Thursday, July 10, 2014
Home »
» வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. துரை வெளியிட்டுள்ள அறிக்கை:சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 255வது ஜெயந்தி விழா தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், யாதவர் சமுதாயத்தினர் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவர்.விழா அமைதியாக நடைபெற ஏதுவாக சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு கலெக்டரால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை (11ம்தேதி) காலை 5 மணி முதல் வரும் 12 ம் தேதி காலை 5 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். ஒரு ஏடிஎஸ்பி, 11 டிஎஸ்பி உள்பட மொத்தம் 700 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts:
தத்துவஞானி திருமூலர் சைவத்திருமுறைகளில் பத்தாந்திரு… Read More
நம்மாழ்வார் திருநெல்வேலிக்கருகில் உள்ள திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில் கி.பி.9ம் நூற்றாண்டில் பிரமாதி வருடம், வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். பிறந்து பல நாட்களுக்குப் பிறகும் கண்கள் மூடிய நிலையில் தாய்ப்… Read More
கண்ணன் என்னும் கலாசார பிரவாகம் இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில்,… Read More
பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்த லாலு பிரசாத் யாதவ் Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 லாலு பிரசாத் ய… Read More
திருமழிசை ஆழ்வார் எம்பெருமானைத் தம் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்கள் பாடியுள்ளார். இவர் அவதரித்தது திருமழிசை என்ற ஊரில். தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். திருமழிசைப் பிரான் என்றழைக்கப்பட்ட இவர் எம்பெருமானின் சுதர்சன சக்கரத்தி… Read More
0 comments:
Post a Comment