"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, August 26, 2013

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

தாண்டவராயக் கோனார் கூற்று
கண்ணிகள்
எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லா பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே. 1
வானியல் போல் வயங்கும் பிரமமே
சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்
ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று
ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே. 2
முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்
சேரா வாகுமே கோனாரே. 3
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே. 4
ஆரண மூலத்தை அன்புட னேபர
மானந்தக் கோலத்தைப் பண்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திரும் கோனாரே. 5
காலா காலங் கடந்திடும் சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே. 6
சொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்
அந்தகன் கிட்டுமோ கோனாரே. 7
சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே
நற்பதி சேர்ந்திடும் கோனாரே. 8
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே. 9
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே. 10


Related Posts:

  • மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங் மத்தியில் 3-வது அணி  ஆட்சி அமைக் கும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்  முலாயம்சிங் யாதவ் கூறினார். கோரக் பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முலாயம்சிங் பேசியதாவது: நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்த லில் 3-வது அ… Read More
  • யாதவர்களே சூளுரைப்போம் ! அணைத்து யாதவ மக்களையும் விழிப்படைய செய்வோம் ! !வெற்றிபெருவோம்!!! 1.உங்கள் தொகுதியில் யாதவ கட்சி சார்பாக யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே நீங்கள் ஓட்டுப்போட வேண்டும் !2.யாதவர் ஒருவர் எந்த கட்சியையும் சாராது தனித்து போட்டியிட்டால் அவருக்கே உங்கள் ஓட்டு என்பதை உறுதி செய்ய வேண்டும் !3. தி மு… Read More
  • திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார் ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எ… Read More
  • இதை தவறாமல் படிக்கவும் ! இதை தவறாமல் படிக்கவும் என் ஆயர்குலமே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய குடி முல்லை நிலத்து ஆயர்குடி.புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச் செல்வத்தை பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுக்  கொண்டனர… Read More
  • Konar-yadav Konar or Idaiyar or Tamil Yadavar is a Chandravanshi Kshatriya caste from the Indian state of Tamil Nadu. It is a sub-division of the Yadava community. They are also known as Ayars. Konars are distr… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar