"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Friday, March 28, 2014

தமிழக சமாஜ்வாதி கட்சி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 10 தொகுதிகளில் போட்டி


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 7 தொகுதிகள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் சிதம்பரத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டி: தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிட பட்டியலை தேர்வு செய்து அகில இந்திய தலைவர் முலாயங்சிங் யாதவிற்கு அனுப்பினோம். அவர் தமிழகத்தில் கீழ்கண்ட 10 தொகுதிகளில் போட்டியிட அனுமதி வழங்கியுள்ளார். 7 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
விரைவில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மேலும் தமிழகத்தில் இந்திய கம்யூ கட்சி தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோரை தேர்தல் பணிக்குழு சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். வேட்புமணு தாக்கல் முடிவுற்றவுடன் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு 10 தொகுதிகளில் ஆதரவு அளித்தால், மற்ற தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை ஆதரித்து முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர் என இளங்கோயாதவ் தெரிவித்தார். பேட்டியின் போது மாநில விவசாய பிரிவு செயலாளர் வீரமணியாதவ், மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.ஜெயகாந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்பாளர்கள் பட்டியல் விபரம்: பொள்ளாச்சி- மாலி.சதீஷ்யாதவ் (மாநில பொருளாளர்), ராமநாதபுரம்- வழக்குரைஞர் சபாபதி (மாநில துணைத் தலைவர்), மயிலாடுதுறை- வி.இளப்பன்யாதவ் (ஓய்வுபெற்ற உதவிஆட்சியர், மாநில அமைப்புச் செயலாளர்), தேனி- ஜி.கே.மீனாட்சிசுந்தரம் (தேனி மாவட்டத் தலைவர்), கரூர்- எம்.முருகேசன் (மாநில தொழிற்சங்க பிரிவு செயலாளர்), திருவண்ணாமலை- ஆதி.வெங்கடேசன் (மாநிலச் செயலாளர்), வேலூர்- என்.நந்தகுமார் (மாநில இளைஞரணி அணி செயலாளர்).

Related Posts:

  • அழகுமுத்துக்கோனின் வரலாற்றை பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல் சுதந்திரபோராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றை கல்வி  பாடமாக இடம்பெறச்செய்ய வலியுறுத்தல்       முதல் சுதந்திரபோராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்… Read More
  • பொய்கை ஆழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர்… Read More
  • பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற… Read More
  • 108 வைணவத் திருத்தலங்கள் ஆழ்வார்களால் பாடல் பெற்றத் தலங்கள்   பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும் அந்தப் பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு … Read More
  • Chief Minister of yadava Community 1.      Chaudhary Brahm Prakash Yadav First CM of Delhi 2.      Praffula Chandra Ghosh First CM of West Bengal 3.      Bindheshwari Pra… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar