"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, May 8, 2014

ஜல்லி கட்டு விளையாட்டிற்கு தடை ! யாதவர்கள் கடும் கண்டனம் !

இவ்வுலகில் மிகவும் மூத்தக்குடி தமிழ்க்குடி , இவ்வுலகின் முதல் நாகரிக இனம் தமிழ் இனம் , இவ்வுலகின் முதல் போர் வீரன் தமிழன் மற்றும் கலை இலக்கியம் பண்பாடு அறிவியல் என பல பெருமைமிகு அடையாளங்கள் கொண்டது எமது தமிழ் இனம் . 
ஜல்லி கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை – கறுப்புக்கொடி ஏற்றி துக்கம் அனுஷ்டித்த வீரர்கள்

அத்தகைய இனத்தின் வாழ்வியல் தடங்கலும் சிறப்புகளும் பெருமைகளும் ஒவ்வொன்றாக இனத்துரோகிகளாலும் இந்திய நயவஞ்சக ஆட்சியாலும் மதத்திற்கொரு சட்டம் என்ற போலி மதச்சர்ப்பின்மையாலும் தமிழனின் குறிப்பாக இந்துக்களின் பல உரிமைகளும் அழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது . 

தமிழனின் நிலப்பரப்பு சுருக்கப்பட்டது , நீர் ஆதாரம் அபகரிக்கப்பட்டது , தமிழீழம் நசுக்கப்பட்டது என எண்ணிலடங்கா துயரங்களை தமிழினம் சுமந்து நிற்கின்ற இவ்வேளையில் மேலும் ஒரு பழிவாங்கும் வேலையை இனத்துரோகிகளும் இந்திய போலிச் சட்டமும் செய்துள்ளது. 

அதுதான் இன்று வெளியிட்ட "ஜல்லி கட்டு விளையாட்டிற்கு தடை" என்ற துரோகத் தீர்ப்பு. தடைக்கான காரணம் பிராணிகளை வதைப்பது குற்றமாம், ஐயகோ ! இந்த கேடு கெட்ட இந்திய சட்டத்தின் கண்களுக்கு தினம் தினம் ஆநிரைகள் கொள்ளப்பட்டு விற்கப்படுவது தெரியவில்லையா ? மாட்டிறைச்சி விற்ப்பனையை சட்டப்படி குற்றம் என அறிவித்து அதை தடுக்க முடியுமா ? இந்த போலி மதசார்பற்ற இந்திய சட்டங்களால் அதை தடுக்க முடியுமா ? 

தமிழனின் கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் முல்லைநிலத்தின் ஆயர்(யாதவர்) குடியில் துவங்கி, தமிழன் பரவி வாழ்ந்த பாரத தேசம் முழுவதும், துவாரகை மன்னன் தமிழ் கடவுள் கண்ணனைத் தொடர்ந்து, சிந்துசமவெளி வரை கடைபிடிக்கப்பட்டும் விளையாடப்பட்டும் இன்று வரை தமிழ் குடியில் தொடர்ந்து வரும் வீர விளையாட்டல்லவா ஆநிரை அடக்குதல். 

அதற்க்கு ஆதாரங்கள் பலவும் உண்டல்லவா நம்மிடம். இவ்வாறு பெருமைமிகு பழமைமிகு வீரமிகு தமிழனின் வீர விளையாட்டான "ஆநிரை அடக்குதலை" எப்படி இந்த இந்திய சட்டம் தடை செய்யலாம் ? தமிழன் எனில் அவனுக்கெதிராக எதையும் செய்யலாம் என்ற நிலையை அல்லவா காட்டுகிறது . இதே நிலை நீடிக்கும் எனில் எதிர்கால தமிழனின் ஒட்டுமொத்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் நிலை என்னாவது ?

ஏர் உழுதல் கட்டை வண்டி போன்ற வேலைகளுக்கும் தான் மாடுகள் பயன்படுத்தப் படுகிறது . அதற்கும் தடைவிதிக்க முடியுமா அல்லது அதற்க்கான வேலைகளையும் இனத்துரோகிகளும் இந்திய அரசும் செய்கிறதா ? தமிழினமே நான் இப்படியே உறங்கிக்கொண்டிருந்தாள் உடுத்தியிருக்கும் உடையும் மிஞ்சாது. 

ஆயர் (யாதவர்) மூலம் தோன்றிய " ஜல்லி கட்டு விளையட்டிற்க்கான " தடையை யாதவ சமுதாயம் ஒருபோது ஏற்காது என கூறிக்கொள்கிறோம். மேலும் இந்த தீர்ப்பை வண்மையாக கண்டிக்கின்றோம். உத்தரவை திரும்பப் பெறவில்லையெனில் அணைத்து யாதவர்களும் ஜல்லிக்கட்டு வீர்களும் இணைந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துக்கொள்கிறோம் .....

via facebook

Wednesday, May 7, 2014

Monday, May 5, 2014

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960 




எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான் 

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன் 

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான் 

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத 
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் 
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன் 

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா



Saturday, May 3, 2014

கோனார் கடை - Konaar Kadai

உணவு வகைகளுக்கு பிரபலமான மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கோனார் கடை இன்றளவும் பிரபலமாக உள்ளது.
முதலில் சுந்தரக் கோனார் என்பவர் கடை ஆரம்பித்து  இட்லி சுட்டு விற்று வந்தார். கடை ஆரம்பித்த புதிதில் பெயர் பலகை எதுவும் கிடையாது, கடைக்கு வருபவர்கள் "கோனார் கடை" என்று கூப்பிட ஆரம்பித்து அதுவே பெயராக மாறி விட்டது. கால மாற்றத்திற்கேற்ப தாமும் மாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பையன் மாணிக்கம் கறி தோசையை அறிமுகப்படுத்தினார். அது இன்றும் மதுரை மக்கள் மட்டுமில்லாமல் வெளியுர்காரர்களும் விரும்பும் உணவு வகையாக உள்ளது. ஒருதடவை ருசித்து விட்டால் அதன் சுவை நாவை விட்டு அகலாது. அதன் சுவையின் ரகசியம் வீட்டுப் பெண்கள் மசாலா தயாரித்து தருவதுதான்
கோனார் கடை கறி தோசை செய்முறை : (4 பேர் சாப்பிடக் கூடிய அளவு )
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி 1/4 படி
உளுந்து 100 கிராம்
ஆட்டுக்கறி 400 கிராம்
நல்லெண்ணெய் 200 மி.லி
முட்டை 4 ( ஒரு தோசைக்கு ஒன்று)
கோலா உருண்டை - தேவையான அளவு
தக்காளி 1/4 கிலோ
மிளகு 25 மி.கி
சீரகம் 200 மி கி
வத்தல் 20 மி கி
செய்முறை :
புழுங்கலரிசியையும் உளுந்தையும் கலந்து அரைத்து மாவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  கறியை பொடிப் பொடியாக வெட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.  தக்காளியையும் வத்தல் பொடியையும் கலந்து கறி வேகும் போது போட வேண்டும்.  மிளகையும் சீரகத்தையும் கலந்து பொடியாக்கி கறி வெந்த பிறகு போட வேண்டும்.  தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கறியை நன்றாக வதக்க வேண்டும்.  பின் தோசை மாவு ஒரு கரண்டி எடுத்து ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கிண்டி விட வேண்டும்.  கறி வறுவலை தோசை மேல் தூவி எண்ணெய் ஊற்றி வேக வைத்து புரட்டிப் போட்டால் கறி தோசை ரெடி !

இட்லி,இடியாப்பம்,முட்டை தோசை,நெஞ்சுக் கறி குழம்பு ,சுக்கா,கோலா ஆகியவையும் இங்கு பிரபலம்.ருசியில் மட்டுமில்லாமல் சுத்தம் மற்றும் சுகாதாரத்திலும் கவனம் செலுத்துகின்றனர். நயம் தும்பை எண்ணெய்தான் உபயோகிக்கின்றனர். அரசியல் பிரமுகர்களும்,திரைப்படப் பிரபலங்களும் இங்கு வந்துள்ளனர். இது அசைவ உணவகம் என்றாலும் மீன் வகைகள் கிடைப்பதில்லை. காரசாரமான அசைவ உணவு வேண்டுவோர் இங்கு செல்லலாம். மதுரை சிம்மக்கல்லில் இந்த உணவகம் அமைந்துள்ளது. தற்போது அண்ணாநகர் ஏரியாவிலும், தங்கரீகல்  திரைப்படக் கொட்டகை அருகிலும் இதன் கிளை உணவகங்கள் இயங்குகின்றன.

கடை இயங்கும் நேரம்: 11:30 AM to 11:00 PM
தொடர்பு விபரங்கள் 
முகவரி: சிம்மக்கல் , மதுரை, இந்தியா 625001
தொலைபேசி: 088 07 7799 96 
நன்றி:நம்மதுரை

Friday, May 2, 2014

இடைச்சாதி

பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.



இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!


மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)

முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)

திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும் கடலுக்கும் இடையில் பள்ளிகொள்ளும் இடையன்


தேகத்தின் உள்ளுக்கும் புறத்துக்குமான ஆத்மாவில் உறைபவன்


பலராமனுக்கும் சுபத்ரைக்கும் இடையில் பிறந்தவன்


இடையர்குலத்தில்பிறந்தவன்


பசுக்களின்கூட்டத்திலிடையிலிருந்தவன்

யசோதையால் இடையில் கட்டுண்டவன்

இரண்டு மரங்களுக்கு (யஷர்கள்) இடையில் சென்று மோட்சமளித்தவன்)

காளியனின் சிரசில் ஐந்துதலைகளுக்கு இடையில் நர்த்தனமாடியவன்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில்தூது சென்றவன்

Thursday, May 1, 2014

Dr. T. Devanathan Yadav Images Collection



 

























Saturday, April 26, 2014

R S Raja Kannapan yadav Image Collections














RS Raja Kannappan






                      




                                            
         











 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar