Thursday, July 24, 2014
Home »
» கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை
கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை
பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள
உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம்
தமிழ் இலக்கியங்களையும் பயின்ற பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த
இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம்தொல்காப்பியம் பயின்றார்.
செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகட்கு மேல் தமிழாசிரியராயிருந்தார்.
கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்போழில் இதழாசிரியராயிருந்து சீரிய
ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார். 1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன்
என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது
அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப்
பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும்,
வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த
நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார்.
அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான்
ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு,
சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை
ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய
உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற
அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால்
நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
நன்றி
யாதவர் களஞ்சியம்
ச.சி.செல்லம்
யாதவர் தன்னுரிமைக்
பணியகம்
தட்டச்சு வேலை
மணி கோனார்
அனுப்பியவர்
மணி கோனார்,சென்னை
Related Posts:
ஆயர்களின் பிரிவுகள் ஆயர்களின் பிரிவுகள் மூன்று வகைப்படும். அவை 1.பசுவினத்து ஆயர் (கோட்டினத்து ஆயர்) 2.ஆட்டினத்து ஆயர் … Read More
கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்? பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்ட… Read More
பரமக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா இடம்: பிருந்தாவன வளாகம்,யாதவர் திருமண மாளிகை பரமக்குடி நாள்: 24-08-2014 அனுப்பியவர் திரு.ஜீவா … Read More
யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூர் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தம… Read More
கோகுலம் அறக்கட்டளை முதலாம் ஆண்டுவிழா பரிசு போட்டி கோகுலம் அறக்ட்டளை முதலாம் ஆண்டுவிழா வருகின்ற கிருஷ்ணா ஜெயந்தி அன்று நடைபெறுகிறது அது சமயம் யாதவ இளைஞர் களுக்கு மைபைல் பரிசு வழக்கப்படுகிறது குலுக்கல் நடைபெறும் இடம் சிங்கப்பூர் நடத்துபவர் இசக்கிமுத்து யாதவ் இவ்வாறு கோகுல… Read More
please change theme its not favor
ReplyDelete