார்ப்பது என்பதை உணர்த்தத் தம் ஆற்றலைக் காட்டினார் போலும். இந்த நிகழ்விற்கு ஒரு வாரத்தில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். நிலைய அதிகாரியும் மற்றவர்களும் எஞ்சின் செல்லாத உண்மைக் காரணத்தை அறிந்ததும் சித்தரின் சித்தாற்றலை எண்ணி வியப்புற்றனர்.


திரு. C. வீரராகவராவ் கூறியது (பக்கம் - 221): அடிக்கடி அவர் என் கனவில் தோன்றி வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்னதாகத் தெரிவித்தார் . கடல் பொங்கி சென்னை மூழ்கிவிடப்போகிறது என்ற புரளி கேட்டு நான் அச்சம் கொண்டபோது அவர் என் மனதைத் தேற்றினார். வேறொரு முறை என் மகனுக்குக் காய்ச்சல் போக அவர் சொற்படி தண்ணீர் கொடுத்தேன். மருந்தில்லாமல் அவன் நலமானான்.




சுரைக்காய் சித்தர் ஜீவசமாதி கோவில்


அவருடைய சமாதியில் அன்றாடம் பூசனை நடத்தப்படுகிறது. நூற்றுக்கணக்கினர் நாள்தோறும் பல தொலைவிடங்களில் இருந்து வந்து வழிபட்டு அவர் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த இடத்தில் ஊழ்கம் (தியானம்) செய்கிறபோது பிற இடங்களில் ஏற்படாத ஒருமுனைப்பட்ட ஒருமுகப்பாடு கைகூடுகிறது. மக்கள் சிலர் சித்தரின் நினைவாக சுரைக்காய்களை கட்டுகின்றனர். சித்தர் வாழ்ந்திருந்த காலத்தில் காட்டுமரங்களை வெட்டிவந்து கொளுத்தி குளிர்காய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது மக்களும் தீயைச் சூழ்ந்து உட்காருவர். அதன் தொடர்ச்சியாக இன்றும் வேப்பமர விறகுகள் கொளுத்தப்படுகின்றன. மக்கள் உடல் நோயை தீர்க்கும் வெற்றியைத் தந்திடும் என்ற நம்பிக்கையில் அதன் சாம்பலை உடலில் தடவிக் கொள்கின்றனர். பிள்ளை இல்லாதோர் வேண்டி பிள்ளை பிறந்தால் பிள்ளையின் எடைக்கு எடை காசு தருகின்றனர். பேய்பிசாசு பிடித்தோர் பில்லிசூனிய பாதிப்புடையோர் அதிலிருந்து விடுபட இங்குவருகின்றனர். திருமணத் தடை, குடும்பச்சிக்கல் நீங்க வேண்டியும் மக்கள் சித்தர் சமாதிக்கு வருகின்றனர். இக்கோவில் தனியாரால் பேணப்படுகிறது. காலை 6 முதல்12 மணி வரையும், மாலை 3.30 முதல் 8.30 வரையும் கோவில் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவதால் நாள் முழுதும் கோவில் திறந்திருக்கும். அன்று பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் நண்பகலிலும் இரவிலும் தானமாக சோறு போடப்படுகிறது. கோவில் தொலைபேசி 08577 224877. இங்கிருந்து 8 கி.மீ.தொலைவில் கைலாச கோனை அருவி உள்ளது. இங்கு செல்ல ஊத்துக்கோட்டை வழியாக பேருந்து போக்குவரத்து உள்ளது.   

Wednesday, October 14, 2015

நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்


இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.முடிந்தவர்கள் உதவவும். இணையத்தில் பகிரவும்Cell: 9865181457            Email: balakf@gmail.com











இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம்.முடிந்தவர்கள் உதவவும். இணையத்தில் பகிரவும்Cell: 9865181457    Email: balakf@gmail.com


 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar