Thursday, July 24, 2014
Home »
» கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளை
கி.பி.1886ஆம் ஆண்டு மார்கழித்திங்கள் ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை
பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள
உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம்
தமிழ் இலக்கியங்களையும் பயின்ற பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த
இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம்தொல்காப்பியம் பயின்றார்.
செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகட்கு மேல் தமிழாசிரியராயிருந்தார்.
கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்போழில் இதழாசிரியராயிருந்து சீரிய
ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார். 1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன்
என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது
அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப்
பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும்,
வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த
நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார்.
அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான்
ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு,
சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை
ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய
உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற
அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால்
நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
நன்றி
யாதவர் களஞ்சியம்
ச.சி.செல்லம்
யாதவர் தன்னுரிமைக்
பணியகம்
தட்டச்சு வேலை
மணி கோனார்
அனுப்பியவர்
மணி கோனார்,சென்னை
Related Posts:
Dravidian parties asked to give ticket to Yadava candidates Gokulam Makkal Katchi (GMK), pro yadava political party, demanded dravidian parties to give tickets to people of Yadava caste. A resolution was passed at the cadres meeting of the party held here on Wednesday. The reso… Read More
தேர்தலில் யாதவர்களுக்கு அதிக இடம் வழங்கக் கோகுலம் மக்கள் கட்சி கோரிக்கை திருவண்ணாமலையில் கோகுலம் மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் செங்கம் கு.ராஜாராம் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மாநிலக்க… Read More
கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டி பரமக்குடியில் யாதவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டிஅளித்தார். ஆலோசனைகூட்டம் பரமக்குடியில் யாதவ மகாசபையின் ராமநா… Read More
மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரி யாதவ சங்கம் ஆர்ப்பாட்டம் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 சதவிகிதம் பிற்படுததப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு செய்து அந்த வேலைவாய்ப்பை முழுமையாக தரவேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு வேலைவாய்… Read More
ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வலியுறுத்தல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு யாதவ மகாசபை வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இந்தச் சபையின் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை… Read More
please change theme its not favor
ReplyDelete