Friday, July 10, 2015
Home »
» வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 256வது ஜெயந்தி விழா இன்று (சனிக்கிழமை) அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.
விழாவானது, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 12ந் தேதி காலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கட்டாலங்குளம் பகுதியிலும் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் ஜோதி, கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும்,
தூத்துக்குடி மாவட்டத்துக்குள் அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும், விழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Posts:
கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்… Read More
எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவிப்பு எழும்பூரில், சுதந்திர போராட்ட மாவீரர், வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் நிர்வாகிகள் என்.சுப்பிரமணியம் யாதவ், ஆர்.பி.தர்மலிங்கம… Read More
69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை 69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்… Read More
கோகுல ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா அடக்கி ஆண்ட வம்சம் எவருக்கும் அடங்கி வாழ முடியாது கோகுல ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா அனைத்து சொந்தங்களும் விழாவினை சிறப்பித்து தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவண், கோகுல ஆ… Read More
யாதவர் பண்பாட்டுக்கழகம் நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா விருதுநகர் மாவட்டம், இராசப்பாளையம் வட்டம் - சொக்கநாதன் புத்தூர் கிராம "யாதவர் பண்பாட்டுக்கழகம்" நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா வரும் 05/09/2015 அன்று நடைபெற இருக்கிறது. எங்கள் ஊரில் நடைபெறும் கிர… Read More
0 comments:
Post a Comment