Saturday, July 29, 2017
Home »
» திருச்செந்தூர் சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா
திருச்செந்தூர் சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா
திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாய சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 10 மணிக்கு கும்ப பூஜையை தொடர்ந்து 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும் பின்னர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகாஅபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகாசபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் உள்பட பலர் செய்திருந்தனர்.
Related Posts:
நெல்லையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டி இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் நெல்லை பாராளுமன்ற வேட்பாளராக யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணியளவில் … Read More
சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ...., தலைவர்களுகாக சமுதாயம் இல்லை. அனைத்து யாதவ சொந்தங்களுக்கும் வணக்கம்... தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களை புறக்கணித்து வருகின்ற வேளையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து யாதவ சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று யாதவ சமு… Read More
யாதவ பெருமக்களுக்கு - ஒரு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டாக்டர் திரு. M. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர், Indian Bank அவர்கள் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற (April 2014) தேர்தலில் யாதவர்களின் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவுக்கும் கூட… Read More
ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை வரலாறு கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒ… Read More
முலாயம் சிங் யாதவ் 2 தொகுதியில் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ் வாடி கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்தனி அணியாக போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறத… Read More
0 comments:
Post a Comment