Thursday, March 13, 2014
Home »
» முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி
முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் இந்த தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தற்போது அவர் மெயின்பூரி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். அந்த தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
அத்துடன் அசம்கார் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அசம்கார் தொகுதி தற்போது பாரதீய ஜனதா வசம் உள்ளது. இங்கு முஸ்லிம்கள், யாதவர்கள் அதிக அளவில் வசிப்பதால் தனது வெற்றிக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று முலாயம்சிங் யாதவ் கருதுகிறார்.
அசம்கார் தொகுதியானது பூர்வாஞ்சல் மண்டலத்தில் உள்ளது. பூர்வாஞ்சலில் 3 தொகுதிகள் சமாஜ்வாடி கட்சி வசம் உள்ளது. எனவே இங்கு போட்டியிடுவதன் மூலம் பூர்வாஞ்சலில் மற்ற தொகுதிகளையும் கைப்பற்ற ஏதுவாக இருக்கும் என்று முலாயம் சிங் யாதவ் கருதுகிறார்.
Related Posts:
அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல் சுதந்திரபோராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை கல்வி பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல் முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்… Read More
பொய்கை ஆழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர்… Read More
Chief Minister of yadava Community 1. Chaudhary Brahm Prakash Yadav First CM of Delhi 2. Praffula Chandra Ghosh First CM of West Bengal 3. Bindheshwari Pra… Read More
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற… Read More
108 வைணவத் திருத்தலங்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்றத் தலங்கள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும் அந்தப் பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு … Read More
0 comments:
Post a Comment