"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Wednesday, December 28, 2022

Karmegha Konar — the forgotten doyen

 

Scholar Karmegha Konar’s grand daughters recall stories that show his contribution to the language of Tamil



As the first Vice President of India, when Sarvepalli Radhakrishnan visited Madurai during Pongal celebrations in 1953, in one his speeches he said, "A library gets its fillip only when it has the Bhagavad Geeta, the Bible, the Koran and literary works of Shakespeare.”

History records that the speaker found a challenge from a member in the audience, Karmegha Konar, who questioned why Tirukkural, the classical Tamil language text consisting of 1,330 short couplets did not find a mention his speech. He then requested the former Vice President to ensure that one of the most intellectual works in Tamil should also find a place in all the libraries, not only across the State, but also the country and the world.

This conversation is recorded in Karmegha Konar's biography “ Senthamil Valartha Sennapulavar ” written by his grandaughter K Alagi in 2006. A summarised biography was released by the State Government as a five-page booklet on his 100th birth anniversary 31 years ago. (The book can be purchased from “Aadhithya Padhipagam” in Reserve Lines, Madurai).

Sharing the incident with Metroplus, Alagi, who retired as Principal of Yadava College, says so much of her grandfather's research on Tamil language still remains undocumented. She spends most of her time now searching, compiling and publishing his writings.

The forgotten scholar had a unique life which began in a small village called Agathar Iruppu, near Madurai and went on to the hallowed halls of great institutions, such as the Tamil Sangam where he was a student and The American College where he taught Tamil for close to four decades while heading the Department of Oriental languages.

Born to a farmer couple in 1889, it was his father who was keen to put his son through formal education and ensured that Karmegha completed his t hinnai pallikoodam before the age of 15.

The young boy joined a local businessman, Thupasu Kadhar, as an accountant, who noticed Karmegha's passion for Tamil language and suggested that they admit him to the fourth Madurai Tamil Sangam that was beginning to establish itself at the turn of the century.

Alagi says, “Only 35 students were allowed to learn in a year and more than 30 seats were already taken. But his father had tremendous faith in his prodigious son. Karmegha joined the institution in 1904 and passed out as ‘Pandithar ‘ in 1912. He was the only non-Brahmin student.”

It was Tamil Thatha U.VE.Swaminatha Iyer who recommended the 22-year-old's name for the post of lecturer in the newly begun Tamil department at The American college. He chose to call himself Karmegha Kone in English to avoid being identified with his caste. Kone means king in tamil

The early 1900s was also the time when the Tamil printing press was setting up and epics like Cilappathikaram and the Tirukkural were published. For a man who immersed himself in his mother tongue, says K Kalavathy, 70, another grand daughter of Karmegha, the city has forgotten the scholar today. Two dates, February 19 - the Tamil doyen U V Swaminatha Iyer's birth anniversary and February 21, the International Mother Language Day, quietly slipped by with no recall of the two scholars.

“There is a story about my grandfather who made his first impression with Tamil sangam’s principal.Narayana Iyengar, when he was asked to recite “Palum Theli thenum “ hymn. He was only 17 but his pronunciation and style of recitation was marked as noteworthy," says kalavathy.

In 1955, Sir PT Rajan , conferred the title ,’Sennapulavar’ to Karmegha Konar at The Madurai Thiruvalluvar Kazhagam. He also arranged for Karmegha to be brought to the function in a chariot pulled by two horses which was a rare honor to Tamil scholars.

Karmegha Konar's speech at the Madras University on Tamil culture was translated and published in The Hindu in 1927 under the title Ancient Tamil culture and civilisation. In 2006 Tamil Nadu Government purchased 17 of his books including 'Nallisai Pulavargal ,Kannagi Devi ,Arivu Nool thirattu and nationalised them.

“The boy from a remote corner lived his dream but the people have forgotten the scholar in him”, says Alagi.


Source: https://www.thehindu.com/society/history-and-culture/karmegha-konar-the-forgotten-doyen/article34036295.ece

Tuesday, July 3, 2018

திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் 16-ந்தேதி மகா கும்பாபிஷேகம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஏழுமலையான் கோவிலிலும் அதனை சார்ந்த மற்ற சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆனந்த நிலையம், கருடாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, வரதராஜர், யோக நரசிம்மர், ஆஞ்சநேய சுவாமி சன்னதிகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆகஸ்ட் 11-ந்தேதி இரவு 9 மணி முதல் 10 மணிக்கிடையே அங்குரார்ப்பணம் நடக்கிறது. 12-ந்தேதி பாலாலயம் மற்றும் முதல் யாக சாலையில் உற்சவமூர்த்திகள் கருவறையில் இருந்து யாக சாலைக்கு கொண்டு வரப்பட உள்ளனர்.

தொடர்ந்து 13-ந்தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரை 9 மணி நேரம் யாக சாலையில் பூஜைகள் நடக்கிறது.

14-ந்தேதி யாக சாலையில் சிறப்பு பூஜைகளும், 15-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு மகா சாந்தி திருமஞ்சனமும் நடக்கிறது.

இரவு யாக சாலையில் மகா பூரணாஹூதி நடக்கிறது. 16-ந்தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையொட்டி 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதன்படி ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பக்தர்கள் மட்டும் பூஜை நேரங்கள் அல்லாத நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடியும்.

இதனால் அனைத்து ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனம், ரூ.300-க்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

தொடர்ந்து அக்டோபர் 3-ந்தேதி வரை 45 நாட்களுக்கு சிறப்பு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் 16-ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்கிடையே கருட வாகனத்திலும், இரவு 9.30 மணிக்கு பெரிய சே‌ஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

எனவே ஆஸ்கட் 11-ந்தேதி வரை 6 நாட்களுக்கு குறைந்த அளவு மட்டும் நேரம் ஒதுக்கப்படுவதால் பக்தர்கள் அதற்கேற்ப தங்கள் திருமலை பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

'யாகூ' நம் தொழில்முனைவோர் பயிற்சி முகாம்


வேலை தேடுவோர் அல்ல 'யாம்', வேலை கொடுப்போரே 'யாம்'

'யாகூ' வரலாற்று நிகழ்வின் துவக்க நாயகன் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS, (Small & Medium Scale Industries, Secretary to the TN Government) அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி 'யாகூ 2018' தொழில் முனைவோர் இரண்டு நாள் பயிலரங்கை துவக்கிவைத்து, தமிழக அரசின் தொழிற் கொள்கை குறித்த எளிமையான விளக்கமும், தொழில்முனைவோருக்கு உதவ விரும்பும் அவரின் உற்சாகப் பேச்சும் கேட்ட அனைவரையும் ஈர்த்தது.



நம் முதல் தலைமுறைத் தொழில் முனைவோருக்காக 'யாம் கூடுகை' என்னும் 'யாகூ' தொழில் முனைவோர் பயிற்சி முகாம் சர்வதேசத் தரத்தில் சென்னை - வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டலில், ஜீன் 23 & 24 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை, தலைவர் டாக்டர் ம.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நம் இளைஞர்கள் 'வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்' என்பதை அடிநாதமாகக் கொண்டு, நம் முதல்தலைமுறை தொழில்முனைவோர்களை முதல் கட்டமாக 20-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆர்வமுள்ள 100 இளைஞர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் நோக்கம் இளையோருக்குள் நல்ல அறிமுகம், இணைப்பு, தொழில் விரிவாக்கத்திற்கான சூட்சுமங்கள், நெறிமுறைகள் முதலானவற்றை கற்றுக் கொள்ளவும், அந்தந்தத்துறையின் சமகால நிகழ்வுகள், புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்கள் முதலானவற்றை உள்வாங்கித் தத்தம் தொழில் நிலைப்பாடுகளைச் செம்மையாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும். தொழில் அதிபர்களுடன் நேரடியாக உரையாடி உத்வேகம் பெற வைக்கும் என்ற அடிப்படையில் நடைபெற்றது.
தொடரும்...யாகூ 2018

Monday, January 1, 2018

கல்லூரியை ஒப்படைக்க வேண்டும் - அரசுக்கு யாதவர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் : 'யாதவர்கள் கல்வி நிதியில் நடத்தப்படும், யாதவர் கல்லுாரியை, அரசு திரும்ப ஒப்படைக்க, வேண்டும்' என, அந்த ஜாதியினர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.யாதவர் பேரவையின், 12வது மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் வேலுசாமி தலைமையில், காஞ்சிபுரத்தில் நடந்தது.மாநில துணை செயலர் துரைராஜ், வழக்கறிஞர் பாலகுமார், மாவட்ட நிர்வாகிகள் முரளிமோகன், வெங்கடேன் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
● மதுரையில், யாதவர்கள் கல்வி நிதியில் நடத்தப்படும், யாதவர் கல்லுாரியை, அரசு திரும்ப தங்களிடமே ஒப்படைக்க வேண்டும்
● மேய்ச்சல் நிலங்களை உருவாக்கினால் தான், கால்நடைகளை காப்பாற்ற முடியும்
● மேய்ச்சல் புறம்போக்கு வகைப்பாடு உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை, அரசு மீட்கவேண்டும்
● தமிழகத்தில், மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகையிருந்தும், ஜாதிவாரியான கணக்கெடுப்பு பட்டியலை, அரசு வெளியிடவில்லை; உடனடியாக வெளியிட வேண்டும்
● ஆடு வளர்ப்பு நல வாரியத்தில், யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தான், தலைவராக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன.பேரவையின் நிறுவனர் மருத்துவர் காந்தையா தலைமையில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத்தலைவராக சேலம் கண்ணன், பொதுச்செயலராக கோவை தங்கப்பழம், பொருளாளராக சென்னை ஜெயகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.

Saturday, August 5, 2017

“புலியையே குத்திக் கொன்னதால இந்தப் பேரு!” - வீரத்துக்குப் புகழ்பெற்ற புலிக்குளம் நாட்டு மாடுகள்

நாட்டு இன மாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் புலிக்குளம் மாடுகளைப் பாதுகாக்க ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சட்டசபையில் அறிவித்திருப்பது புலிக்குளம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறார்கள் புலிக்குளம் கிராம மக்கள்.


சிவகங்கை மாவட்டம். மானாமதுரை- பரமக்குடி செல்லும் சாலையில் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது புலிக்குளம் கிராமம். வானம் பார்த்த பூமி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் சீமைக்கருவேலமரங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றது. ஊருக்குள் நுழைந்ததும் கண்மாய் கரை மேல் ஓலை தட்டி போட்டு வெயில் கொடுமை சமாளித்தபடி இருக்கும் வயதானவர்கள்தான் அதிகம்.

அவர்களிடம் புலிக்குளம் மாடு இனம் எப்படி உருவானது அதற்கான பூர்வீகத்தை சொல்லுங்களேன்னு என்றதும் கடகடவென பேச ஆரம்பித்தார் லிங்கம்.

”புலிக்குளம் மாடுகள்தான் வீரமானது. ஓரிஜினல் நாட்டுமாடு. அந்தக்காலத்துல இந்தப் பகுதியெல்லாம் உடம்(கருவேலம்) மரம் சூழ்ந்த பகுதி. அப்ப கண்மாய்ல காட்டு மாடுகள் அதிகமாக இருந்துருக்கு. புலி இந்த மாட்டை வேட்டையாட பாய்ஞ்சிருக்கு. இந்த மாடுகளுக்குக் கொம்பு மான் கொம்பு மாதிரி இருக்கும். கொம்புலேயே குத்தி கொன்னுபுடுச்சுடுச்சு. அதுனாலதான் புலிக்குளம்னு பேரு வந்துச்சுனு எங்க பெரியவங்க சொல்லுவாங்க.

காட்டுமாடுகள் கன்னுகுட்டிகள் ஊருக்குள்ள ஓடி வந்துரும்மாம். அப்படி வந்த மாடுகளைப் பக்குவப்படுத்தி பாட்டுபாடி எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சினைக்கு விட்டுருக்காங்க. அப்படி உருவானதுதான் புலிக்குளம் மாடு. இந்த மாடுகள் இயற்கையாகவே கோபமாக இருக்கும். அதே நேரத்தில் குணமாகவும் இருக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் வகையறா பேரு இருக்கும். பேச்சி வகையறா மாடுனு சேத்தான் வகையறா மாடுனு நாங்க ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சுருவோம். அதே மாதிரி பேரு சொல்லி கூப்பிட்டா எங்க முன்னாடி வந்து நிக்கும். நாங்க மாடு மேய்க்கப் போறோம் . ஒரு கிலோமீட்டருக்கு அப்பால இருந்தாலும் என் துண்டை கம்புகுச்சியில கட்டிட்டு விசில் அடிச்சா போதும். ஆயிரம்மாடா இருந்தாலும் ஒரே இடத்துக்கு வந்துரும். அந்த அளவு குணம் படைத்தது எங்க ஊர்மாடு.

எங்க மாட்டுக்குக் கிழக்கத்தி மாடுனு பெயர் உண்டு. இந்தப் புலிக்குளம் கிராமத்துக்குத் தாய் கிராமம் புத்தூர் கிராமம். புலிக்குளம் பக்கம் மாடுகள் மேய்ச்சலுக்கு வந்தால் பால் அதிகமாக கறந்துச்சு. கன்று தெளிவா இருந்துச்சு. அதான் இங்கேயே குடியேறிவிட்டோம். இந்த மாடு சைவத்தை மட்டுமே சாப்பிடும்.

இந்த மாடுகள் பால் அதிகம் கறக்காது. மிஞ்சி போனால் ஒன்னறை லிட்டர் பால் கொடுக்கும். பால் ருசியாக இருக்கும். உடம்புக்கு வலிமையைக் கொடுக்கும். குறிப்பா நோய் வராது. நாங்க குடிக்கிறதுக்கு தயிர் செய்ய மட்டும் பால் கறப்போம். மத்த பாலெல்லாம் கன்னுக்குட்டிதான் குடிக்கும். இந்தப் பாலை வெளியில விற்கக் கூடாது என்பதை கிருஷ்ணபரமாத்மா உத்தரவாக நினைக்கிறோம். எங்களைத்தவிர வேற்று ஆட்கள் யாரவது மாட்டுகிட்ட வந்தாங்கனா ஒரே முட்டா முட்டித் தூக்கி எறிஞ்சுரும். பால் எங்களைத் தவிர வேறு யாராலும் கறக்க முடியாது. நாங்க அதுக்கு ஏத்த மாதிரி தடவிக்கொடுத்து பாட்டுப் பாடினாத்தான் சிவனேனு நிக்கும். இல்லாட்டி கொம்புல நம்ம பதம்பாத்துரும்.

எவ்வளவு பெரிய மழை வெயில் தாங்கும் சக்தி எங்க மாட்டுக்கும் எங்களுக்கும் உண்டு. பகல்ல கட்டிப்போட்டு வளர்க்க முடியாது. காலையில கிளம்பிடும். எங்க ஊர் காசிப்பாண்டிக்கிட்ட மட்டும் ரெண்டாயிரம் மாடு இருக்குது. குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்துலயும் குறைஞ்சது ஐந்நூறு மாடு இருக்கும். இப்ப எங்க ஊர்ல அஞ்சாயிரம் மாடு இருக்கு என்கிறார் பெருமூச்சு விட்டபடி

அதே ஊரைச்சேர்ந்த தேன்மொழி பேசும் போது…

“மழைத் தண்ணி இல்லாததுனால மாட்டைப் பராமரிக்க முடியாமல் வித்துட்டோம். எங்க காலத்தப் போக்குறது இவுங்கதான் . இப்ப எங்க வீட்டு பொம்பளபிள்ளைக்குக் கல்யாணம். பையன்னுக்கு காலேஜ் ஃபீஸ், வீடு கட்ட வட்டிக்கு வாங்குன கடனை அடைக்க இதுயெல்லாத்துக்கும் எங்க மாடுகதான் கைகொடுக்கும் மகாலெட்சுமி. எங்க யாதவர் சமூகத்துல வீட்டப் பாத்து பொண்ணு கொடுக்கல .மாடு எவ்வளவு இருக்குனு பாத்துதான் பொண்ணு கொடுத்தாங்க. 




மாடு மேய்க்க ஆள் கிடைக்கல. எங்க பிள்ளைகள் எல்லாம் படிக்கப் போயிருச்சுக. மாடு மேய்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. கூலிக்கு ஆள் பிடிச்சுட்டு வற்றோம். வருசத்துக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கொடுக்குறோம். அவனுக்கு சாப்பாடு காலுக்கு செருப்பு துணிமணி மத்த சவரட்டனை(வசதிகள்) தனி. ஆனால் ஆறுமாசம் கூட கூலி ஆளு இருக்கமாட்டேங்கிறான். கொடுத்தப் பணத்துக்கு பஞ்சாயத்து பண்ண வேண்டி இருக்கு. தினக்கூலினா ஒரு நாளைக்கு ரூ300 கொடுத்து குவாட்டர் பாட்டில் கொடுக்க வேண்டியிருக்கு.

விவசாய நிலங்களில் மாடுகளைக் கொண்டு போய் கிடை போடுவோம். இந்த மாட்டோட சாணி சிறுநீர் ரெண்டுமே நல்ல உரம். அதே நேரத்தில கிருமி நாசினியாகவும் செயல்படுறதுனால பூச்சிக் கடி இல்லாம விவசாயம் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு நாளைக்குக் கிடைபோடனும்னா இவ்வளவுனு பணம் வாங்கிட்டு தான்போடுவோம். இந்த வருமானத்தை வச்சு எங்க பொழப்பு ஓடுது. இராமநாதபுரம் சிவகங்கை திருநெல்வேலி மதுரை விருதுநகர் இந்த மாவட்டங்களில் மட்டும்தான் நாங்க கிடை போடுவோம். வேற மாவட்டங்களுக்குப் போக மாட்டோம். மாட்டுச் சாணிகளைச் சேகரிச்சு வச்சுருந்தா கேரளாக்காரவுங்க ஒரு லாரி இருபதாயிரம் கொடுத்து வாங்கிட்டு போவாங்க.

ஜல்லிக்கட்டுத் தடை வந்ததில் இருந்து எங்க பொழப்பு ரொம்ப கஷ்டமாக போச்சு. இனி மாடுகளை வச்சுருக்குறதுனால புண்ணியமில்லைனு விற்க ஆரம்பிச்சோம். அடிமாட்டை கேரளாவுக்கு அனுப்பிட்டு இருந்தோம். அதுக்கும் மத்திய அரசு தடைனு சொன்னாங்க. சுத்தமாக எங்க குடும்பமே நொடிச்சு போச்சு. அடிமாடுகளைக் கேரளாவுக்கு அனுப்புவோம். ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்புக்கு எங்க கிட்டதான் கன்னுகுட்டி வாங்கிட்டு போவாங்க. முன்னாடி விலை கொறச்சு போச்சு. இப்ப ஜோடி இருபதாயிரத்துக்கு மேல போகுது. எங்க மாடுதான் ஜல்லிக்கட்டுல பார்த்தீங்கனா மண்ணை வாருறதும் கோபத்தோட சீறிப்பாயுறதுமாக இருக்கும். வேற எந்தமாடும் இப்படி இருக்காது என்கிறார் பெருமையோடு.

மாடுமேய்த்து ஓய்ந்த நிலையில் ஓய்வெடுக்கும் பெரியண்ணனிடம் பேசும் போது…

“ஆறு மாசம் மலையும் ஆறுமாசம் விவசாயக்காட்டுலயும் திரிவோம். இப்ப மலையில மாடு மேய்க்க அனுமதி சீட்டு கொடுக்க மாட்டீங்கிறாங்க. அந்த வசதிய அரசாங்கம் செஞ்சு கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும். ஆயிரம் மாடு இருந்தாலும் எந்த வகையறா மாடுனு கண்டுபிடிக்க முடியும். மழை வெயில் பாம்பு பூச்சிகளுக்கிடையே நாங்க உயிரைப் பணையம் வச்சுதான் இந்த மாடுகளோட வாழ்க்கை நடத்துறோம். எங்க மாட்டு கழுத்துல கட்டியிருக்கிற வெங்கல மணி கும்பகோணத்துல இருந்து வாங்கிட்டு வருவோம்.

காங்கேயம், உம்பளாச்சேரி, பர்கூர், ஆலம்பாடி, புலிக்குளம் இவைகள்தான் நாட்டு மாடுகள். இத்தனை மாடுகள் இருந்தாலும் புலிக்குளம் மாடுகள்தான் வீரம் செறிந்த மாடு. இதுதான் ஜல்லிக்கட்டுக்கு உகந்த மாடு. எங்க ஊர்ல அரசு புறம்போக்கு நிலம் இல்லை. ஆனால் எங்க ஊர் விவசாயிகள் ஆராய்ச்சி நிலையத்திற்காக நூறு ஏக்கர் நிலம் கூட தருவதற்கு தயாராக இருக்கிறார்கள்” என்றவர் 


”காடு வெளஞ்சு என்ன மச்சான் மாடுவெளஞ்சு என்ன மச்சான் நம்ம கையும் காலும் காஞ்சதுதான் மிச்சம்னு” பாட்டு மூலமாக வறட்சியையும் வளர்ச்சியையும் அழகாக பாடிக்காட்டினார்.


Saturday, July 29, 2017

கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !

தஞ்சையை ஒட்டிய கிராமத்தில்
ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்
ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும்.


“வரப்பே தலையன வயக்காடே பஞ்சுமெத்த” இதுதேன் கீதாரிங்க வாழ்க்க. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தோணலிங்களே” என்று ஒற்றை வரியில் கீதாரிகளின் வாழ்க்கையை சுருக்கினார் தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்.


ஐயா! நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலையே?


சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிதே சொந்த ஊரு. எங்க ஊர ஒட்டிய கிராமங்கள்ல கோனார் சாதிக்காரவுக அதிகம். அவக தொழிலே ஆடு மாடு மேய்கிறதுதேங். கோடையில ஆறு மாசகாலம் தஞ்சாவூரு மாவட்ட பகுதிய சுத்தி உள்ள நெலத்துல ஆடு மாடு மேய்ப்பாக. மீதி ஆறு மாசம் புதுக்கோட்டக் காட்டுப் பகுதிக்கு போயிடுவாக. ஆடு மாடு இல்லாதவுக, காணி(அளவு) காடு வச்சுருக்கவுக சிலபேரு ஊரோட இருப்பாக. ஊருக்கு தேவையிண்டா மட்டுந்தே போவோம். அதாவது சொந்தமுண்டு சொல்லிக்க ஊரு இருக்கும் ஆனா குடும்பம் நடத்துறது என்னவோ வெளியூருலதேன்.


ஏனுங்கையா ஒரே எடத்துல மேய்க்காமெ ஆறு மாச காலத்துக்கு ஒருக்க எடத்தை மாத்துரிங்க?


எங்க ஊரு பக்கம் வறட்சி அதிகம். ஆடு மாடுக மேய்க்கறதுக்கான காடு கழனி கெடையாது. ஆத்துப் பாசன பகுதில அறுப்பு முடிஞ்சு மறுக்க ஆத்துல தண்ணி வரும்வர கழனிக சும்மாத்தேன் கெடக்கும். மேச்சலுங்கு தோதுவா நெலமும் ஆடு மாடுக குடிக்க குளம் குட்டையும் இருக்கும். அங்கனக்குள்ளையே மேச்சு வெள்ளாமெ நெலத்துக்கு கெடையும் கட்டுவாக. ஆத்துல தண்ணி வந்து வெள்ளாமெ தொடங்கிச்சாங்காட்டி மந்தைய புதுக்கோட்டைக்கி ஓட்டிடுவாக. அங்கெ அரசு பாரஸ்ட் மலைக்காடு இருக்கு. எத்தன மழை பேஞ்சாலும் சேறு சகதி இல்லாம மேச்சல் இருக்கும். பகல் பொழுது மலையில மேச்சுட்டு ராத்திரியானா கீழ ஓட்டியாத்துருவாக. (பருவமழை காலத்தில் மலை பகுதியும் கோடை காலத்தில் சமவெளி பகுதியும் கிடை மந்தை கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதியாகும்.)


ஆடு மேச்சு கிடை கட்டும் உங்க தொழில் முன்னைக்கி இப்ப எப்படி இருக்கு?


என்னோட எளவட்ட காலத்துல ஒத்தாளு 500 ஆடுகளோட ஊடாடுவே. அப்பெல்லாம் அறுப்பு முடிஞ்சு எக்கண்டமும் சும்மாத்தேங் கெடக்கும். என்னப்போல முப்பது கீதாரி குடும்பம் இந்த ஊருல தங்கி ஆடு கெட போடுவாக. அம்புட்டு ஆடுகளுக்கு மேச்சலுக்கு எடமிருக்கும். இருவது வருசமாத்தேன் இங்குட்டு போரு (ஆழ்துளை கிணறு) போட்டுட்டாக. திட்டுத்திட்டா வெவசாயம் செஞ்சுருக்காக. பயிறுக்கு போகாமெ ஆடுகள மடக்கி சோலி பாக்க வாய்க்கல. எங்குட்டு திருப்புனாலும் ஊரச் சுத்தி இதே நெலமதேன்.

ஆடுகளுக்கு முன்னப்போல மேச்ச நெலமுண்டு ஒன்னு இல்லிங்க. தண்ணி இல்லாமெ ஆடுக எறப்பு வாங்குது. குளம் குட்ட எங்குட்டு திரும்புனாலும் வறண்டு கெடக்கு. ஆடு மேஞ்சு முடிச்சு பட்டிக்கி திருப்பியாந்தா விடிய முட்டும் படுத்துக்கும். இப்ப அண்டையில உள்ள பயிருக்கு போயிருதுக. பொழப்புக்கு வந்த எடத்துல கீதாரி பயக வெள்ளாமைய அழிச்சுபுட்டாகன்னு ஒரு சேதி வந்துரப்படாதுல்ல. அதுக்காக ஆடுகள சுத்தி இரும்பு கம்பி அடிச்சி வல(லை) கட்டனும். பாலூட்டு குட்டிகள வெய்யிலு அண்டாமெ பாதுகாக்க கூடாரம், நாங்க படுக்க கட்டிலு இதையெல்லாம் அடுத்த கெடகட்டுற எடத்துக்கு தூக்கிட்டு போக வண்டி செலவுன்னு….. ரொம்பவும் செரமமாத்தே இருக்குங்க.

ஐநூறு ஆடு நின்ன எடத்துல 250 ஆடுகதே இருக்கு. முப்பது குடும்பம் வந்த எடத்துல 4 குடும்பந்தே வந்துருக்காக. 250 ஆட்டுக்கு 7,000 ரூபா கூலி குடுத்து ஒரு மேச்ச ஆளு வச்சுருக்கேன். இது அம்புட்டும் சொந்த ஆடுக அதுனால கூலியாள வச்சு மேய்க்கேன். பத்து இருவது ஆடு வச்சுருக்கவுகளும், மேச்சலுக்கு வர்ர ஊருல சிலபேரும் எங்கக்கிட்ட வாரத்துக்கு ஓட்டி விடுவாக. கூலி கெடையாது ஆடு ரெண்டு குட்டி போட்டுச்சாங்காட்டி ஒன்னு நமக்கு. ஒன்னு அவுகளுக்கு.

ஆடு வளர்ப்புல லாபமா? கிடை கட்டுறதுல லாபமா?


“ஆடு ஊடாடாமே காடு விளையாதும்பாக”. ஆட்டுக் கெட உரந்தே ஒசந்ததா இருந்தது ஒரு காலம். இப்ப ரசாயன ஒரத்த சக்கரக் கணக்கா வயக்காட்டுல அள்ளி கொட்டுறாக. ஆட்டுப் புளுக்க மூத்தரத்தோட அருமெயெல்லாம் அத்துப் போச்சு. மணலு, வண்டலு, அதிகம் உள்ள கழனிக்கி ஆடு மாடு ஒரமும், கிளாரு மண்ணுக்கு (சுண்ணாம்பு மண்) வாத்து ஒரமும் இடுவாக. நெலத்துக்கு தக்கன வெதையும் ஒரமும் நம்மகிட்டேயே இருந்துச்சு. இப்ப வெதையோட சேத்து ஒரத்தையும் இறக்குமதி பன்றாக. பூச்சி மருந்து கள(ளை)க் கொல்லின்னு, கண்டதும் போட்டாத்தே அதுவும் வெளையுது.


“ஆடு காப்பணம், புழுக்க முக்காப் பணம்னு” சொன்னதெல்லாம் அந்த காலம். இப்ப ஆரும் பெருசா கெட கட்டுவாக கெடையாது. போன வருசம் 250 ஆடு ஒருநா(ள்) கெட கட்ட 300 ரூபா வாங்குனேன். இந்த வருசம் மழத்தண்ணி இல்லன்னு 250 வாங்குரேன். ஒருநா வருமானம் ஒரு வார வெஞ்சனம்(காய்) வாங்க பத்தமாட்டேங்குது. பொறவு மேச்சகாரனுக்கு டீ, சாப்பாடு, வெத்தலபாக்கு, வாரத்துக்கொருக்க பாட்லு இதுக்கெ கெடகூலி பத்தாது. ஆட்டுல நாலு காசு வந்தாத்தே உண்டு. ஒரு ஆடு அஞ்சு அல்லது ஆறு ஆயிரத்துக்கு போகும். வருசத்துக்கு ரெண்டு குட்டி போடும். அத நல்லா மேச்சு குட்டிக்கு பால்குடுத்தா ஆறு மாசத்துல வளந்துரும். இதுலதே குடும்பம் படிப்பு கல்யாணம் எல்லா செலவும்.


கீதாரிகள் ஆடுங்களோட ஊர் ஊரா போறதா சொல்றீங்க, பிள்ளைகள எப்படி படிக்க வைக்கிறீங்க?

எங்க தொழிலே ஊரு ஊரா போறதுதேன். எங்குட்டு பிள்ளைகள ஒரு நெலையா படிக்க வைக்கிறது. ஆடு மாடுகள வாரத்துக்கு மேய்க்காமெ சொந்தமா வச்சு பண்ணையம் பாத்தவுக பிள்ளைங்க காசு, படிப்பு, வேலையின்னு இருக்காக. எங்கப்போல சிறுவ ஆடு வச்சுருக்கும் கோனாருக ஆசப்பட்டு பிள்ளைகள படிக்க வச்சாலும் பள்ளிக்கூடத்த தாண்ட முடியல. கீதாரி தொழிலும் சரிஞ்சு போச்சு. மேல படிக்க முடியாமே டிரைவரு, கண்டெக்டருன்னு வேலைக்கி போறாக.

இந்த ஊருல முப்பது வருசமா எனக்கு பழக்கம். அண்ண வீட்டு தோப்புலதே கூடாரம் போட்டு தங்கிக்கிடுதேன். அம்மி, ஒரலுன்னு சமையலுக்கு தேவையானத கொடுப்பாக. காசு பணமெல்லாம் அவக கிட்டதே குடுத்து வச்சுருப்போம். தாயா பிள்ளையா பழகிகிடுதொம். எங்க மாமா செத்தப்ப இந்த அண்ணெந்தே சாவு கோடி போட்டாக. எங்க வீட்டு நல்லது கெட்டது அவுக இல்லாம நடக்காது, அவுக வீட்டு நல்லது கெட்டது நாங்க இல்லாம நடக்காது.

அந்த பழக்கத்துல பெரியவெ(ன்) இங்கதே ஆறு வருசமா படிக்கிறேன். இந்த வருசத்தோட படிப்பு முடியிது. நாங்க இருக்குற ஆறு மாசம் எங்க கூட இருப்பேன். நாங்க புதுக்கோட்ட பக்கம் போனபொறவு இவக வீட்டுல தங்கிக்கிருவேன். அவுக பிள்ளப்போல பாத்துக்கிருவாக. சின்னவென் ஊருல இருக்கேன். எங்க காலத்தோட இந்த தொழிலு முடிஞ்சுரும் பிள்ளைங்க இனி செய்யாதுக.

ஊருல யாரு பையன பாத்துப்பாங்க? ஆடுங்கள தவிர எதுனா சொத்து இருக்குங்களாய்யா?

காக்காணி நெலமிருக்கு. அத நம்பி நாலு பேரு என்னத்த சாப்புட முடியும். ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும். இருக்கவுகதேன் ஒத்து உணர்ந்து வேலைய பிரிச்சுக்குறனும். எங்கக்கா ஊருல எம்பையனையும் நெலத்தையும் பாத்துக்குறாக. நா அவுக ஆடுகள பாத்துகிடுதேன். ஆடுக நெறையா நின்னா தனிதனியா கெட போடுவாக. ஆடுக கம்மிங்கறதால சேந்து மேச்சுகிடுதோம்.




ஆட்டு தலையில கலர் கோடு போட்டுருக்கே வேற கிடை ஆட்டோட சேந்துருச்சின்னா கண்டுபிடிக்கற அடையாளமா?

வெய்யிலு காலம் நோயி வருமுண்டு மருந்து குடுத்துருக்கேன். மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கே. மத்த கீதாரி ஆட்டோட கலந்து மேய்க்க மாட்டோம். எல்லாருமே தனிச்சுத்தேன் விடுவோம்.

செம்மறியாட்டு கூட்டத்துல நாளு வெள்ளாடும் நிக்குதே எதுக்குங்கையா?

செம்மறியாடு சாஞ்சா சாஞ்சபக்கம் போகும். போன வழி திரும்பி வரத்தெரியாது. வெள்ளாடுதே வழிகாட்டி ஆடுக. அதுக்கு அறிவு சாஸ்த்தி பயிரு பச்சைக்கி போனா சத்தம் போட்டா திரும்பிரும். பாம்பு, விலங்கு எது வந்தாலும் உசாராயி சத்தம் கொடுக்கும். இதுகளுக்கு ஒன்னு தெரியாது. வெள்ளாடு இல்லாமெ செம்மறியாட மேச்சலுக்கு ஓட்ட மாட்டாக.

பாம்பு, விலங்கு வந்தா என்ன செய்வீங்க?

கோனா(ன்) கோலெடுக்கும் போதே வெசமருந்து கூடவே எடுத்துட்டு போவான்ம்பாக. பாம்பு தீண்டிட்டா ஆடு கத்தும் அத பாத்து கால கீரிவிட்டு மருந்து கொடுப்போம். ஆடுகள கூட்டமா பாக்குற காட்டு வெலங்குக தானா ஒதுங்கி போயிடும். வாகனத்துல அடிபட்டா எங்க வீட்டுக்காரம்மா உப்புக்கண்டம் போட்ருவாக.

இரவு நேரத்துல ஆடுகளோட தனியா படுத்துருப்பிங்க திருட்டு பயம் எதுவும் இருக்குங்களா?

ஆடு களவாடுறது உண்டுதேன். மோட்டார் பைக்குல ரெண்டு ஆட்ட பொத்தி போட்டுகிட்டு போயிருவாக. ஆடு புடிக்கிறாகன்னு தெரிஞ்சாலும் எதுவும் செய்ய முடியாது. ஆயிதத்தோட அஞ்சாறு பேரு வந்துருப்பே தனி ஆளா நிண்டமுட்டா போட்டு தள்ளிருவானுக. எங்களுக்கு ஆடு மேய்ப்பர் யாதவ சங்கம் இருக்கு. ஆடுதுறை வரைக்கும் எங்க ஆளுக பட்டி போட்டு ஆடு மேய்க்கிறாக, அப்புடி எங்க ஆளுக மூலியமா கேசு குடுத்து கண்டுபிடிச்சுகிடுவோம்.

ஒரு நாளு வருசத்துக்கு முன்னால இங்குட்டு(தஞ்சை) உள்ள கள்ளர்மாரு(கள்ளர்) சாதிக்காறவுக ஆட்ட களவாண்டுபுட்டாக. புதுக்கோட்ட பக்கந்தே வெள்ளாமெ வெளச்ச இல்லாம களவாடுவாக. இந்த பக்கமும் அப்படி செஞ்சுபுட்டாக. ஆட்டுக்காற சித்தப்பும், மேச்சக்கார பயலும் படுத்துருந்தாக. வண்டி வச்சு ஆடுகள ஏத்துனத பாத்துட்டு கையில இருந்த அருவாள வீசிபுட்டாரு கீதாரி. காலு நரம்புல பட்டு சுருட்டிகிட்டு விழுந்துட்டாங் களவாணிப்பய. பொறவு மந்திரி வைத்திலிங்கத்துக்கு(அ.தி.மு.க) வேண்டப்பட்டவன்னு சொல்லி கேசல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லிபுட்டாக.

இந்த ஊருக்காரவங்க உங்கள மரியாதையா நடத்துவாங்களா? கூலியெல்லாம் சரியா தருவாங்களா?

கோடையில கெட போட்டா, மறுக்க ஆத்துல தண்ணி வந்து வெவசாயம் பாத்து அறுப்பு முடிஞ்சுதே நெல்ல கெடகூலியா குடுப்பாக. கிட்டத்தட்ட ஒரு வருசம் ஓடிடும். ஆனா மொறையா குடுத்துருவாக. இப்பல்லாம் ஒடனே பணமா குடுத்துருவாக. என்ன ஒன்னு பத்து கெட போட்ட எடத்துல ஒரு கெடைக்கி உண்டான கூலிய தள்ளிக்க கீதாரிம்பாக. தாயா பிள்ளையா பழகிட்டு மறுக்க முடியாது. திருவிழா வருது உங்க படியா ஏதாவது கொடுங்கண்டு உரிமையா கேப்பாக. இந்த ஊருல ஆறு மாசம் ஆடு மேச்சுகிடுதோ நமக்கும் பங்குண்டுன்னு கையில கெடச்சத குடுப்பேன். சாமிக்கி குடுத்தாதானுங்களே மழதண்ணி பேஞ்சு பயிர் பச்ச மொழைக்கும் ஆட்டுக்கு மேச்சலிருக்கும்.

சாமிக்கு காசு கொடுத்தும் மழை தண்ணி இல்லாமெ ஊரே வறண்டு கெடக்கே சாமி ஏமாத்திடுச்சாய்யா?

ஆமான்னும் சொல்லாமல் இல்லைன்னும் சொல்லாமல் அழகாக சிரித்தார்.

– நன்றி வினவு
http://www.vinavu.com/2017/06/29/life-of-ilayangudi-sheep-farmers-in-thanjavur/

திருச்செந்தூர் சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாய சுடலைமாடசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 10 மணிக்கு கும்ப பூஜையை தொடர்ந்து 11 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும் பின்னர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகாஅபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகாசபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் உள்பட பலர் செய்திருந்தனர்.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்-முனைவர் கே.கருணாகரப்பாண்டின்வரலாற்று ஆய்வாளர்

கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ., தொலைவில் கட்டாளங்குளம் கிராமம் உள்ளது. இங்கு அழகுமுத்து கோன் வாழ்ந்த அரண்மனை சிதலமடைந்து உள்ளது. அழகுமுத்து கோனின் வீர வரலாறு ஏட்டிலே புதைந்து காலப் போக்கில் இளைய தலைமுறைக்கு ஏதும் தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, அந்த மாவீரன் பற்றி 'வம்ச மணி தீபிகை' என்ற பழம்பெரும் வரலாற்று நுால் எடுத்துக் கூறியுள்ளது. இந்த நுாலில் கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து எட்டையபுரம் எழுத்தாளர் இளசை ராஜாமணி, 'சுதந்திர வீரன் அழகுமுத்துயாதவ்' என்ற புத்தகத்தின் வழியாக முதல் முதலில் வெளிக்கொணர்ந்தார்.
தளபதி அழகுமுத்து கோன் :'வம்ச மணி தீபிகை' புத்தகத்தின் கூற்றுப்படி, அழகுமுத்து கோனுக்கு 'சேர்வைக்காரன்' என்ற பட்டம் உண்டு. 'சேர்வைக்காரன்' என்பது எட்டையபுரம் மன்னரின் படையின் முக்கிய தளபதிகளுக்கு கொடுக்கும் சிறப்பு பட்டம். மதுரையிலிருந்து அழகப்பன் சேர்வைக்காரன் (அழகுமுத்து கோன்), தன் உற்றார், உறவினர்களுடன் புறப்பட்டு செமப்புதுார் வந்தார். அங்கு மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியால் எட்டையபுரம் சென்றார். எட்டையபுரத்தை ஆண்ட மன்னர் ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர், அழகுமுத்து கோனை எட்டையபுரத்தின் முக்கிய தளபதியாக நியமித்தார்.
ஒடுங்கிய எதிரிகள் :அழகுமுத்து கோன், அவருடன் வந்த வீரர்கள் குடியேற வசதியாக எட்டையபுரம் மன்னரால் கட்டாளங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள சில கிராமங்களும் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 500 பொன் வருமானம் உள்ள சோழாபுரம், வாலாம்பட்டி, மார்த்தாண்டம்பட்டி ஆகிய கிராமங்களும் கொடுக்கப்பட்டன. அழகுமுத்து கோன் சிறந்த போர் திறமையுள்ள வீரனாகவும் எட்டப்ப மன்னருக்கு நேர்மையுடன் கூடிய சேர்வைக்காரனாகவும் பணியாற்றினார்.
எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். மன்னருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய கூட்டத்தில் இளவரசர் குமார எட்டு, அமைச்சர் ராமநாதபிள்ளை, அழகுமுத்து கோன், குமார அழகுமுத்து போன்றோர் இருந்தனர். 'ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?' என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர்.
போர் முரசு ஒலித்தது :கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான். வீரன் அழகுமுத்து கோன், எட்டப்ப மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து மன்னர் எட்டப்பர் படைக்கு ஆள் சேர்த்தார். மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன் பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்க வைத்தார். மறுநாள் மாவேலியோடை என்ற இடத்திற்கு அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர். எட்டையபுரத்தை முற்றுகையிட்ட கான்சாகிப், அங்கு யாரும் இல்லாததால் எட்டப்பன் வழிவந்த குருமலைத்துரை என்பவரை மன்னராக எட்டையபுரத்திற்கு நியமித்தான்.
தனது பலமிக்க பெரும் படையை ஏவி பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான் கான்சாகிப். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை 'சேர்வைக்காரர் சண்டை கும்மி' என்ற பாடல் சொல்கிறது.
''கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேருவைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதி சூரரும்வெங்கல கைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும்மாண்டுவிட்டான்''என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.அழகுமுத்து கோன் கைது இந்த கடுமையான குழப்பத்தில் சிக்கி மன்னர் படைகள் சிதறுண்டன. அழகுமுத்து கோன், அவனோடு இணைந்து கும்பினி படையை எதிர்த்தவர்களையும் கைது செய்தான் கான்சாகிப். கும்பினி படையை எதிர்த்ததற்காக எட்டப்ப மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகளை வெட்டினான் கான்சாகிப். 
கும்பினி படைக்கு எதிராக மக்கள் செயல்பட முக்கிய காரண கர்த்தாக்களான அழகுமுத்து கோன் உட்பட நால்வரை நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்று, பீரங்கியின் வாயில் அனைவரையும் கட்டி வைத்து பீரங்கியால் சுட்டபோது, இவர்களின் உடல் துண்டு துண்டாக சிதறியது. நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ்சேர்வை யாதவ், 'முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்து கோன்' என்ற புத்தகத்தில் கூறுகிறார். 
கி.பி. 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைக்கப்பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அங்கு வீர மரணம் அடைந்தவர்களுக்கு அக்கால வழக்கப்படி, ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் ஆவணி 1ம் தேதி கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கள ஆய்வின் போது கட்டாளங்குளம் ஓய்வு தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பதிவு செய்துள்ளார்.
கட்டாளங்குளத்தில் தடயங்கள் கள ஆய்வின்போது சிதிலமடைந்து இருக்கும் அழகுமுத்து கோன் அரண்மனை, அழகுமுத்து கோன் பயன்படுத்திய மூன்று வாள், ஒரு குத்து விளக்கு, சிதைந்த நிலையில் உள்ள ஒரு வெண்கொற்றக்குடை, வாரிசுகளில் ஒருவரான துரைசாமி யாதவ் வரைந்த அழகுமுத்து கோன் ஓவியம் மட்டுமே எஞ்சிய தடயங்களாக உள்ளன. இவைகளை கட்டாளங்குளம் ராமச்சந்திரன் பாதுகாத்து வருகிறார்.
தமிழக அரசு, வீரன் அழகுமுத்து கோனுக்கு அழகான மணி மண்டபம் கட்டியுள்ளது. கட்டாளங்குளத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அழகுமுத்துக்கோன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள், கும்மிப்பாடல்கள் போன்றவை காலமும், கரையானும் அழித்து விடும் முன் பாதுகாக்கப்பட வேண்டும்.

- முனைவர் கே.கருணாகரப்பாண்டியன்வரலாற்று ஆய்வாளர்மதுரை. 98421 64097

Saturday, July 15, 2017

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை

யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் வீரன் அழகு முத்துக்கோனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. முன்னதாக, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து ஊர்வலமாக யாதவ மகா சபையினர் வந்தனர். இந்த ஊர்வலம் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் முடிவடைந்தது. 

பின்னர், அங்குள்ள வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைப்பாளர் ேக.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் கே.எத்திராஜ், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் கொம்பூதி செல்வராஜ், பழனி, சேகர், பூவை சங்கர், ராமதாஸ் உள்ளிட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tuesday, July 11, 2017

கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அழகுமுத்துக் கோனுக்கு மரியாதை செலுத்த கட்டாலங்குளம் சென்ற தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவிற்க்கு தூத்துகுடி விமானநிலையத்திலிருந்து கட்டாலங்குளம் மணிமண்டபம் வரை இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.





மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தி. தேவநாதன் யாதவ் மரியாதை




மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

யாதவ் மக்கள் முன்னேற்றம் அடைய தனி நலவாரியம் அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை

சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் குரு பூஜையை முன்னிட்டு, எழும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எம்.மோகன் முன்னிலையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: 
இந்திய முதல் சுதந்திர போராட்ட அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய-மாநில அரசின் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அழகுமுத்துக்கோனை பீரங்கி வாயிலில் நிறுத்தி குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் இன்றைய சமுதாய மக்களுக்கும் தெரியும் வகையில் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். 

விவசாயம் இல்லாமல், நீர்வளம் இல்லாததால் மேய்ச்சலுக்கான இடங்களை அரசாங்கம் பாதுகாத்து, மானிய விலையில் ஆடு, மாடுகளை கொடுத்து யாதவ மக்கள் முன்னேற்ற் அடைய தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். டெல்லி முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் அல்லது திருச்சி விமான நிலையத்திற்கு அழகுமுத்துக்கோன் பெயர் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் நலன் கருதி மதுபான விற்பனையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.







அழகு முத்துக்கோன் 260–வது நினைவு தினம்: விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினத்தையொட்டி நடந்த குருபூஜை விழாவில், ‘‘விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்’’, என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குருபூஜை விழா

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் 259–வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு குருபூஜை விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு, அமைப்பின் நிறுவனர்–தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.குணசீலன், தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அவருடன் இல.கணேசன், கரு.நாகராஜன், சென்னை சி.ராஜா உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தேசிய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். குருபூஜையையொட்டி, அழகு முத்துக்கோன் உருவசிலைக்கு மலர் மரியாதை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீர முழக்கமும், விடுதலையை பேணிக்காப்போம் என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலை வீரர்களின் வாழ்க்கை வரலாறு

இதனைத்தொடர்ந்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்து, இன்றுவரை அதன் மகத்துவத்தை போற்றும் தேசம் இந்தியா தான். விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து, சிறை சென்று, தங்களது இன்னுயிரை நீத்த தியாகிகள் பலர் உள்ளனர். தமிழகத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்று, பீரங்கி முனையில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது வீரத்தையும், உயிர் தியாகத்தையும் என்றும் நம்மால் மறக்க முடியாது.

இதேபோல விடுதலைக்காக வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் உள்பட ஏராளமான வீரர்கள் விடுதலைக்காக தமது உயிரை கொடுத்து உள்ளனர். இவர்களின் தியாகத்தை நாம் என்றென்றும் எண்ணி போற்றவேண்டும். விடுதலை போராட்ட வீரர்களில் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். அதனை படிக்கும் குழந்தைகள் வாயிலாக விடுதலையின் பெருமை பேசப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் சூட்டவேண்டும்

தேவநாதன் யாதவ் கூறுகையில், ‘‘விடுதலை போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் யாதவர் இனத்தின் குலவிளக்காக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது தியாகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு, அழகுமுத்துக்கோன் பெயர் சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருவல்லிக்கேணியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்கவேண்டும்’’, என்றார்.

கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறுகையில், ‘‘டெல்லி–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கோ அல்லது திருச்சி விமான நிலையத்துக்கோ அழகுமுத்துக்கோன் பெயர் சூட்டவேண்டும்’’, என்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Friday, May 19, 2017

மாட்டு வண்டிகளில் 8 நாள் பயணம் : 300 ஆண்டு பாரம்பரிய விழா

மாட்டு வண்டிகளில் பயணம்: 300 ஆண்டு பாரம்பரியம் மறக்காத பக்தர்கள்.

அபிராமம் அருகே 300 ஆண்டுகளாக பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 8 நாள்கள் நடக்கும் திருவிழாவுக்காக, 8 நாள்கள் 200 கிமீ., துõரம் பக்தர்கள் பயணிக்கின்றனர்.

அபிராமம் அருகே அகத்தாரிருப்பிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் அண்ணன் கூடலிங்கம், தம்பி இருளப்பன், தங்கை காளியம்மனுடன், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பஞ்சம் பிழைக்க சென்று, நற்காரியங்கள் செய்ததால் அங்கேயே தெய்வமாக பிறவி எடுத்தனர். அகத்தாரிருப்பை சேர்ந்த ராஜகுலத்தை சேர்ந்த ஆதிநாராயண கோனார் வகையறாக்களை சேர்ந்த அகத்தாரிருப்பு, நரியன்சுப்பராயபுரம், காடநகரி, முதுகுளத்துõர் அருகே செல்வநாயகபுரம், காமாட்சிபுரம், பூக்குளம், ராமநாதபுரம் அருகே கொம்பூதி, சிவகங்கை மாவட்டம் ஆரியூர், லட்சுமிபுரம் உட்பட 56 கிராமங்களை சேர்ந்தவர்கள் தெய்வமாக உருவெடுத்த அண்ணன், தம்பி, தங்கைகளை குல தெய்வமாக வழக்கமாக வணங்கி வழிபடுகின்றனர்.


அண்ணன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுப்பட்டியில் கூடமுடையர் சுவாமியாகவும், கீழராஜகுலராமனில் தம்பி எத்தீஸ்வரர் பொன் இருளப்பசாமியாகவும், தங்கை ஸ்ரீவில்லிபுத்துõர் அருகே தைலாபுரத்தில் வீரகாளியம்மனாகவும் வீற்றிருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடபடும் கோயில் திருவிழாவுக்காக கமுதி அருகே அகத்தாரிருப்புக்கு முந்தைய நாள் இரவே பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்கி, மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை, 8 நாள்கள் பயணித்து, 8 நாள்கள் திருவிழாவாக சொந்தங்களுடன் 16 நாள்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து அகத்தாரிருப்பு ஹரிநாராயணன் கூறுகையில், “ 300 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது மூதாதையர்கள் பின்பற்றி வந்த இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஆதி நாராயண கோனார் வகையறாக்கள் அகத்தாரிருப்பில் முதல்நாளே வந்து தங்கி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூடமுடையர், பொன் இருளப்பசாமி, வீரமாகாளி ஆகிய தெய்வங்களை விரதம் இருந்து தரிசிக்க வருகின்றனர். எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 200 கிமீ., துõரத்தை 8 நாள்கள் பயணிக்கின்றனர். திருத்தங்கல் அருகே கிருஷ்ணா கரை சேர்ந்து, பக்தர்கள் குழுவாக தனித்தனியாக பிரிந்து, தம்பி இருளப்பசாமி, தங்கை வீரமாகாளிக்கு 5 ஆம் நாள் இரவு கிடாவெட்டி அன்னதானம் வழங்கி, தம்பி, தங்கையை பக்தர்கள் புடைசூழ அழைத்து சென்று, அண்ணன் கூடலிங்கம் சுவாமி கோயிலுக்கு சென்று 8 வது நாள் கிடா வெட்டி விரதத்தை முறித்து, சொந்த ஊருக்கு 13 ஆம் நாள் திரும்பும் நிகழ்வு ஏற்படுகிறது. வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் சரக்கு வாகனம், டிராக்டர்களில் கூடாரம் அமைத்து கோயிலுக்கு செல்வது சமீபகாலமாக உள்ளது. இருந்தபோதிலு
ம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள் இன்னும் மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து 400 க்கும் மேற்பட்ட வண்டிகளில் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இத்திருவிழாவால், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியூர் சொந்தங்களை சந்தித்து, 16 நாள்கள் மகிழ்ச்சியுடன் வருவது நெஞ்சை வருடுகிறது”, என்றார்.

Saturday, April 15, 2017

க.செந்தாமரை IAS/IPS பயிற்சி திட்டம்

வணக்கம்.



"க.செந்தாமரை IAS/IPS பயிற்சி திட்டம்"

இந்திய குடிமைப் பணிக்கு (UPSC) தகுதியும் விருப்பமும் உள்ள நம் மாணவர்களை கண்டறிய,

 வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் உள்ளனர்.

வரும் 20.04.17 தேதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்;

 நேர்காணல் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

 அதன்பின் "சங்கர் IAS அகாடமி" நடத்தும் தேர்வில் தேர்வுபெறும் அனைவருக்கும் சென்னையில் தங்கிப்படிக்க வேண்டிய அனைத்து செலவுகளையும் 'யாதவம்' பத்திரிகை ஏற்றுக்கொள்ளும்.

இந்த அரிய வாய்பை சமூக நலன்கருதி அனைவருக்கும் தெரியப்படுத்தவும், இத்துடன் விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

Sunday, March 12, 2017

அழகுமுத்துக்கோன் சிலையை மாற்ற போராடும் கோகுலம் அறக்கட்டளை

மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மணிமண்டபம் சிலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2004 திறக்கப்பட்டது..ஆனால் தற்பொழுது அழகுமுத்துக்கோன் சிலை உடையும் தருவாயில் உள்ளது இதை பற்றி பல முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேரிலும் மனு மூலமாக தெரிவித்தோம் எந்த பலனும் இல்லை...

வருடா வருடம் ஜூலை 11 ம் தேதி அழகுமுத்துக்கோன் ககுருபூஜை தமிழக அரசால் நடத்த படுகிறது அன்றைய தினம் மட்டும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் வருவார்கள் அவர்களிடம் பலமுறை தெரிவித்துளோம்...


அடுத்த வருடம் கண்டிப்பா மாற்றுகிறோம் என்று 7 வருடங்களாக தெரிவிகிறார்கள் ஒன்றும் நடக்க இல்லை, இப்படி இருக்க முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க சொன்னார்கள் அதையும் 3 முறை கொடுத்துள்ளோம் எந்த பயனும் இல்லை

புதிய முதல்வர் திரு பழனிசாமி அவர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்தோம் அது மட்டும் இல்லாமல் அவர்கள் தலைமை அலுவலகத்திலும் கடிதம் மூலமாக தெரிவித்தோம்....அழகுமுத்துக்கோன் அவர்களின் சிலையை மற்றமால் என் உயிர் போகாது என்று சபதம் எடுத்துள்ளேன்.






இப்படிக்கு 
மூர்த்தி யாதவ்
கோகுலம் அறக்கட்டளை

Thursday, March 2, 2017

யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்: அழகு முத்துகோன் பேரவை

காளையார்கோவில்: யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அழகு முத்துகோன் பேரவை வலியுறுத்தியுள்ளனர்.காளையார்கோவிலில் நிறுவனத்தலைவர் வேல்ராஜ் கொடியேற்றினார். பேரவை ஆலோசனைக்கூட்டம் யாதவா சங்க ஒன்றியதலைவர் அங்குசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜன், செயலாளர் சுபாஷ் சேர்வைக்காரர், இளைஞரணி செயலாளர் கோகுல் சத்யா,மகளிரணிதலைவி சுமித்ரா, மாவட்ட செயலாளர் பாலா,பொருளாளர் திரு மூர்த்தி பங்கேற்றனர்.

தீர்மானங்கள்: அரசு யாதவா சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும், கால்நடை வளர்ப்புக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், ஆடு, மாடுகள் வாங்கி பராமரிப்பதற்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நன்றி தினமலர்

Sunday, February 26, 2017

பழமை வாய்ந்த இடையன்வயல் கோபாலமடம் புனரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மடம் 311 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக செப்பேடுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோபாலமடமும், இங்குள்ள ராமர் பாதம் கோயிலும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இவற்றை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பேராசிரியர் வள்ளி கூறியதாவது: ராமேசுவரத்துக்கு அன்றைய கால கட்டங்களில் சேது யாத்திரையாக பக்தர்கள் வந்து சென்றனர். போக்குவரத்து வசதிகளும், தங்கும் இடமும் அவ்வளவாக இல்லாத அக்காலத்தில் சேதுபதி மன்னர்கள் ஆங்காங்கு சத்திரங்களையும், மடங்களையும் கட்டிக் கொடுத்தனர். செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள இந்த கோபாலமடம் சுந்தரபாண்டியபட்டினத்துக்கும், தீர்த்தாண்டதானத்திற்கும் இடையே அமைந்துள்ளது. இம்மடத்திற்கு அருகிலேயே ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயிலும் உள்ளது. சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி, பெருமாள் கோன் என்பவருக்கு தீர்த்தாண்டதானத்திற்கு வடக்கில் ஒரு மடம் கட்டிக் கொள்ள அனுமதியளித்து செப்புப் பட்டயம் கொடுத்துள்ளதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே தற்போது சிதிலமடைந்து காணப்படும் இந்த இடையன்வயல் கோபாலமடத்தையும், ராமர் பாதம் உள்ள கோயிலையும் மீண்டும் புதிப்பித்து தர வேண்டும் என்பது பெருமாள் கோனின் 6-ஆவது தலைமுறையினராக தற்போது வசித்து வரும் பாண்டி, குமார் மற்றும் இவர்களது பெரியப்பா மகன் சந்திரன் ஆகியோரின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து குமார் கூறுகையில், 17 ஆம் நூற்றாண்டில் இந்த பணியினை எங்கள் முன்னோர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்றைக்கு செப்பேட்டில் உள்ளது போன்று எதுவும் இல்லாத நிலையில், எங்களது முன்னோர்களது பணியினை நாங்கள் தொடர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

நன்றி தினமணி

Tuesday, February 7, 2017

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம்

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


அகில இந்திய யாதவ மகாசபையின் சார்பில் ராமநாதபுரத்தில் யாதவ எழுச்சி மாநாடு தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் யூனியன் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் வீரண்ணன் வரவேற்று பேசினார். மறைந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.செந்தாமரையின் உருவப்படத்தை அகில இந்திய யாதவ மகாசபை தேசிய பொதுச்செயலாளர் சத்யபிரகாஷ் யாதவ் திறந்து வைத்தார். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் சத்யபிரகாஷ் யாதவ் பேசியதாவது:– அகில இந்திய யாதவ மகா சபை அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. யாதவ சமுதாயம் மற்ற சமுதாயத்துடன் ஒப்பிடும்போது பின்தங்காமல் முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் நமது உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். ராணுவத்தில் ஏற்கனவே இருந்த யாதவர் படைப்பிரிவு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். யாதவ சமுதாய மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். யாதவ மகா சபை செயல்பாடுகளில் பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். யாதவ இளைஞர் அமைப்பில் பெண்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.வேலைவாய்ப்பு முகாம்

தொடர்ந்து மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:– தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள யாதவ சங்கங்கள் அகில இந்திய சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும். ஒரே குடையின்கீழ் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 1 கோடி யாதவர்கள் அகில இந்திய சங்க உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். யாதவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேறி நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் உழைக்கவேண்டும். நாடு முழுவதும் சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் 20 கோடி யாதவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் பிளஸ்–2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்பு செலவு வழங்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் மாநில துணை தலைவர் என்ஜினீயர் கணேச கண்ணன், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், மாநில பொது செயலாளர் நீலமுரளி யாதவ், இளைஞரணி தலைவர் தினேஷ், தேசிய நிர்வாகிகள் நரேஷ், சுவப்பன்குமார், சோம்பிரகாஷ் யாதவ், சுந்தரவதனன், நாசே.ராஜேஷ், முருகானந்தம், பாலகிருஷ்ணன், குணா, பொட்டல்துரை உள்பட பலர் பேசினர்.இடஒதுக்கீடு

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். யாதவர்களுக்கு தமிழகத்தில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வீரன் அழகுமுத்து பெயரை சூட்ட வேண்டும். ஜல்லிக்கட்டை தேசிய விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும். ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். ராணுவத்தில் யாதவர் படைப்பிரிவை சேர்க்க வேண்டும். ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். யாதவர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தனித்தொகுதிகளை பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் கணேச கண்ணன் நன்றி கூறினார்.

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar