"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Monday, July 21, 2014

Join to all Yadav ! Welcome to all Yadav!!

நமது சமுதாயத்தில் நடக்கும் குடும்ப விழாக்கள் திருவிழாக்கள் மற்றும் யாதவா பொதுக்கூட்டங்கள் போன்றவைகள் எங்களுக்கு அனுப்புங்கள் அதை இணையதளத்தில் வெளியிடுவோம்
தொடர்புக்கு
tamilyadavs@gmail.com
7200671482
9884774983

Friday, July 18, 2014

ஜீலை 20 சங்கை ஆண்ட சிங்கம் மாவீரன் செ.குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாள்

சங்கையை ஆண்ட எங்கள் சிங்கம்
யாதவ குல தங்கம்
உன் நினைவு நாளே
எங்கள் எழுச்சி திருநாள்
ஆம் மாவீரன் குருசாமி யாதவ்
அவர்களின் நினைவு நாளே
யாதவ இளைஞர்களின் எழுச்சி நாள்

யாதவ சிங்ககளே மாவீரன் விழவில்லை நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்.
அன்று வீழ்ந்த்து ஒரு குருசாமி இன்று வாழ்வது 1000 குருசாமி.
யாதவ இன எழுச்சி நாளில் சபதம் ஏற்போம்.
 ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்

யாதவர் லட்சியம்! வெல்வது நிட்சயம்!
ஓங்குக மாவீரனின் புகழ்! வாழ்க யாதவர் குலம்!!


மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 % கூடுதல் இடஒதுக்கீட்டினை பெற்றுத்தந்த மேதை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது ... ஒவ்வொரு ஆண்டும் தமிநாடு யாதவர் சங்கம் மண்டல் அவர்களின் பிறந்த நாளினை கொண்டடிவருவது குறிப்பிடத்தகுந்தது. இதே போன்று அனைத்து யாதவ மக்களும் தலைவர்களும் மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சார்ந்த அனைத்து மக்களும் மண்டல் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்



Wednesday, July 16, 2014

அல்வா கூட கிடைக்காது: லல்லு பிரசாத் யாதவ் கிண்டல்


வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இந்திய மக்களுக்கு அல்வாகூட கிடைக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறினார். 


இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து லல்லுபிரசாத் யாதவ் கிண்டல்!இதுதொடர்பாக ராஞ்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதற்கு நரேந்திர மோடி அரசு பொதுமக்கள் தனியார் பங்களிப்பு என்ற புல்லாங்குழலை வாசித்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு பணத்தை சம்பாதித்துவிட்டு லாபத்துடன் சென்றுவிடும். உங்களுக்கு (பொதுமக்கள்) அல்வாகூட கிடைக்காது. 

ஷாங்காய் போன்ற 100 நகரங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஆண்டு பட்ஜெட் போன்று அதிக செலவாகும் என்பதால் ஷாங்காய் போன்ற ஒரு நகரை கட்டமைப்பதே கடினம். 

புல்லட் ரெயில் திட்டம் அகமதாபாத்-மும்பை இடையே அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் உள்ளது. அந்த பகுதி மட்டும்தான் உண்மையான இந்தியா என்று நினைக்கிறார்கள். இது மக்களை மீண்டும் முட்டாளாக்கும் செயல். விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. இப்போது தக்காளி விலை கிலோ ரூ.60க்கு சென்றுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டு இடையன்களின் கிளைகள்

1.கரிகாலன் இடையன்
2.புதுநாட்டு இடையன்
3.சிவத்த இடையன்
4.கருத்த இடையன்
5.கல்லுகட்டி இடையன்
6.சாம்பார் இடையன்
7.அப்பச்சி இடையன்
8.செம்பலங்குடி இடையன்
9.தெலுங்கு இடையன்
10.உள்நாட்டு இடையன்
11.அரசன் கிளை இடையன்
12.வருதாட்டு இடையன்
13.பெரிய இடையன்
14.ஆட்டு இடையன்
15.சீவ இடையன்
16.புதுக்கண் நாட்டார் நம்பியார்
17.கருத்தமணி இடையன்
18.பால் இடையன்
19.மோர் இடையன்
20.நம்பி இடையன்
21.பாசி இடையன்
22.சிவார் இடையன்
23.கொள்ளு இடையன்
24.வடுக இடையன்
25.மொட்ட இடையன்
26.தலைப்பா கட்டு இடையன்
27.நாட்டு இடையன்
28.நார்கட்டி இடையர்
29.பால்கட்டி
30.பஞ்சாரம் கட்டி
31.சிவியர்
32.சோழியாடு
33.இராமக்காரர்
34.பூச்சுக்காரர்
35.கொக்கிக்கட்டி

Tuesday, July 15, 2014

யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்பில் அழகுமுத்துக்கோன் நினைவு மணடபத்தில் வரலாற்று பதிவுகள் வைக்க ஏற்பாடு

பெருமை மிகு உறவுகளுக்கு வணக்கம்
ஆக்கப்பூர்வமான தொடர் பணியில் - யாதவர் தன்னுரிமைப் பணியகம்
கட்டாலங்குளம் அழகுமுத்துக்கோன் நினைவு மணடபத்தில் வரலாற்று பதிவுகள் இல்லை என்பதை பலமுறை குறிப்பிட்டு இருந்தோம், அதனை தொடர்ந்து 11/07/2014 அன்று காலை யாதவர் தன்னுரிமைப் பணியகம் - மாணவர் அணியினர் மிக சிறப்பாக மதுரை யாதவர் கல்லூரியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள கட்டாலங்குளம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு மாலைஅணிவித்து அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கு செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியை சந்தித்து அவரிடம் ஆவணங்களையும், பிரபல ஓவியர் அய்யா ராமு வரைந்த வரலாற்று ஓவியங்களையும் காண்பித்தோம். மிக விரைவில் வரலாற்றுடன் ஓவியங்கள் அனைத்தும் அனுமதியுடன் வைக்கப்பட்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.


நன்றி !!! Athiban Yadav

அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா; பா.மு.க., தலைவர் பங்கேற்பு


வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா, அவரது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ம.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்து முன்னிலை வகித்தார். வீரன் அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா; பா.மு.க., தலைவர் பங்கேற்புபின்னர், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.84ஆயிரம் மதிப்பிலான காசோலை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 2 பேருக்கு சலவைப் பெட்டி, 6 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இங்குள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். இப்போது ரூ.1.50 லட்சம் செலவில் கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் முன்புற தோரணவாயில் சீரமைக்கப்படவுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் செய்தித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். தமிழக அரசின் சார்பில் மாலையிட்ட பிறகு திருச்சி பாரத முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் பாரதராஜா தலைமையில் செயல்வீரர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக பாரத முன்னேற்றக்கழகத்தில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்டாலங்குளம் சென்றிருந்தனர். அவர்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி கிளை கழகம் சார்பில் வரவேற்பும் உபசரிப்பும் செய்யப்பட்டது. வீரன் அழகு முத்துக்கோன் 255-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதராஜா யாதவ் செய்தியாளர்களிடம் பேசும்போது; வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்த ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆண்டுதோறும் நடைபெறும் வீரன் அழகுமுத்துக்கோன் ஜயந்தி விழாவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும். அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஓய்வூதியமும் வழங்க வேண்டும். வீரன் அழகுமுத்துக்கோன் விழாவுக்காக விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்தி, போதுமான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார் பாரதராஜா மேலும், மாவீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வேலி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் சமூக விரோதிகள் திருட்டு முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே மணிமண்டபத்தின் பின்புறத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் மோட்டார் பழுதடைந்துள்ளது. அவற்றைச் சீரமைக்க வேண்டும். மணிமண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற சில கோரிக்கைகளை அரசு முன் வைத்தனர்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar