"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Thursday, August 21, 2014

24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்


அன்புள்ள எனது யாதவ சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்... வருகின்ற 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று நமது யாதவ அமைப்பான சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருகின்றது. இதில் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு ஏற்படுதுவது, கல்வி வழங்குவது, சட்டரீதியான ஆலோசனைகளை தருவது ஆகிய செயல்களுக்காக நமது அமைப்பின் சார்பாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். இதை மேலும் வலுபடுத்த தானும் தன் சமுதாயமும் வளம்பெற அணைத்து அங்கிகாரமும் பெற்றிட ஓவொரு தனிமனிதனின் கருத்துக்களை பதிவு செய்ய அனைவரையும் வருக என வரவேற்கும் உன்னைப்போல் ஒருவன்... 

இடம் : 
3rd Main Rd, T
ower Park, 
Anna Nagar West, 
Chennai, 
Tamil Nadu 600040.... Time : 9 am ...

தொடர்புக்கு செந்தில் கோன் 9042999966

Wednesday, August 20, 2014

மும்பையில் தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்


மும்பையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


அந்தேரி

மும்பை அந்தேரி யாதவ மகாசபை சார்பில், மரோல் பைப்லைன் தமிழ் சாய் நகரில் உள்ள சங்க பணிமனையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துசாமி, செயலாளர் பப்பு நாதன், ஆலோசகர் முத்துகுமார், நிர்வாகிகள் வேம்பு, நித்தியானந்தன் மற்றும் உறுப்பினர்கள், இளைஞர் அணியினர் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று காலை உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

வசாய் ரோடு

பால்கர் மாவட்டம் வசாய்ரோடு யாதவ சங்கம் சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் நல்லகண்ணு மணி யாதவ் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர் தாஸ், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சீனிவாசன், கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, சுடலைகண்ணன், வேலாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

கார்கர்

நவிமும்பை கார்கர் கேந்திரிய விகார் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு சங்க தலைவர் முருகன் யாதவ் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் யாதவ் முன்னிலை வகித்தார். சிவக்குமார் யாதவ் வரவேற்று பேசினார். ஆசிரியர் முத்தையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் பன்வெல் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த் தாக்கூரின் சகோதரர் பரேஷ் சேட், கார்கர் தமிழ்சங்க தலைவர் செல்லப்பா, செயலாளர் ராமர்சிங்கம், கலம்பொலி தமிழ்சங்க தலைவர் மணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தயிர்பானை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி நடந்தது.

நியூபன்வெல்

நவிமும்பை நியூபன்வெல் யாதவர் சங்கம் சார்பில் ஆந்திர சமிதி அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. சங்க தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பன்வெல் தமிழ்ச்சங்க தலைவர் தங்கராஜ், செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் லட்சுமண், ஆலோசகர் ரவிபிள்ளை, இசக்கி, அருணாச்சலம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலம்பொலி

நவிமும்பை காமோட்டே மற்றும் கலம்பொலி யாதவர் சங்கம் இணைந்து காமோட்டே செக்டர்-7 சீத்தல் அரங்கில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் குமார், சங்கமுத்து, மூர்த்தி, லட்சுமணன், மாசானம், ரமேஷ், எம்.எஸ்.மணி, கே.சாமி, அர்ச்சுனன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

முல்லுண்ட்

மும்பை முல்லுண்ட் யாதவ் சங்கம் சார்பில் தானே ஸ்ரீநகர் ஸ்ரீமங்கள் காரியாலா அரங்கில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில், முல்லுண்ட் யாதவ சங்க தலைவர் எஸ்.இ.முத்து முன்னிலை வகித்தார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 10, 12-ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் முத்து, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் பாலமுருகன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

கோவண்டி

மும்பை கோவண்டி யாதவர் சங்கம் சார்பில் சிவாஜி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு சங்கத்தின் சார்பில் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் எஸ்.இ.தாஸ், பொறுப்பாளர் இ.எஸ்.முத்து தலைமையில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி

மும்பை யாதவ எஜூகேசன் வெல்பர் சொசைட்டி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா மாட்டுங்கா லேபர்கேம்ப்பில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சங்க தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் சங்கர் யாதவ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மந்திரி வர்ஷா கெய்க்வாட் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

சுவாமி யாதவ், மாடசாமி யாதவ், சிவசுப்பிரமணியன் யாதவ், சுப்ரமணி யாதவ், ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் இ.முருகன் யாதவ் நன்றி கூறினார். சிறப்பு பூஜையில் ஐந்துமலை ஐயப்பா டிரஸ்ட் முருகேஷ் குருசாமி தலைமையிலான குழுவினர் பஜனை பாடல்கள் பாடினார்கள்.

செம்பூர்

செம்பூர் யாதவர் சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு சங்க தலைவர் சுப்பையா யாதவ் தலைமை தாங்கினார். இரவு 7 மணி முதல் 12 மணி வரை கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தானே மாவட்டம் மிரா ரோடு தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இரவு 12 மணிக்கு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tuesday, August 12, 2014

கோகுலாஷ்டமி(எ)கிருஷ்ண ஜெயந்தி(எ) ஜென்மாஷ்டமி

கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.
அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று,ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.
பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.
   
தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.
அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு (மக்கள் அனைவருக்கும்) நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!
வழிபாட்டு முறை:
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
"ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும் போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்.
கண்ணனின் பரிபூரண அருள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது. பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.
மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும்.வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெரும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.
வழிபாடு செய்யும்போது கோவிந்தா என்று அழைத்து வழிபாடு செய்தால் அதிக பலன்களை பெறலாம். அதன் பொருள் பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். பூமியை தாங்குபவர். வேண்டுவதால் அடையக் கூடியவன் என்பதாகும்.இதனால்தான் ஆதிசங்கரரும், பஜகோவிந்தம் பாடுங்கள் அது மரண பயத்தை போக்கும் மந்திரம் என்றார்.
கிருஷ்ண ஜெயந்தி வழி பாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.
பெண்கள் அரசியலில் சிறந்து விளங்க இவ் வழிபாடு மிகவும் சிறந்த வழிபாடு 
திருமண தடை நீங்கும்:
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே இப்பாடலை பாடிய ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் மடியில் கண்ணன் அமர்ந்து பாடல்கள் கேட்பானாம். அதனால் அவர் தொடையை தட்டி தாளம் போடாமல் பாடுவாராம். அத்தகை சிறப்புமிக்க இந்த ஊத்துக்காட்டில் காலிங்க நர்த்தனனாக இருக்கும், கண்ணனை வழிபடுவதன் மூலம் பகையை வெல்லலாம்.
எதிரிகள் அஞ்சிடுவர், நாகதோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும்.இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காட்டில் உள்ளது. காம தேனு இறைவனின் அழகை கண்டுகளித்து இசையில் நனைந்த இடமான தேனு சுவாசபுரம் என்று அழைக்கப்பட்ட மூச்சுக்காடு எனும் ஊத்துக்காடு ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலயம் சென்று வழிபட்டு வரமேன்மை காண்பார்கள்.
கண்ணன் பிறந்த மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யமுனை கரையோரம் கண்ணன் விளையாண்ட கேசியார்ட், கோவர் தனன் ராதை பிறந்த பட்சனா மகாபன் கோகுலம், நந்தி கிராமம் என்ற இடங்களில் மிகவும் பிரமாண்ட முறையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபடுவோம்

Monday, August 11, 2014

”தாஹி ஹாண்டி ” விழாவில் பங்கேற்க 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்: பாம்பே உயர் நீதிமன்றம்


மும்பை,
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, உயரமான இடத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் வெண்ணைய் நிரப்பிய பானையை மனித கோபுரம் அமைத்து உடைக்கும் விளையாட்டு கொண்டாடப்படுகிறது.


இந்த விளையாட்டுக்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க கூடாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 20 அடிக்கு மேலாக வெண்ணைய் நிரப்பிய பானைகளை தொங்க விடக்கூடாது என்றும் கூறியுள்ளது. தற்போது 40 அடி வரை உயரமாக இந்த பானைகள் தொங்கவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar